ப த் ர் ( தொடர்… )
குறைஷியத் தலைவர்களுள் யுத்தம் முடிந்த பின்னர் கொல்லப்பட்டவர் அபூ ஜஹ்ல் மட்டுமல்ல. தனக்கு யுத்தப் பொருட்களாய்க் கிடைத்த கவசங்கள் சிலவற்றை மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் சென்று கொண்டிருந்தார் அப்த்-அல்லாஹ்-பின்-அவ்ப். அவ்வேளை, தன் ஒட்டகத்தை இழந்து விட்டதனால் தப்பிச் சென்று விட முடியாதவராயிருந்த பெருத்த உடம்பினரான உமையாவைக் கண்டார் அவர். உமையாவின் மகன் அலீயும் அவருடனிருந்தார். உமையா தனது முன்னை நாள் நண்பரை நோக்கி, “ என்னைக் கைதியாக எடுத்துக் கொள்ளும்; யுத்த கவசங்களைவிடப் பெறுமதியானவன் நான் ” என்றார். அப்த்-அர்ரஹ்மான் இதற்கிணங்கி, கவசங்களை எறிந்து விட்டு, உமையாவையும், மகனையும் இரண்டு கைகளில் பிடித்தவராகப் பாசறை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் எதிர்ப்பட்ட பிலால், தனது முன்னைய எஜமானரும், தனக்கு சொல்லொணாத் துயரங்கள் இழைத்தவருமான உமையாவை அடையாளம் கண்டு நின்றார். “ உமையா! ” என சப்தமிட்ட அவர், “ அவிசுவாசிகளின் தலைவன்! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” எனக் குரலெழுப்பினார். சினங்கொண்ட அப்த்-அர்ரஹ்மான், “ இவர்கள் எனது கைதிகள் ” எனக் கூறி, பிலாலை எதிர்த்து நின்றார். பிலால் விடுவதாயில்லை : “ அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” தன் வசமிழந்த அப்த்-அர்ரஹ்மான், “ நான் கூறுவதை நீ கேட்க மாட்டாயா ஓ! கறுப்புத் தாயின் மகனே! ” என்றார். இதைக் கேட்ட பிலால், தனக்கு முஅஸ்ஸின் என்ற கெளரவத்தை ஈட்டித் தந்த பலம் வாய்ந்த குரலில், “ ஓ அல்லாஹ்வின் துணையாளர்களே! அவிசுவாசத்தின் தந்தை உமையா! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும் ” எனச் சப்தமிட்டார். பல புறத்திலிருந்தும் ஓடி வந்த மக்கள் அப்த்-அர்ரஹ்மானையும் அவரது இரு கைதிகளையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது வீசப்பட்டதொரு வாள் அலீயைக் கீழே வீழ்த்தியது. ஆனாலும் அவர் இறந்து விடவில்லை. அப்த்-அர்ரஹ்மான், உமையாவின் கையை விடுத்து, “ நீரே தப்பித்துக் கொள்ளும் ; அப்படியும் நீர் எப்படித்தான் தப்ப முடியும்? இறைவன் பெயரால் என்னால் உமக்கு எதையும் தர முடியாதிருக்கின்றது ” என்றார். அவரை ஒரு புறம் தள்ளி விட்டு வாட்களை உயர்த்திய பலரும் இரு கைதிகளையும் கொன்று போட்டனர். பின்னைய காலங்களில் அப்த்-அர்ரஹ்மான் கூறுவார் : “ பிலால் மீது இறைவன் கருணை காட்டுவானாக! எனது யுத்த கவசங்களை நான் இழந்தேன் ; அவர் எனது கைதிகள் இருவரையும் சூறையாடிக் கொண்டார் ” - இ.இ. 448-9

யுத்தத்தில் மரணத்துக்குள்ளான அவிசுவாசிகளின் உடல்களெல்லாம் ஒரு கிடங்கினுள் தள்ளப்படவேண்டும் எனப் பணித்தனர் நபிகளார். உத்பாவின் உடம்பு கிடங்கை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது அவரது மகன் அபூஹுதைபாவின் முகம் வெளுத்துவிட்டது. கவலை நிரம்பியவரானார் அவர். அவருக்காக இரங்கி, அனுதாபத்துடன் அவரை நோக்கினர் நபிகளார். அப்போது அபூஹுதைபா கூறினார்: “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையார் குறித்தும், அவர் வீசியெறியப்பட்டுள்ள இடம் குறித்துமான உங்களது கட்டளைகளை நான் வினவவில்லை. சிறந்த அறிவுரைகள் கூறுபவராக, ஒழுக்க சீலராக, தன்னடக்கமுள்ளவராக அவரை நான் அறிந்திருந்தேன். இந்த நல்லொழுக்கங்களும் சீரிய தன்மைகளும் அவரை நிச்சயம் இஸ்லாத்தினுள் நுழையச் செய்யும் என நான் நம்பியிருந்தேன். அவர் குறித்த எனது நம்பிக்கைகளின் மத்தியிலும் அவர். அவிசுவாசியாகவே மரணித்துள்ளமையையும், அவருக்கு நடந்திருப்பவற்றையும் கண்டதும் என்னுள் கவலை எழுந்தது. ” நபிகளார் அபூஹுதைபாவை ஆசீர்வதித்து அன்புடன் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.
குறைஷியத் தலைவர்களுள் யுத்தம் முடிந்த பின்னர் கொல்லப்பட்டவர் அபூ ஜஹ்ல் மட்டுமல்ல. தனக்கு யுத்தப் பொருட்களாய்க் கிடைத்த கவசங்கள் சிலவற்றை மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் சென்று கொண்டிருந்தார் அப்த்-அல்லாஹ்-பின்-அவ்ப். அவ்வேளை, தன் ஒட்டகத்தை இழந்து விட்டதனால் தப்பிச் சென்று விட முடியாதவராயிருந்த பெருத்த உடம்பினரான உமையாவைக் கண்டார் அவர். உமையாவின் மகன் அலீயும் அவருடனிருந்தார். உமையா தனது முன்னை நாள் நண்பரை நோக்கி, “ என்னைக் கைதியாக எடுத்துக் கொள்ளும்; யுத்த கவசங்களைவிடப் பெறுமதியானவன் நான் ” என்றார். அப்த்-அர்ரஹ்மான் இதற்கிணங்கி, கவசங்களை எறிந்து விட்டு, உமையாவையும், மகனையும் இரண்டு கைகளில் பிடித்தவராகப் பாசறை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் எதிர்ப்பட்ட பிலால், தனது முன்னைய எஜமானரும், தனக்கு சொல்லொணாத் துயரங்கள் இழைத்தவருமான உமையாவை அடையாளம் கண்டு நின்றார். “ உமையா! ” என சப்தமிட்ட அவர், “ அவிசுவாசிகளின் தலைவன்! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” எனக் குரலெழுப்பினார். சினங்கொண்ட அப்த்-அர்ரஹ்மான், “ இவர்கள் எனது கைதிகள் ” எனக் கூறி, பிலாலை எதிர்த்து நின்றார். பிலால் விடுவதாயில்லை : “ அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும். ” தன் வசமிழந்த அப்த்-அர்ரஹ்மான், “ நான் கூறுவதை நீ கேட்க மாட்டாயா ஓ! கறுப்புத் தாயின் மகனே! ” என்றார். இதைக் கேட்ட பிலால், தனக்கு முஅஸ்ஸின் என்ற கெளரவத்தை ஈட்டித் தந்த பலம் வாய்ந்த குரலில், “ ஓ அல்லாஹ்வின் துணையாளர்களே! அவிசுவாசத்தின் தந்தை உமையா! அவன் பிழைப்பதாயின் நான் வாழாதிருக்க வேண்டும் ” எனச் சப்தமிட்டார். பல புறத்திலிருந்தும் ஓடி வந்த மக்கள் அப்த்-அர்ரஹ்மானையும் அவரது இரு கைதிகளையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது வீசப்பட்டதொரு வாள் அலீயைக் கீழே வீழ்த்தியது. ஆனாலும் அவர் இறந்து விடவில்லை. அப்த்-அர்ரஹ்மான், உமையாவின் கையை விடுத்து, “ நீரே தப்பித்துக் கொள்ளும் ; அப்படியும் நீர் எப்படித்தான் தப்ப முடியும்? இறைவன் பெயரால் என்னால் உமக்கு எதையும் தர முடியாதிருக்கின்றது ” என்றார். அவரை ஒரு புறம் தள்ளி விட்டு வாட்களை உயர்த்திய பலரும் இரு கைதிகளையும் கொன்று போட்டனர். பின்னைய காலங்களில் அப்த்-அர்ரஹ்மான் கூறுவார் : “ பிலால் மீது இறைவன் கருணை காட்டுவானாக! எனது யுத்த கவசங்களை நான் இழந்தேன் ; அவர் எனது கைதிகள் இருவரையும் சூறையாடிக் கொண்டார் ” - இ.இ. 448-9

யுத்தத்தில் மரணத்துக்குள்ளான அவிசுவாசிகளின் உடல்களெல்லாம் ஒரு கிடங்கினுள் தள்ளப்படவேண்டும் எனப் பணித்தனர் நபிகளார். உத்பாவின் உடம்பு கிடங்கை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது அவரது மகன் அபூஹுதைபாவின் முகம் வெளுத்துவிட்டது. கவலை நிரம்பியவரானார் அவர். அவருக்காக இரங்கி, அனுதாபத்துடன் அவரை நோக்கினர் நபிகளார். அப்போது அபூஹுதைபா கூறினார்: “ ஓ அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையார் குறித்தும், அவர் வீசியெறியப்பட்டுள்ள இடம் குறித்துமான உங்களது கட்டளைகளை நான் வினவவில்லை. சிறந்த அறிவுரைகள் கூறுபவராக, ஒழுக்க சீலராக, தன்னடக்கமுள்ளவராக அவரை நான் அறிந்திருந்தேன். இந்த நல்லொழுக்கங்களும் சீரிய தன்மைகளும் அவரை நிச்சயம் இஸ்லாத்தினுள் நுழையச் செய்யும் என நான் நம்பியிருந்தேன். அவர் குறித்த எனது நம்பிக்கைகளின் மத்தியிலும் அவர். அவிசுவாசியாகவே மரணித்துள்ளமையையும், அவருக்கு நடந்திருப்பவற்றையும் கண்டதும் என்னுள் கவலை எழுந்தது. ” நபிகளார் அபூஹுதைபாவை ஆசீர்வதித்து அன்புடன் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.