மேற்கு வங்க மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டது ஏன், ராணுவப் புரட்சி நடக்கப்போகிறதா?’ என பகீர் கேள்விகளை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராணுவத்தினர் அப்புறப் படுத்தப்படும் வரை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன் வெளியேற மாட்டேன் எனக் கூறி, 30 மணி நேரம் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்திய மம்தா, வியாழன் இரவு முழுவதும் மாநில தலைமைச் செயலகத்திலேயே தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘முர்ஷிதாபாத், ஜல்பாய்குரி, டார்ஜிலிங், வடக்கு 24 பர்கானாஸ், புர்துவான், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட இடங்களில் மொத்தம், 19 சோதனைச் சாவடி களில் ராணுவத்தினர் நிறுத்தப்பட் டுள்ளனர்.
மாநில அரசின் அனுமதி பெறாமல் ராணுவம் எப்படி அங்கு நிறுத்தப்பட முடியும்? இதற்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்த தில்லை. இது மிக தீவிரமான பிரச்சினை. இதென்ன ராணுவப் புரட்சியா? இங்கிருந்து ராணுவம் அகற்றப்படும் வரை, தலைமைச் செயலகத்தில் இருந்து நான் வெளியே வர மாட்டேன்’ எனக் கூறினார்.
இதற்கு ராணுவம் தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப் பட்டது. ‘எதிர்பாராத நெருக்கடி சமயங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவத் துக்கு சரக்கு வாகனங்களை அனுப் புவதற்காக, நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து தொடர்பான புள்ளியியல் விவரங்களைச் சேகரிக்கும் பணியை ராணுவம் மேற்கொள்கிறது.
இது, மேற்கு வங்க மாநிலத் தில் மட்டும் நடக்கும் விஷயமோ, இந்தாண்டு புதிதாக தொடங்கிய வழக்கமோ அல்ல. ஆண்டுக்கு இருமுறை என, 10 ஆண்டுக்கும் மேலாக நடக்கிறது. கடந்த ஆண்டு கூட, நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கம் மட்டுமின்றி மேலும்சில மாநிலங் களிலும் இந்த பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கமான ராணுவப் பயிற்சி நடவடிக்கை தான் இது. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. முறை யான அரசு உத்தரவுப்படி, மேற்கு வங்க மாநில போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒத்துழைப்புடனே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இதனை திரிணமூல் காங்கிரஸ் மறுத்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் கூறும்போது, ‘‘போலீஸுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுவது தவறான தகவல். புள்ளிவிவரம் ஏற்கெனவே கைவசம் உள்ளது. வாகன சோதனையை மேற் கொள்ள ராணுவத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல மாவட்டங்களில் நள்ளிரவுக்குப் பிறகும் ராணுவம் நகர்த்தப்பட்டது’’ என்றார்.
மம்தா பானர்ஜியின் போராட்டம் காரணமாக, மேற்குவங்க தலை மைச் செயலகம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் இருந்து ராணுவத்தினர் அகற்றப்பட்டனர். எனினும், நேற்றைய தினமும் தலை மைச் செயலகத்தில் இருந்து மம்தா வெளியேறாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து இவ்விவகாரத்தைக் கையாள திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இதுகுறித்து புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச் சினை எழுப்பினர். அதோடு, கொல் கத்தாவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியேயும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்துக்குப் பிறகு நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய மம்தா, ‘மத்திய அரசு எங்களை நசுக்கப் பார்க்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’ என்றார்.
ராணுவத்தினர் அப்புறப் படுத்தப்படும் வரை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன் வெளியேற மாட்டேன் எனக் கூறி, 30 மணி நேரம் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்திய மம்தா, வியாழன் இரவு முழுவதும் மாநில தலைமைச் செயலகத்திலேயே தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘முர்ஷிதாபாத், ஜல்பாய்குரி, டார்ஜிலிங், வடக்கு 24 பர்கானாஸ், புர்துவான், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட இடங்களில் மொத்தம், 19 சோதனைச் சாவடி களில் ராணுவத்தினர் நிறுத்தப்பட் டுள்ளனர்.
மாநில அரசின் அனுமதி பெறாமல் ராணுவம் எப்படி அங்கு நிறுத்தப்பட முடியும்? இதற்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்த தில்லை. இது மிக தீவிரமான பிரச்சினை. இதென்ன ராணுவப் புரட்சியா? இங்கிருந்து ராணுவம் அகற்றப்படும் வரை, தலைமைச் செயலகத்தில் இருந்து நான் வெளியே வர மாட்டேன்’ எனக் கூறினார்.
இதற்கு ராணுவம் தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப் பட்டது. ‘எதிர்பாராத நெருக்கடி சமயங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவத் துக்கு சரக்கு வாகனங்களை அனுப் புவதற்காக, நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து தொடர்பான புள்ளியியல் விவரங்களைச் சேகரிக்கும் பணியை ராணுவம் மேற்கொள்கிறது.
இது, மேற்கு வங்க மாநிலத் தில் மட்டும் நடக்கும் விஷயமோ, இந்தாண்டு புதிதாக தொடங்கிய வழக்கமோ அல்ல. ஆண்டுக்கு இருமுறை என, 10 ஆண்டுக்கும் மேலாக நடக்கிறது. கடந்த ஆண்டு கூட, நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கம் மட்டுமின்றி மேலும்சில மாநிலங் களிலும் இந்த பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கமான ராணுவப் பயிற்சி நடவடிக்கை தான் இது. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. முறை யான அரசு உத்தரவுப்படி, மேற்கு வங்க மாநில போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒத்துழைப்புடனே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இதனை திரிணமூல் காங்கிரஸ் மறுத்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் கூறும்போது, ‘‘போலீஸுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுவது தவறான தகவல். புள்ளிவிவரம் ஏற்கெனவே கைவசம் உள்ளது. வாகன சோதனையை மேற் கொள்ள ராணுவத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல மாவட்டங்களில் நள்ளிரவுக்குப் பிறகும் ராணுவம் நகர்த்தப்பட்டது’’ என்றார்.
மம்தா பானர்ஜியின் போராட்டம் காரணமாக, மேற்குவங்க தலை மைச் செயலகம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் இருந்து ராணுவத்தினர் அகற்றப்பட்டனர். எனினும், நேற்றைய தினமும் தலை மைச் செயலகத்தில் இருந்து மம்தா வெளியேறாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து இவ்விவகாரத்தைக் கையாள திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இதுகுறித்து புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச் சினை எழுப்பினர். அதோடு, கொல் கத்தாவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியேயும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்துக்குப் பிறகு நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய மம்தா, ‘மத்திய அரசு எங்களை நசுக்கப் பார்க்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’ என்றார்.