Monday, 6 February 2023

தற்கொலை 3

 மனிதன் பிறக்கும் போதும்,

இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த நற்செயல், தீஞ்செயல் என்று கூறும் இரண்டு மட்டுமே,

இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது,

அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே

உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

அது தான் ஒளவையின் பாடலும் கூட

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்

ஈதொழிய  வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்

தீதொழிய நன்மை செயல்   

நல்வழி பாடல் 2

இஸ்லாம் இறை நம்பிக்கையை வலியுறுத்துகின்றது. நன்மையோ, தீமையோ இறைவன் நாட்டப்படியே நடக்கும். அவன் நாடியது நடக்கும். அவன் நாடாதது நடக்காது. அல்லாஹ் எதை எமக்கு விதித்தானோ அதுவே எமக்குக் கிடைக்கும். அல்லாஹ் எமக்கென விதிக்காதது கிடைக்காது. உலகில் எமக்கு ஏற்படும் நட்டங்கள், இழப்புக்கள், கடினங்கள்  அனைத்தையும் தாங்கிக் கொண்டால் எமக்கு நன்மையும் மகத்தான கூலியும் உண்டு என போதிக்கின்றது. உறுதியான நம்பிக்கையிருந்தால் எவ்வித இழப்பு ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை ஒருவன் பெற்றுவிடுவான்.

எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும், நம்பிக்கை குறைவுதான் அந்த ஒரு நொடியில் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்றாகும். எமது எதிர்காலம் அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. அவன் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு (தவக்குல்) முயற்சி செய்வது மட்டுமே எமது கடமை. முடிவு அவனுடைய கையில் இருக்கின்றது என்று உறுதியாக நம்புபவன் வாழ்வின் நம்பிக்கை இழந்து தற்கொலையின் பக்கம் செல்ல மாட்டான்.

தமிழ் வழியில் படித்தாலும் அதன் மொழியின் ஆழத்தை புரிந்து வாழ்வியலை துணைக் கொள்ள இளைய தலைமுறை தூரமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.

மமதையைத் தரும் வெற்றியை விட நல்ல பாடத்தைத் தரும் தோல்விகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்

மனித வாழ்வு பெறுமதியானது. 

போனால் மீண்டும் வராது. 

வாழ்வது ஒரு முறைதான்! அந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். சாதாரண பரீட்சைத் தோல்விக்காக வாழ்வை அழித்துக்கொள்வது அறிவீனமாகும். வாழ்க்கைக்காகவே பரீட்சையே தவிர பரீட்சைக்காக வாழ்க்கை அல்ல என்ற அடிப்படை உணர்வு ஊட்டப்படுதல் மிகவும் அவசியமாகும்.

உயர்கல்விக்காக வளரும் தலைமுறையினர் ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது அல்லது தங்களது காலம் கடத்தப் படும் போது உளவியல் காரணங்களால் அடுத்த நகர்வுக்கு கடந்து செல்லாமல் பரிதவிக்கின்றனர்.

வெற்றி உறுதியானாலும் அது இறுதியல்ல 

தோல்வியில் முடிந்தாலும் அது நிரந்தரமல்ல

தம்மீது அன்பு கொண்டவர்களைப் பழிவாங்குவதற்காக சிலர் தற்கொலை செய்கின்றனர். காதலுக்கு சம்மதிக்காத பெற்றோரைப் பழி வாங்க தற்கொலை செய்கின்றனர். இதன் மூலம் தனது குடும்பம் அவமானத்தைச் சந்திக்கும் என்பதை கூட விளங்குவதில்லை.

காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி போன்ற சாதாரண காரணங்களுக்காக இளம் தலைமுறையினரில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்வியைக் கண்டு உயிரை மாய்த்துக் கொள்வது என்றால் இந்த உலகம் எந்த ஒரு சாதனையாளர்களைச் சந்தித்திருக்காது. தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டவர்களே சாதனையாளர்களாக சரித்திரம் படைத்துள்ளனர். அலிபாபா நிறுவனத் தலைவர்  Jack Ma மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

போதிய மன வளர்ச்சி இல்லாமையே இப்படி நடந்து கொள்கின்றனர். உண்மையில் இந்த மாதிரியான எண்ணங்கள் எழுவதற்கு தற்கொலை தொடர்பான தொலைத்தொடர்பு செய்திகள், மக்கள் உரையாடல்கள்  காரணம். 

இதுக்கு ஒரு முழக் கயிறு கிடைக்கலையா? என்ற மிகச் சாதாரணமான சொல்லாடல் இன்னும் எனக்குள் (echo) எதிரொலிப்பையும் உணர்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும்..


தற்கொலை -2

 தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் அல்லது செய்து கொள்பவர்கள் உள ரீதியில் கோழைகளாவர். சவால்களைச் சந்திக்கும் துணிவை இழந்தே தற்கொலையை நாடுகின்றனர். இவர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தற்கொலை ஒரு தீர்வாகும் என நினைக்கின்றனர். உண்மையில் தற்கொலை என்பது தீர்வன்று. அது ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினைக்கு இடம் மாறுவது மட்டுமேயாகும்.

கடன் தொல்லை, வறுமை, வியாபாரத்தில் நட்டம், காதல் தோல்வி போன்ற அற்ப காரணங்களுக்காக ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினை முடியாது! 

அவன் இறந்த பின்னர் அந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து அவனது குடும்பத்தைத் தொற்றிக் கொள்ளும். தற்கொலை செய்பவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களை கடினமான சோதனையில் போட்டு விட்டு தமது இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.

நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.

‘மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

(4:28-32)

முதல் வசனம் மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான் என்று கூறுகின்றது. அந்த பலவீனத்தின் காரணத்தினால் தப்பு, தவறு செய்கின்றான், பேராசை கொள்கின்றான். அவனது உளவியல் பலவீனத்தின் வெளிப்பாடே தற்கொலையாகும்.

ஒருவர் சொத்தை மற்றவர் தவறான முறையில் சுரண்டக் கூடாது என்று அடுத்து பேசுகின்றான். அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்காத போது மனிதன் கொலை, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றான். சரியான இறை நம்பிக்கை இருந்தால் மறுமையில் நீதி கிடைக்கும் என்று நிம்மதி பெற முடியும்.

அடுத்து, தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று குர்ஆன் தடுக்கின்றது. இப்படித் தடை போட்டால் மட்டும் சரியா? தற்கொலை செய்து கொள்ளும் பலரும் தமக்கென்று யாரும் இல்லை, தம் மீது அன்பும் பரிவும் காட்ட எவரும் இல்லை என்ற தவறான விரக்தி நிலையிலேயே அதைச் செய்கின்றனர்.

அடுத்து, அல்லாஹ் உங்களோடு அன்பாக இருக்கின்றான் என்று ஆறுதல் கூறப்படுகின்றது. தற்கொலை உணர்வுடையவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது அவர்களை அதிலிருந்து காப்பதற்கான ஒரு வழியாகும்.

ஆனால், சிலர் வெறும் அன்புக்கு மட்டும் கட்டுப்பட மாட்டார்கள். எனவே, அடுத்து அல்லாஹ், ‘நான் அன்பானவன் ஆனால், நீ தற்கொலை செய்து கொண்டால் உன்னைக் கடுமையாகத் தண்டிப்பேன்’ என எச்சரிக்கின்றான். பிரச்சினையில், கஷ;டத்தில் இருந்து விடுபட நீ தற்கொலை செய்து கொண்டால் நரகம் என்ற மிகப் பெரும் பிரச்சினையில் நீ மாட்டிக் கொள்வாய் என இங்கு எச்சரிக்கப்படுகின்றது.

அடுத்து, மனிதன் செய்யும் பாவங்களும் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்றாகும். பாவம் செய்தவனை அவனது ஆழ் மனது வாட்டி வதைக்கின்றது. தான் இப்படியெல்லாம் செய்துவிட்டேனே என்று தன்னைத் தானே தாழ்த்தி மனிதன் விரக்தி அடைகிறான். வாழத் தகுதியற்றவன் என நினைக்கின்றான். இதனால் அவனுள் தற்கொலை எண்ணம் பெறும் எழுச்சி பெறுகிறது. எனவே, இங்கு இறைவன் பாவ மன்னிப்புப் பற்றி பேசுகின்றான்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும்.....

இளம் வயது தற்கொலை...

Sunday, 5 February 2023

தற்கொலை

 சமீபமாக நெருங்கிய உறவினர்களின் மரணங்கள் எல்லாம் தற்கொலையான போது சொல்ல வந்த உறவுகள் என்ன இதுவும் இறைவன் நாட்டப்படிதானா?

அப்படி என்றால் இவனின் தற்கொலையும் அல்லாஹ் அறிந்துதான் செய்யச் செய்கிறானா? இறைவன் கொடுமைக்காரனா?

அடிப்படையில் நாம் சிலவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்

உலகில் நமக்கு முன்னர் எத்தனை சமூகம் வாழ்ந்தார்கள் என்று நாம் அறிந்தோமா? இல்லை நாம் மறித்த பின்னர் எத்தனை சமூகம் வாழப்போகிறது என்பதை அறிவோமா?

நம்மை அறிவுசார் நின்று செயல்பட ஒரு வழிகாட்டு நெறிமுறையும் அழகிய வாழ்வுமாக அமைந்தது இறைவேதம் அல் குர் ஆன் மற்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும்.

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இது நபிகளாரின் பொன்வாக்கு 

நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் இந்தச் சோதனையிலும் நாம் இறைவனை நம்புகிறோமா அவனிடம் மன்னிப்பு கோருகிறோமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் 

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். 25:70

ஆனால் மனிதன் அவசர கதியில் தன்னைவிட மிஞ்சியது ஒன்றுமில்லை என்ற அந்த சொற்ப நொடியில் எடுப்பதை நாம் தவறென எண்ணுவதில்லை. இந்த உயிர் நாம் எப்படிப் பெற்றோம்; அதற்கான காரணிகள் என்ன 

மனிதம் பலவீனமானவன்....

சுவர்க்கத்தில் வாழ வழிவகை

 ஏய் என்ன யாரோடடே என்ன சேர்த்து பேசுற

பழயமாடங்களா இந்த சபைக்கு வரணும்னா ஒரு தராதரம் வாண்டமா, யாரோட ஒண்ணா இருக்க முடியும்
ஏலே அவன் தரத்துக்கு நமக்குச் சரிப்படாது. அவன் சரியில்லாத பயிற்சி
இதோடு நம்மோடு வாழும் சக மனிதனை நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்பீடு செய்வதை அல்லது உயர்வு கற்பிப்பதை விரும்பாதவர்கள்.
நமக்கு என்று தனி அடையாளம் வேண்டும் என்று விரும்பும் நாம் என்ன செய்தோம்.
நம்மை நாமே உருவாக்கினோமா
நான் இந்த நிமிடம் வரை சுவாசிக்கும் காற்று அதற்கான அத்தனையும் படைத்து
நான் பார்க்கும் பொழுது கண்கள் சொக்கி போய் நிலை தடுமாறும் தட்பவெப்பம்
தட்ப வெப்பத்திற்கு ஏற்ற உணவு
இதில் எதுவும் என்னால் நிர்ணயம் செய்ய முடியாது.
இத்தனை பலவீனமாக இருந்தது நாமே மற்றொருவருக்கு ஒப்பிடுவதை விரும்பாத போது.
அகிலத்தை படைத்து காத்து நிற்கும் ஏகன் ஒருவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று
லுக்மான் (அலை) மூலம் வரும் சந்ததிகளுக்கு வாழையடி வாழையாக இந்தப் பரப்புரையைச் செவிமடுக்க வைத்துள்ளான் அல்லாஹ்.
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(அல்குர்ஆன் : 31:13)
இறைவா!
தனித்துவமானவனே
உன்னை இணை கற்பிக்கும் மாபாவத்திலிருந்து எங்களை காப்பாயாக!

தொழுகை - சுவர்க்கத்தின் திறவு கோல்

 

லுக்மான் (அலை) அவர்களின் மொழியாக இறைவன் நமக்குப் பகிர்ந்த வார்த்தைகள் தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
என்னருமை மகனே! "தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும். 31:17
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 31:18
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்). 31:19
அடிப்படையில் நாம் இதனை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றே இறைவன் நமக்கு இதனைச் சிறந்த சொல்லாடலாக தூதர் மூலம் வழங்கியுள்ளான்.
முதலாவது நாம் அறிந்து செயல்பட வேண்டியது அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது.
அடுத்தது நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது
மூன்றாவது பொறுமையை மேற்கொள்வது என்பது அதை வீரமிக்க செயல் என்றும் சான்று பகிர்கிறான்.
நான்காவது பெருமையிலிருந்து விலகிக் கொள்வது
ஐந்தாவது நடு நிலையாக நடந்துகொள்வது மற்றும் நிதானமாக பேசுவது
"என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான் 31:16
இந்த 5 வசனங்களைப் படித்துப் படித்து நாம் தெளிவு பெறலாம்.
Like
Comment
Share

மனித இயல்பு

அனைத்துலகிற்கும் அதிபதியே! அல்லாஹ்வே!
உன்னைப் போற்றி வணங்குகிறேன்
வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் நீ ஒருவன் மட்டுமே என சான்று பகர்கின்றேன்

உனது இறுதித் தூதர் அகிலத்துக்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் மீது உனது ஸலவாத்தைப் பொழிவாயாக!

فَاَعْرِضْ

அவர்களைப் புறக்கணித்து



இறைத்தூதர்கள் எவ்வாரெல்லாம் புறக்கணிக்கப் பட்டார்கள் எனும் போது அல்லாஹ் அவனது தூதர்களுக்கு வழங்கிய சிறந்த அறிவுரை அவர்களைப் புறக்கணித்து கடந்து செல்வது. 

இதைக் குர் ஆனில் வீண் விவாதங்கள் செய்யும் கூட்டத்தினரையும் புறக்கணிக்கச் சொல்கிறான். அவர்கள் எதைப் பற்றி விவாதிப்பார்கள் இறைவனின் வசங்களைப் பற்றியே வீண் விவாதங்கள் செய்வார்கள் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் உபதேசம் செய்வது அல்லாஹ்வின் கடமை என்று சான்று பகிர்கின்றான்.

இறைவா!
எங்களது பாவங்களைப் புறக்கணித்து மன்னிப்பாயாக!

எதிர்காலத்தை எண்ணி சோர்வு அடையாதீர்.


தினந்தோறும் அல்லாஹ் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான்.
கண்ணை மூடிக் கொண்டு உங்களின் கடந்தகால வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள்
எதிர்பாராத திருப்பங்கள் -அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும்.
ஒரு நோய் இன்று வல்லரசுகளையே ஆட்டங்கான வைத்திருக்கிறது.
எதிர்பாரத விபத்துக்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் உலகை ஆட்சிசெய்யும் ஒரு இறைவன் இருக்கிறான்.
அவன் நினைத்ததை அவன் நிர்ணயித்த நேரத்தில் செயல்படுத்துவான் என்பதற்கான நினைவூட்டல்.
#என்றும் மரணமடையாத நித்தியஜீவனான அல்லாஹ் வின் மீது நம்பிக்கை வையுங்கள்.
அண்ணல்நபிصلي الله عليه و سلم அவர்கள் சொல்கிறார்கள்:
المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير، احرص على ما ينفعك، واستعن بالله ولا تعجز، وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا، ولكن قل: قدر الله، وما شاء فعل؛ فإن لو تفتح عمل الشيطان
(உடலாலும் உள்ளத்தாலும்) உறுதியுள்ள முஃமின் பலவீனமான முஃமினைவிட சிறந்தவன் அல்லாஹ் விற்கு மிகவும் உவப்பானவன்.
அனைத்திலும் நன்மை இருக்கிறது.
உனக்கு பலன் தருபவைகளை மீது நீ ஆசை கொள்.
அல்லாஹ்விடம் உதவிகேள்
நடந்த நிகழ்வுகளை எண்ணி நான் இப்படி,இப்படி செய்திருக்கலாமே என (புலம்பி) சொல்லிக் கொண்டிருக்காதே!
மாறாக,அல்லாஹ் நிர்ணயித்து விட்டான்.
அவன் எதை நினைக்கிறானே அதைச் செய்வான் எனச் சொல்.
ஏனென்றால் (if) இப்படி செய்திருந்தால் என்பது ஷைத்தான் செயல்படுவதற்கு வழி வகுக்கும்(முஸ்லிம்.)
தினந்தோறும் இவ்வசனங்களை நினைவில் கொள்ளுங்கள்.
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:5)
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:6)
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
(அல்குர்ஆன் : 94:7)
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
முழு மனத்துடன்
உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
(அல்குர்ஆன் : 94:8)
----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி

பிரார்த்தனைத் தொகுப்பு

அனைத்துலகிற்கும் அதிபதியே! அல்லாஹ்வே!
உன்னைப் போற்றி வணங்குகிறேன்
வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் நீ ஒருவன் மட்டுமே என சான்று பகர்கின்றேன்
உனது இறுதித் தூதர் அகிலத்துக்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் மீது உனது ஸலவாத்தைப் பொழிவாயாக!
யாஅல்லாஹ்! இவ்வுலகின் மூலம் எனது'தீனுக்கு
'உதவியளிப்பாயாக!
'தக்வா'வின் மூலம் எனதுமறுமை வாழ்விற்கு உதவிடுவாயாக!
என் கண்களுக்குப் புலப்படாதவைகளின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக!
என் முன் இருப்பவைகளை அனுபவிப்பதில் என்னை என் மன இச்சைகளின் பால் என்னை ஒப்படைத்துவிடாதே!
நாங்கள் செய்யும் பாவங்களால் பாதிக்கப்படாதவனே!
எங்களை மன்னிப்பதனால் எதனையும் இழக்காதவனே!
எங்களுக்கு
நிஃமத்துகளை
அருள்வாயாக அவற்றை அருளுவதால்
உனக்கு எந்தக் குறையும் ஏற்படப்போவதில்லை!
மன்னிப்பதனால் உனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாத மஃபிரத்தால் என் பாவங்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக நீயே வாரிவழங்குபவன்.
விரைவில் கிடைக்கும் செழுமை,
அழகிய பொறுமை.
விசாலமான வாழ்வாதாரங்கள்,
துன்பங்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பு
ஆகியவற்றை உன்னிடம் கேட்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியத்தைக் கேட்கிறேன் .
நீடித்த சுகத்தைக் கேட்கிறேன்.
ஆரோக்கியத்தை அளித்ததற்கு நன்றி செலுத்துதலைக் கேட்கிறேன்
மக்களிடம் தேவையாகாத வாழ்வைக் கேட்கிறேன்
நலன்களை பெறும் ஆற்றலோ,தீமைகளை விட்டு விலகும் சக்தியோ, கண்ணியமும்,உயர்வும் நிறைந்த அல்லாஹ் வை கொண்டே தவிர வேறு இல்லை.
ஆமீன்.
நபி பிரார்த்தனைத் தொகுப்பு ஹிஜ்புல் அஃளம்(முல்லா அலி காரி) தொகுப்பிலிருந்து

தமிழில் கணியூர் முஹம்மது இஸ்மாயில் நாஜி
May be an image of one or more people, monument and text
All reactions:
13


Saturday, 4 February 2023

காலம்

 பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருந்தாலும் ஆச்சரியம் மிகுந்தவை. அவற்றிற்கு மத்தியிலுள்ள தொலைவும் அவற்றின் இயல்பும் அறிதல் என்னும் வட்டத்திற்கு அப்பாற்பட்டவை. அவை இறைவனை, அவனுடைய பேராற்றலை, அவனையே சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுபவை. உங்களுக்கு நெருக்கமாக நிகழும் பிறப்பும் இறப்பும் உங்களுக்குள் ஆச்சரியமான தாக்கங்களை ஏற்படுத்துபவை, உங்களை இறைவனை நோக்கி இழுத்துச் செல்பவை.

வாழ்வும் மரணமும் அவன் கைவசமே உள்ளன. அவனே வாழ்வளிக்கின்றான், மரணிக்கச் செய்கின்றான்.

தொழுது வாழ்.

 வாழ்க்கையில் கீழே விழுகின்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நின்று தக்பீர் கட்டி உனது ரப்புடன் பேச ஆரம்பித்து விடு ... வீழ்ந்ததே தெரியாமல் போய்விடும்.

வாழ்க்கையில் உயர்ந்து விட்டால் நெற்றியை சஜ்தாவில் வைத்து உனது ரப்புடன் பேச ஆரம்பித்து விடு ... வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாழ்க்கையில் தொழுகையல்ல.
வாழ்க்கையே தொழுகைதான்..
மகிழ்ச்சியிலும் தொழுகையே.
மகிழ்ச்சியை தீர்மாணிப்பதும் தொழுகையே..
தொழுது வாழ்.
வாழ்வதே தொழத்தான் என்று வாழ்.
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி

பெற்றோர் நலன்

 உங்கள் வயதான பெற்றோரை உடனே சென்று பார்க்கும் கண் தூரத்தில் வைத்திருங்கள்,

உங்கள் சூழ்நிலைகளையும் வேலை வாய்ப்புகளையும் அதற்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்
எளிதில் வந்து பார்க்க முடியாத தூரத்திற்கு சென்று விடாதீர்கள்
அவர்களை
தனியாக விடாதீர்கள்
அவர்களுக்கு
உணவும் தண்ணீரும் உடையும் இருப்பிடமும் ஒரு வேலையாளும் போதும் என்று நினைக்காதீர்கள்,
அதையும் தாண்டி உங்கள் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் அவர்களுக்கு எப்போது கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் அவர்களின் அருகில் இருப்பதே அவர்களுக்கான பெரிய ஆறுதல் என்பதை அறியுங்கள்
உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதை உணருங்கள்
உங்கள் விருப்பத்தை மறுத்து பேசாத உங்களுடைய பெற்றோரின் எண்ணத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்
உங்கள் பெற்றோரிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை உங்கள் அருகில் இருந்து உங்கள் பிள்ளைகள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்
உங்கள் பெற்றோர் உங்களுக்கு அநீதி செய்தாலும் நீங்கள் அவர்களுக்கு நீதி மட்டுமே செலுத்துங்கள்
நீங்கள் இவற்றை உங்கள் பெற்றோருக்காக செய்யாவிட்டாலும் இறைவனுக்காக செய்யுங்கள்.
-S.செய்யித் அலி பைசி,
02.02.2023

எது அவமானம்


கற்பு நெறியோடு வாழும் பெண் தன்மீது சொல்லும் பழிச் சொல்லுக்கு யாரைக் குறைபாட்டுக்கு கொள்வது.
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் என்பதற்கு ஒப்ப தன் தந்தை யாரென்று தெரியாத குழந்தையைச் சுமக்கும் தாய்.
இதோ இன்னாரின் பிள்ளையைப் பெற்றெடுக்க
யாரின் வாரிசைச் சுமந்து வந்துள்ளாய். உனக்கு என்ன துணிவு வேண்டும்
எங்க மானம் மரியாதை எல்லாம் கப்பலேரிப் போச்சே
இது தான் நமது கூப்பாடு.
இறைவனைப் பொருந்திக் கொண்டவர்களால் அது மிகவும் எளிதாக கடந்து சென்று உதாரணமாக உரக்கச் சொல்லப்பட்டார்கள்.
எந்த ஆண் துணையுமில்லாமல் பெற்ற குழந்தையுடன் அன்னை மர்யம் (இறைவன் அருளும் அமைதியும் நிலவட்டும்) நின்ற போது தனது சமூகம் பல கேள்விகளால் அவர்களைத் தாக்கியது.
அவர்களை இறைவனைப் பொருந்திக் கொண்டு அந்த வாரிசான ஈஸா(இறைவனின் அமைதி நிலவட்டும்) அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே பேசினார்கள்.
அந்தக் குழந்தை எப்படிப்பட்ட குழந்தை இந்த உலகின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்று.
அந்தத் தாய் அதை தன்னைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்காகச் செய்ததை இறைவன் மறுமொழி தந்தான்.
உலக மாந்தர்கள் அனைவருக்கும் முன்னுதாரணம் இரண்டு பெண்கள். அதில் அன்னை மர்யம் அவர்கள் ஒருவர்.
எது அவர் மானம்!

பெருமை

 அணு என்பது மிகச் சிறிய துகள் தான் ஆனால் அதை எங்கும் நாம் உதாரணம் காட்டுவதில்லை. விதிவிலக்காக யாராவது வழக்கத்தில் பேசிக் கூட அறியாத சொல்லாடலை இறைத்தூதர் பயன்படுத்தியதை நாம் புறக்கணிக்கிறோமோ

ஆம் அணு அளவு பெருமை கொண்டவர் சொர்க்கம் செல்ல மாட்டார்.
பெருமை என்றால் என்ன?
சத்தியத்தை மறுப்பதும், மக்களை இழிவாக கருதுவதும் தான் பெருமை.
இத்தகைய பெருமை ஏன் ஏற்படுகிறது?
ஒருவன் தன்னை மற்றவரைவிட உயர்வானவனாகவும், பிற மக்களை சிறுமையாகவும், பிறர் தமக்கு பணிய வேண்டும் என நினைத்து பெருமிதம் கொள்வதினால் ஏற்படுகிறது.
இறைவா!
பெருமைக்குரியவனே
எங்களை உன்னை வணங்கி வழிபட்ட‌ நல்லடியார்களோடு சேர்த்துக் கொள்வாயாக!
இறைவா!
உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.