Monday, 8 October 2018

சூரா முல்க் - கிரா அத் ஷெய்க் ஹானி அல் ரிபாயி.

இன்னமும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய வசனங்கள் எவ்வளவு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வசனங்களைப் பார்த்து மொழியாக்கங்களை உள்வாங்கியே வாசிக்கிறேன்.


இது போன்ற கனமான விசும்பலில் இன்னும் பல அர்த்தங்கள் விளங்குகிறது. நம்மை மீண்டும் ஒரு முறை கலங்கச் செய்கிறது.


வசனம் எண் 4 :

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

இந்த வசனத்தின் மொழியக்கம் கேட்ட நினைவுகள் இருபது ஆண்டு பழைய செய்தியை நினைவூட்டியது.

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!

வசனம் 7 இறுதி வார்த்தைகள்
அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும்.

அல்லாஹும்ம அஜிர்னி மினன் நார் -  இறைவா! நரக நெருப்பிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!


வசனம் 11

தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.


வசனம் 16

வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா?

நில-நடுக்கங்களும் ஆழிப்பேரலைகளும் நமக்கு மிகவும் பரிச்சயமில்லாதவை ஆனால் இந்த வசனம் அவ்வப்போது நடக்கும் நிலநடுக்கங்களைவிட நம்மை உலுக்குவதில் ஆன்மா ஆட்டம் காண்கிறது.



சூரா அல் முல்க் - ஷெய்க் ஹானி அல் ரிபாயி


No comments:

Post a Comment