Saturday, 17 October 2015

அல் பகரா - பசு மாடு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


(நபியே!) நீங்கள் ஒருவனை கவனித்தீர்களா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்ராஹீம் "எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இறைவன்" என்று கூறியதற்கு, அவன் "நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்" என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் "(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு" எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.

No comments:

Post a Comment