Pages

Sunday, 20 November 2011

சகோ.சையத் அலி உஷார்! உஷார் !! உஷார்!!!

மின்னஞ்ஞல் கிடைத்த செய்தி. உண்மை இறைவன் நன்கு அறிந்தவன்.

குறிப்பு: சகோ.அப்துல் ரஹ்மான் 98657 84876. சகோ.சையத் அலி 97881 28285 

சகோ குறிப்பிட்ட இரண்டு எண்களிலும் பேசி உண்மை என்ன என்று அறிய முற்பட்டேன். இருவரும் நமது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இறைவன் உண்மையை நன்கு அறிந்தவன்.

அஸ்ஸலாமு அலைக்கும்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசிக்கு (குற்றாலம்) போகும் வழியில் உள்ள புளியங்குடி என்ற ஊரில் பள்ளிவாசல் ஒன்று கட்டும் பணி கோஷ்டி சண்டையாலும், தான் என்ற அகம்பாவத்தினாலும் பாதியிலேயே நிறுத்தப் பட்டு இன்று கோர்ட் கேஸில் உள்ளது. 10 பேர் சேர்ந்து பள்ளி கட்ட ஆரம்பித்து பில்லர்கள் எழுப்பப் பட்டு, ஆள் உயரத்திற்கு சுவரும் எழுப்பப் பட்டு இடையில் ஏற்பட்ட கோஷ்டி பூசலினால் நிறுத்தப் பட்டு, இன்று ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளது.   இந்த ஊருக்கு சமாதானம் பேச நானே சென்ற வாரம் சென்று, சமரசம் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து அழுது கொண்டே திரும்பினேன்.   அல்லாஹ் போதுமானவன்.    நான் ஏன் இதற்கு சென்றேன்??    என்னுடைய மாமனார்  சவுதி அரேபியாவில் இருந்து அவருடைய சவுதி பார்ட்னரிடம் இருந்து 9லட்ச ரூபாய் நன்கொடையாக பெற்று, அதில் 3 லட்ச ரூபாய் இந்த ஊர் தவ்ஹீத் டிரஸ்ட்டுக்கு கொடுக்கப்   பட்டது.   இன்னும் 6 லட்ச ரூபாய் அமானிதமாக வைத்துக் கொண்டு பள்ளிவாசல் கட்டும் பணி ஆர்.டி.ஒ விசாரணை, கோர்ட் கேஸ் என்று அந்தரத்தில் நிறுத்தப் பட்டது.
சவுதிக்கும் பதில் சொல்ல முடியாமல், சண்டையிட்டு பள்ளி பற்றி எந்த கவலையுமே இல்லாமல் இருக்கும் சகோதரர்களுக்கும் இடையில் ஏண்டா? இவர்களுக்குப் போய் காசு கொடுத்து மாட்டிக் கொண்டோம் என்று மனம் வருந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். திருச்சியைச் சேர்ந்தவர்கள் தேவை இல்லாமல் எங்கோ உள்ள ஊரில் பள்ளி கட்ட உதவ நினைத்து தவறோ? இதற்கு மூல காரணம் 15 வருடங்களாக தமுமுகவின் பேச்சாளராக இருந்த சகோ.சையத் அலி. இவருக்கு ஒரு கால் ஊனம். தாங்கி தாங்கி நடப்பார். இவரும் இவரது நண்பர்கள் 4 பேரும் தான் இன்று முட்டுக் கட்டையாக உள்ளனர். அவரது தொலை பேசி 97881 28285. இவர சில மாதங்கள் முன் தமுமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப் பட்டார்.   பின்னர் டி.என்.டி.ஜே வில் சேர்ந்து 15 நாட்கள் தான் அங்கு இருந்தார்.   தற்போது தனி நபராகத் தான் உள்ளார்.   தமுமுக என்ற இயக்கத்தின் பேரால் போலிஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பேச பயிற்சி எடுத்துக் கொண்ட இவர், இன்று அந்த திறமையை பள்ளிவாசல் கட்டுவதை தடுப்பதற்கு பயன் படுத்துகின்றார். 

இந்த குழுமத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தினர்கள் தாங்கள் ஊரில் இருக்கும் போது இந்த சையத் அலியிடம்  பேசி பார்த்து உண்மை அறிந்து கொள்ளவும். மெஜாரிட்டி அதிகமாக உள்ள டிரஸ்ட் மெம்பர்கள் பக்கம் கண்ணியமானவராக நாங்கள் கண்டது, சகோ.அப்துல் ரஹ்மான் 98657 84876.

எந்த ஊருக்கும் பள்ளி கட்ட வசூல் செய்பவர்கள் கவனமாக இருந்து சரியான நபர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அல்லது ஒரு முஸ்லிம் அல்லாத இன்ஜினியரிடம் பொறுப்பை ஒப்படைத்து, வேலையை முடித்த பின்னர் ஜமாத் நிர்வாகத்தை தேர்ந்து எடுக்கலாம்.

அதிகமான தகவல் 21.11.11 திங்கள் காலை சகோ அப்துல் ரஹ்மான் தொடர்பு கொண்டார். 

அதிகமான தகவல் 22.11.11 திங்கள் காலை சகோ சையத் அலி தொடர்பு கொண்டார். அவர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொண்டு தலைப்பை மாற்றினோம். 
நன்றி :
AbuFaaiz shanawas.a@gmail.com 

No comments:

Post a Comment