Tuesday, 28 February 2012

நன்னாரி ( மூலிகை ) வேர்


நன்னாரி ( மூலிகை ) வேர்


நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.


இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.

இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).

நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்



அஸ்ஸலாமு அலைக்கும்
                           இன்றைய நவீன அறிவியலறிஞர்கள் மற்றும் வானியல் வல்லுனர்கள் மேகங்களின் வகைகளைப் பற்றியும்,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை சேகரித்துள்ளனர்.  வானியல் வல்லுனர்கள் தகவல்ப்படி, மழை மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான காற்றினாலும், மேகக் கூட்டங்களினாலும் ஓன்று திரட்டப் பட்டு இணைந்து தமக்குரிய வடிவத்தைப் பெறுகின்றன.  மேகங்களின் கூட்டத்தில் ஒரு வகையான மேகமே திரள் கார்முகில்(cumulonimbus cloud) மேகமாகும்.  இந்த திரள் கார்முகில் எனும் மேகம் எங்கனம் உருவாகின்றது?  அவை எவ்வாறு மழை மற்றும் ஆலங்கட்டி (hail) மழையைப் பொழிகின்றது?  மின்னல்கள் எவ்வாறு தோன்றுகின்றன?  போன்ற பல கேள்விகளுக்கான தகவல்களை சேகரித்துள்ளனர்.

கீழ்க்காணும் படிகளின் மூலம் திரள் கார்முகில் மேகங்கள் மழையை உருவாக்குகின்றன:

Monday, 27 February 2012

19 ல் தொடரும் த த ஜ கடையநல்லூர் அவலம்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள சகோதரர்களே!

19 ல் தொடரும் த த ஜ கடையநல்லூர் அவலம்

கடந்த வருடம் பிப்ரவரி 19 ல் கடையநல்லூர் பொதுக்குழு பிரச்சினை ஆரம்பம் என்றால் இந்த வருடம் அதே நாளில் நடந்தது என்ன என்பதை விரைவில் வரும்
அதற்கு முன்பாக உங்களுக்கு சகோதரரின்(அப்துன் நாசர்) வாய்ச்சவடால்

http://soundcloud.com/hidayath/hmjtckn74lps


கடந்த 2011  பிப்ரவரி முதல் இன்றுவரை அதிகமான காரியங்களில் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூச்சுத் திணறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் சொல்லும் போது நாம் எதற்காக மத்ஹப்வாதிகளை எதிர்க்கிறோம் தெரியுமா? அவங்க அல்லாஹ், ரசூல் சொன்னதை விட்டுவிட்டு இமாம் சொன்னார்கள் என்று முக்கயத்துவம் கொடுக்கிறது தப்பு அதனாலதான் நாம் தனித்து செயல்படுகிறோம்.

நாம ஏம்மா தரீக்காக்களை எதிர்க்கிறோம் அவர்கள் அல்லாஹ்வோடு அவ்லியாக்களையும் சேர்த்து அல்லாஹ்விற்கு இணை வைக்கிறார்கள்?

நாம ஏன் தப்லீகை நெருங்கமட்டோம்கிறோம், ஏன்னா குர் ஆன் ஹதீஸோடு தஃலீம் தான் இறைவேதம் என்பார்கள்??


உண்மையில் குர் ஆன் மற்றும் நபி வழியில் திருமணம் எவ்வாறு நடத்த வேண்டும். எந்த தவற்றிற்காக இந்த சகோதரனின் திருமணம் மஸ்ஜித் மர்யமில் நடக்காமல் தடுக்கவைத்தது.  இன்ஷா அல்லாஹ் மணமகனின் விளக்கம் கேட்டு விரைவில் ....

அப்துன் நாசரின் தடுமாற்றம்

  1.  தவ்ஹீத் திருமணத்தின் குறைந்த பட்ச செலவின் அளவு என்ன??
  2. திருமணத்தில் பெண் வீட்டார் அவர்களின் உறவினர்களை அழைத்து விருந்து கொடுப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா??
  3. திருமணத்தில் பெண் வீட்டாருக்கு அல்லது வலிமா விருந்து  கொடுப்பதற்கு மார்க்கம் சொல்லுகிற அளவுகோல் என்ன??
  4. இரண்டு தரப்பினரும் ஒத்துக் கொண்டபின் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஏன் அந்த குற்றத்தை மக்கள் மன்றத்தில் சைபுல்லாஹ் கேட்டபோது எந்த பதிலும் இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.?
  5. குறைந்த பட்சம்  என்பதற்கான அளவுகோல் யார் நிர்ணயிப்பது?   


பிரிண்டர் உருவானது எப்படி

ன்று அனைத்து தொழில் வர்த்தக நிறுவனங்களிலும் கணினியுடன் பிரிண்டர்களும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன.
அச்சிடப்பட்ட காகிதங்களில் கைகளால் எழுதி ரசீதுகள் வழங்கப்பட்ட காலம் மாறி உடனுக்குடன் கணினி மூலம் கணக்கிட்டு பிரிண்டரில் அச்சிட்டுக் கொடுப்பதாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரும் பயன்படுத்தும் படியாக குறைந்த விலையிலும்  பல்வேறு துறையினருக்கும் ஏற்ற வடிவங்களிலும் பிரிண்டர்கள் கிடைப்பதுதான்.

முதன் முதலில் கம்ப்யூட்டருக்கான பிரிண்டர்  உருவானது 1938ல். சார்லஸ் கார்ல்சன் என்பவர் இதனை உருவாக்கினார். இதுவே இன்றைய லேசர் பிரிண்டர்களுக்கு முன்னோடி.
அதன்பிறகு 1953இல் வேகமாக அச்சிடும் பிரிண்டரை ரேமிங்டன் ரேண்ட் என்ற நிறுவனம் உருவாக்கியது. 1964-ல் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது போட்டி முடிவுகளை அச்சிட்டு வழங்க டாட்மேட்
ரிக்ஸ் (Dotmatrix) வகைப் பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதனை  சீக்கோ (இப்போது எப்சன்) நிறுவனம் சந்தைப்படுத்தியது. அதன் பிறகு 1970இல் இம்பேக்ட் பிரிண்டரும், 1971இல் ஜெராக்ஸ் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட லேசர் பிரிண்டரும் (Lesar Printer)வெளியிடப்பட்டன.
"முதல் கணினியை உருவாக்கிய சார்லஸ் பாபேஜ்  (Charles Babbage)  தான் முதல் பிரிண்டரையும் உருவாக்கியிருக்க வேண்டியவர். அதற்கான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தும் அதைத் தயாரிப்பதற்கான பணம் இல்லாமல் அந்த முயற்சியை அவர் கைவிட்டு விட்டார்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு 1991இல் அவரது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நுட்ப வல்லுனர் குழு ஒன்று அந்தப் பிரிண்டரை வடிவமைத்தது. 2.5 டன் எடையும், 4 ஆயிரம் உதிரி பாகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அப்பிரிண்டர் கணக்கீடுகளை கணக்கிட்டு சிறப்பாக அச்சிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு டிப்ரன்ஸ் என்ஜின் 2 (Difference Engine No.2) என பெயர் சூட்டி லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்."
1976இல் இங்க் ஜெட்(Ink-Jet) என்ற திரவ மையைக் கொண்டு அச்சிட உதவும் பிரிண்டர்களும் சந்தைக்கு வந்தன. 1977ல் எப்சன் நிறுவனம் டெஸ்க்டாப் பிரிண்டர்களை  விற்பனைக்கு கொண்டு வந்தது.
தற்போது பிரிண்டர்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பவை ஹாவ்லெட் பெக் கார்டு (hewlett packard), டிவிஎஸ் (TVS), கேனான் (Canan), சாம்சங் (Samsung), எப்சன் (Epson), லெக்ஸ்மார்க் (Lexmark) ஆகிய நிறுவனங்களாகும்.
இன்று தரத்துடனும், வேகத்துடனும் கூடிய பிரிண்டர்கள் வந்துவிட்டன. வண்ணத்தில் அச்சிட, காப்பியர், ஸ்கேனர், ஃபேக்ஸ், மற்றும் தாளின் இருபக்கமும் அச்சிட எனப் பல வசதிகளுடன் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க பிரிண்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.


நன்றி : என்கண்கள் 

ஜெராக்ஸ் உருவானது எப்படி

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனிதவாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ்இயந்திரத்தை கண்டுபிடிக்க  செஸ்டர் கார்ல்சன் எனும் தனிமனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில்செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில்அடங்காதவை வருங்கள் நண்பர்களே  நகலெடுக்கும் இயந்திரத்தின்வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவிநடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும்சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின்நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமானஇரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து  ஒன்றுடன்ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால்நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

ஜீ பூம்பா சிந்தனை

1906 ஆம் ஆண்டுஅமெரிக்காவின்கலிபோர்னியா மாநிலாத்தில்ஒரு வறுமைகுடும்பத்தில்பிறந்த செஸ்டர் கார்ல்சன்பகுதி நேரம் உழைத்துஇயற்பியலில் பட்டம் பெற்றார்தனது குடும்பத்தின்வறுமையை போக்க பலஇடங்களில் பணியாற்றினார்பேடண்ட்” துறையில்பணியாற்றிய போதுகார்ல்சனுக்கு தனதுஅலுவலகத்தில் நகலெடுக்கபட்ட கஷ்டங்களை பார்த்துநகலெடுக்க வேண்டிய தாளைஒரு கருவி மேலேவைத்தால்  ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படிஇருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார்  தனது யோசனையைஅலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கைகொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன்என்று சொன்னதிற்கு  பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம்முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என ஏளனம் செய்தனர் .

Thursday, 2 February 2012

Senthozan sha

Senthozan sha

கடையநல்லூரில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரையால் பரபரப்பு

Posted: 29 Jan 2012 06:28 AM PST

கடையநல்லூர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மக்கட்டி துராப்ஷா.இவர் இஸ்லாத்திற்கு எதிரானா கருத்துக்களை கொண்டவர்.சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக தனது இணையதளமான http://iraiyillaislam.blogspot.com/ -ல் ” லூத் என்றால் லூசு” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு அதில் நபிமார்கள் பற்றி அவதூறான செய்திகள் வெளியிட்டது இஸ்லாமியர்களின் மிகுந்த கோபத்திற்கு ஆளானார்.
இது பற்றி கேள்விப்பட்ட மஸ்ஜித் முபாரக் அமைப்பு அவரை எச்சரிக்கை செய்த்ததுடன் வெள்ளி கிழமை நடந்த ஜும்மாவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது இறைவன் பெயரால் அருக்கபடாத எந்த ஒரு மாமிச உணவையும் உட்கொள்ள கூடாது என்று அதன்படி இனிமேல் யாரும் இவருடைய கடையில் கோழி கறி வாங்ககூடாது என்று கேட்டு கொண்டது.
இது சம்பந்தமாக நாம் மஸ்ஜித் முபாரக் அமைப்பு தலைவர் சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது….
இஸ்லாத்திற்கு எதிரான கருத்து கொண்ட மக்கட்டி துராப்ஷா தனது இணையத்தில் வெளியிட்ட கட்டுரை சம்பந்தமாக தனது ஆதங்கத்தை வெளிட்டார்.
லூத் என்றொரு ”லூஸ்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரையில் இஸ்லாத்தை பற்றி தவறான புரிதலுடன் இஸ்லாத்தையும் மற்றும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் படி எழுதி உள்ளார்.
மஸ்ஜித் முபாரக் சார்பில் அவருக்கு எச்சரிக்கை செய்ததுடன், சில நாட்களுக்கு முன்பு செத்துப்போன ஆடிரைச்சி விற்பனையை தடை செய்தது போல். அல்லாஹ்வின் பெயரால் அருக்கபடாத மாமிச உணவான இவருடைய கடையில் விற்கப்படும் கோழி கறியை வாங்க கூடாது என்று அறிவுறுத்தபட்டது.
இஸ்லாத்தை பற்றி அவதூறாக எழுதும் சல்மான் ருஷ்டிக்கும் இவனுக்கும் என்ன வித்யாசம் என்ற அவருடைய வார்த்தையில் நியமான கோபம் தெரிந்தது.
இவருடைய இந்த அவதூறான கட்டுரை மற்றும் அதற்க்கு ஏற்பட்டஎதிர்ப்பை கேள்விப்பட்ட மக்கள் துராப்ஷாவின் கடையை முற்றுகையிட்டனர்.
இதனையொட்டி பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காககடையநல்லூர் காவல் நிலையத்தில் மஸ்ஜித் முபாரக் சார்பில் புகார் தெரிவிக்க பட்டு இன்று போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அதுமட்டுமல்லாமல் காவல்துறை சார்பிலும்,மஸ்ஜித் முபாரக் சார்பிலும் இனிமேல் இது போன்று இஸ்லாம் மத்தத்தை புண்படுத்துமாறு கருத்து வெளியிட கூடாது மற்றும் வியாழக்கிழமை வரை கடையை திறக்க கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பபட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பஜாரில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
நன்றி : kadayanallur.org