Thursday, 30 October 2014

யார் அவர்கள் ? யார் ?.....

அல்லாஹ் மறுமைநாளில் பேசமாட்டான்... தூய்மைபடுத்த மாட்டான் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்.. அவர்களுக்கு துன்பம்தரும் வேதனை மட்டுமே உண்டு..
யார் அவர்கள் ? யார் ?.....
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...
  • விபசாரம் புரிகின்ற முதியவர், 
  • பொய் சொல்கின்ற அரசன், 
  • பெருமையடிக்கும் ஏழை ..
  • தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை வைத்திருந்தும், அடுத்தவர்களுக்கு வழங்காமல் அதைத் தடுப்பவர்..
  • செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார்.
  • பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை அதிக விலைக்கு விற்பனை செய்பவர். 
  • தற்பெருமையால் தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.
  • ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் (பொய்) சத்தியம் செய்தவர்"....



No comments:

Post a Comment