அளவற்ற அருட்கொடைகள்!
மனிதர்களாகிய நமக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணிலடங்காதவை. இதோ சில உதாரணங்கள் :
🌸 செலவின்றி சிறுநீர் பிரிதல்!
சரியாக சிறுநீர் வெளியேறாமல் வயதான ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேறுவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு சிறுநீர் வெளியேற்றப் படுகிறது.
சில நாட்களுக்குப்பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப் படுகிறார். அவருக்கு செய்யப்பட மருத்துவத்துக் காக பில் தரப்படுகிறது. அதைப் பார்த்துவிட்டு முதியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள். இதைக் கண்ட மருத்துவர்கள், 'ஏன் பெரியவரே அழுகிறீர்கள்' என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார்.
அருகிலிருந்த உறவினர்கள் மீண்டும் கேட்க, கண் களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார் : 'நான் என்னிடம் தரப்பட்ட மருத்துவ செலவைப் பார்த்து அழுகின்றேன் என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம்,
இரு நாள்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு தொகை பணம் கேட்கின்றீர் களே! ஆனால், அருளும் அன்புமுடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறிதும் சிரமமின்றி சிறுநீர் வெளியாக்கியதற்காக இதுவரை என்னிடம் ஒரு நயா பைசாகூட கேட்டு பில் அனுப்பவில்லையே, என்று எனது இறைவ னின் அருளை நினைத்து அழுகின்றேன்!' என்றார்.
No comments:
Post a Comment