21. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான் : இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான் எதிராளியாக (பகைவனாக) இருப்பேன். ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று,அத்தொகையை விழுங்கியவன். மற்றொருவன். வேலையாளை அமர்த்தி, அவனிடம் முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய கூலியைக் கொடுக்காதவன்.
நூல்: புகாரி.
22. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் ஒருவன் தன்னை இழிவாகக் கருதவேண்டாம். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன்னை எவ்வாறு இழிவாகக் கருத முடியும்?. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். 'அல்லாஹ் எது குறித்து விசாரிப்பானோ அத்தகைய காரியத்தை காண்கிறான். ஆனால் ஆதுபற்றி ஒன்றும் கூறாமல் இருக்கின்றான். எனவே அல்லாஹ், இருதித் தீர்ப்பு நாளில் அந்த மனிதரிடம் இன்ன இன்ன விஷயத்தைக் குறித்து நீ (உன் கருத்தை) சொல்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? (என கேட்பான்) மக்கள் மீதிருந்த பயம்தான் என்று மனிதன் விடையளிப்பான். பின்னர் அல்லாஹ், நீ பயப்பட மிகவும் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே என்பான்.
நூல் : இப்னுமாஜா, அஹ்மத்.
23. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் கூறுவான்: என்னுடைய மேன்மையினால் (மனிதர்களில்) ஒருவருக்கொருவர் நேசம் வைத்து இருப்பவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழலில்லாத இந்நாளில், என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் நிழல் அளிப்பேன்.
நூல் : முஸ்லிம்.
24. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (தனது) ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும் அவரை நேசிப்பீராக என்று கூறுவான். ஜிப்ரயீல் (அலை) அவ்வாறே நேசிப்பார். பின்பு ஜிப்ரயீல் (அலை) அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை நேசியுங்கள். என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அல்லாஹ் (தனது) ஒரு அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் (அலை) அவர் மீது கோபம் கொள்வார். பின் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர் மீது நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள். என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள். இவ்வுலகிலும் அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
25. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: என்மீது நேசம் வைத்துள்ளவர்மீது எவர் பகைமை கொண்டுள்ளாரோ, அவருக்கு எதிராக நான் போர் தொடுப்பேன். என்னால் அதிகமாக விரும்பப்படும் எந்த அடியானும், நான் அவன் மீது கடைமையாக்கியுள்ளதை விட வேறு விருப்பமான எந்தக் காரியத்தின் மூலமும் என்னை நெருங்க முடியாது. நான் அவனை நேசிக்க வேண்டும் என்பதற்குhக மேலதிகமான உபரி வணக்கங்கள் செய்வதின் மூலம்;; என் அடியான் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான்.
நான் அவனை நேசிக்கும்;போது, நான்; அவன் கேட்கும் கேள்வியாளவும், பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கரமாகவும், நடக்கும் காலாகவும் ஆகிவிடுகிறேன். என்னிடம் (எதனையாவது) அவன் வேண்டினால் நான் நிச்சயமாக அதனை அவனுக்குக்; கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாப்புத் தேடினால்;, நிச்சயமாக நான் அவனைப் பாதுகாக்கின்றேன்.
விசுவாசியான என் அடியானுடைய ஆன்மாவைக் கைப்பற்றுவதற்கு நான் காட்டும் தயக்கத்தைப்போல் வேறு எதனையும் செய்வதற்கு நான் தயக்கம் காட்டுவதில்லை. அவன் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்குத் துன்பம் ஏற்படுத்துவதை வெறுக்கிறேன்.
நூல் : புகாரி
அல்லாஹ் கூறினான் : இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான் எதிராளியாக (பகைவனாக) இருப்பேன். ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று,அத்தொகையை விழுங்கியவன். மற்றொருவன். வேலையாளை அமர்த்தி, அவனிடம் முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய கூலியைக் கொடுக்காதவன்.
நூல்: புகாரி.
22. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் ஒருவன் தன்னை இழிவாகக் கருதவேண்டாம். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன்னை எவ்வாறு இழிவாகக் கருத முடியும்?. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். 'அல்லாஹ் எது குறித்து விசாரிப்பானோ அத்தகைய காரியத்தை காண்கிறான். ஆனால் ஆதுபற்றி ஒன்றும் கூறாமல் இருக்கின்றான். எனவே அல்லாஹ், இருதித் தீர்ப்பு நாளில் அந்த மனிதரிடம் இன்ன இன்ன விஷயத்தைக் குறித்து நீ (உன் கருத்தை) சொல்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? (என கேட்பான்) மக்கள் மீதிருந்த பயம்தான் என்று மனிதன் விடையளிப்பான். பின்னர் அல்லாஹ், நீ பயப்பட மிகவும் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே என்பான்.
நூல் : இப்னுமாஜா, அஹ்மத்.
23. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் கூறுவான்: என்னுடைய மேன்மையினால் (மனிதர்களில்) ஒருவருக்கொருவர் நேசம் வைத்து இருப்பவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழலில்லாத இந்நாளில், என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் நிழல் அளிப்பேன்.
நூல் : முஸ்லிம்.
24. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (தனது) ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும் அவரை நேசிப்பீராக என்று கூறுவான். ஜிப்ரயீல் (அலை) அவ்வாறே நேசிப்பார். பின்பு ஜிப்ரயீல் (அலை) அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை நேசியுங்கள். என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அல்லாஹ் (தனது) ஒரு அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் (அலை) அவர் மீது கோபம் கொள்வார். பின் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர் மீது நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள். என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள். இவ்வுலகிலும் அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
25. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: என்மீது நேசம் வைத்துள்ளவர்மீது எவர் பகைமை கொண்டுள்ளாரோ, அவருக்கு எதிராக நான் போர் தொடுப்பேன். என்னால் அதிகமாக விரும்பப்படும் எந்த அடியானும், நான் அவன் மீது கடைமையாக்கியுள்ளதை விட வேறு விருப்பமான எந்தக் காரியத்தின் மூலமும் என்னை நெருங்க முடியாது. நான் அவனை நேசிக்க வேண்டும் என்பதற்குhக மேலதிகமான உபரி வணக்கங்கள் செய்வதின் மூலம்;; என் அடியான் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான்.
நான் அவனை நேசிக்கும்;போது, நான்; அவன் கேட்கும் கேள்வியாளவும், பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கரமாகவும், நடக்கும் காலாகவும் ஆகிவிடுகிறேன். என்னிடம் (எதனையாவது) அவன் வேண்டினால் நான் நிச்சயமாக அதனை அவனுக்குக்; கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாப்புத் தேடினால்;, நிச்சயமாக நான் அவனைப் பாதுகாக்கின்றேன்.
விசுவாசியான என் அடியானுடைய ஆன்மாவைக் கைப்பற்றுவதற்கு நான் காட்டும் தயக்கத்தைப்போல் வேறு எதனையும் செய்வதற்கு நான் தயக்கம் காட்டுவதில்லை. அவன் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்குத் துன்பம் ஏற்படுத்துவதை வெறுக்கிறேன்.
நூல் : புகாரி
No comments:
Post a Comment