Pages

Thursday, 17 November 2016

டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது: ரிசர்வ் வங்கி

ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் விதிக்கப்படும் சர்வீஸ் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 500 ரூபாய் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள 500 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய பணத்தை மற்றிக்கொள்ள வங்கிகள், ஏ.டி.எம். முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
ஒருநாளைக்கு குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே பெற்றுக் கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment