மூலாதார நூல்களின் அடிப்படையில்
##################
மு ஹ ம் ம த்
- صلى الله عليه وسلم -இறைவனின் இறுதித் தூதர் அவர்களது வாழ்வு
##################
@
மார்டின் லிங்ஸ் 1 9 8 3
( ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன் )
தமிழில்: அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
##################
@
மார்டின் லிங்ஸ் 1 9 8 3
( ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன் )
தமிழில்: அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்

குழந்தைகள் இல்லாதவராக, குழந்தைகள் பெறும் வாய்ப்புகளுமே இல்லாதவராகவே இப்றாஹீம் நபியவர்கள் இருந்தார்கள் என ஆதியாகமம் கூறுகிறது.
ஓர் இரவு இறைவன் இப்றாஹீம் நபியவர்களை அவரது கூடாரத்தினின்றும் வெளியே அழைத்து, “வானத்தை அண்ணாந்து பாரும், அங்கிருக்கும் நட்சத்திரங்களை எண்ண உம்மாலே கூடுமாயின் எண்ணும்” என்றான். இப்றாஹீம் நட்சத்திரங்களை நோக்கியவராக இருந்த போது ஓர் அசரீரி ஒலித்தது - “உம் சந்ததியும் இவ்வண்ணமாய் இருக்கும்.”*1