தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோத வழிகளில் புதிய நோட்டுகளாக மாற்ற பெருந்தொகை காரில் கொண்டு செல்லப்படுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடந்த செவ்வாய் கிழமை இரவு வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் போலீஸார் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக 500, 1000 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி.
காரில் வந்த 3 பேரில் ஒருவர் நகை வியாபாரி, மற்றொருவர் ஆடிட்டர், மூன்றாவது நபர், ஆடிட்டரின் உதவியாளர் என்று தெரிந்தது. மூவரையும் காஷ்மீரி கேட் போலீஸார் கைது செய்தனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment