லண்டனில் இருந்து செயல்படும் பிபிசி சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி, 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் தனது சர்வதேச சேவையை விரைவில் விரைவுபடுத்தவுள்ளது.
இதுகுறித்து பிபிசி சார்பில் மும்பையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு, பிபிசி சர்வதேசச் சேவையை விரிவுபடுத்துவதற்காக, பிரிட்டன் அரசு நிதியுதவி அறிவித்திருந்தது. அதன்படி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டில் (2017) செய்திச் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும், இந்தியப் பிராந்தியத்தில் 157 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம், பிரிட்டனுக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக தில்லி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, ஹிந்தி, வங்க மொழி, தமிழ் உள்பட 29 மொழிகளில் பிபிசி சேவைகளை வழங்கி வருகிறது. வாரம்தோறும் சுமார் 34.8 கோடி பேர் பிபிசியின் சேவைகளை ரசித்து வருகின்றனர்.
பிபிசி-யின் நூற்றாண்டு விழா, வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்குள், 50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி சார்பில் மும்பையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு, பிபிசி சர்வதேசச் சேவையை விரிவுபடுத்துவதற்காக, பிரிட்டன் அரசு நிதியுதவி அறிவித்திருந்தது. அதன்படி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டில் (2017) செய்திச் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும், இந்தியப் பிராந்தியத்தில் 157 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம், பிரிட்டனுக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக தில்லி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, ஹிந்தி, வங்க மொழி, தமிழ் உள்பட 29 மொழிகளில் பிபிசி சேவைகளை வழங்கி வருகிறது. வாரம்தோறும் சுமார் 34.8 கோடி பேர் பிபிசியின் சேவைகளை ரசித்து வருகின்றனர்.
பிபிசி-யின் நூற்றாண்டு விழா, வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்குள், 50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment