Pages

Friday, 1 February 2019

இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே


இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே

وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ


சுப்ஹானல்லாஹ்!

இறைவனிடம் உதவி தேடு என்று நம்மை படைத்த நாள் முதல் சொல்கிறான், நாம் தான் விளங்காமல் அப்படி செய்திருக்கலாம்  இப்படிச் செய்திருக்கலாம் என்கிறோம்.  அந்த வார்த்தை தவறானது  என்பதைச் சொல்லுவதற்கு முன்னால் இறைவன் இப்படிச் சொல்லச் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மூலம் நமக்குச் சொல்லுகிறான். 

மேலும் குர் ஆனில் இந்த வார்த்தைக்கு மிகுந்த பொருளுடன் நம்மை நோக்கி இறைவன் வேண்டச் சொல்வதில் சிலதைக் காண்போம்.

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

 وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏ 

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

 اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ

பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.


اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்;




No comments:

Post a Comment