Thursday, 13 December 2018

எண்ணிக்கையை விட தரமே முக்கியம்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

🌸 அறிஞர் சஅதியின் ஒரு குட்டிக்கதை!
ஒருமுறை இரு நண்பர்கள் ஒன்றாகப் பயணித்தனர். இருவரில் ஒருவர் குறைவாக உணவருந்தி மெலிந்திருந்தார். இன்னொருவர் அதிகமாக உணவருந்தி கொழுத்திருந்தார்.
பயண இடையில் அவர்கள் 'உளவாளிகள்' என்று குற்றம் சுமத்தப்பட்டு, கைதாகி வெவ்வேறு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, விடுதலைக்கான உத்தரவு வந்தது.
சிறைக்கதவு திறக்கப்பட்டபோது, மெலிந்தவர் உயிரோடிருந்தார். கொழுத்தவர் இறந்து கிடந்தார். இது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். மக்கள் ஆச்சர்யம் குறித்து கேள்விப்பட்ட அறிஞர் ஒருவர், 'சரியாகவே நடந்துள்ளது. மாறி நடந்திருந்தால்
தான் ஆச்சரியம்' என்று சுருக்கமாகக் கூறினார். மக்களுக்கு விளங்கவில்லை. அறிஞர் விளக்கினார் இப்படி :
'அதிகம் உண்டு பழகியவன் பசி தாங்காமல் இறந்துவிட்டான். அளவோடு உண்டு பழகியவன் பசியைச் சமாளிக்கும் திறன்பெற்று உயிர் பிழைத்தான்.'
🌸 குர்ஆன் கூறும் ஒரு பழங்கால வரலாறு!
இஸ்ரவேலர்களது மன்னர் தாலூத் பல்லாயிரக் கணக்கான படை வீரர்களுடன் பைத்துல் முகத்திலிருந்து போருக்கு ஆள் திரட்டும்போது முதியோர், நோயாளிகள் தவிர எல்லாரும் படையில் இணைந்தனர்.
அப்போது தாலூத் அவர்களை நோக்கி, 'நீங்கள் எல்லாரும் புறப்பட வேண்டாம்.
• புதுவீடு கட்டிக்கொண்டிருப்பவர்
• புதிதாக திருமணமுடித்தவர்
• தொழிலே கதியென்று கிடப்பவர்
• கடன் சுமையால் சிரமப்படுபவர்
இவர்கள் என்னுடன் வரவேண்டாம். நிதானமானச் செயல்படும் உள உறுதி கொண்ட இளைஞர்கள் என்னுடன் வரட்டும்.' என்றார்.
அது கடுமையான வெயில்காலம். தண்ணீர் தேவை குறித்து படைவீரர்கள் தாலூத்திடம் முறையிட்டபோது, வழியில் ஓர் ஆறு வரும். அந்த ஆற்றின் மூலம் இறைவன் உங்களைச் சோதிப்பான்.
அதில் குறைவாக நீர் அருந்தி, மன நிறைவு பெற்றவர் என்னைப் பின்பற்றியவர். அளவுக்கு அதிகமாக நீர் அருந்தி பேராசை கொண்டவர் என்னைப் பின்பற்றியவர் அல்லர் என்று கூறினார்.
ஆனால், ஆற்றருகே படையினர் வந்தபோது எண்பதாயிரம் பேர்களில் வெறும் முன்னூற்றுப் பதி மூன்று பேர்தான் தாலூத்தின் சொல்படி குறைவாக நீரருந்தினர். ஏனையோர் அதை மீறி நடந்தனர்.
பத்ரில் கலந்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கையான முன்னூற்றுப் பதிமூன்று பேரே, தாலூத்துடன் ஆற்றைக் கடந்தோரின் எண்ணிக்கையும் என்று பராஉ பின் ஆஜிப் (ரளி) அறிவிக்கிறார். [புகாரி]
இறை கட்டளைக்கு மாற்றமாக அதிகளவு நீரருந்தியோர் உதடுகள் காய்ந்து அதிக தாகத் துக்குள்ளாகி தளர்ச்சியடைந்தனர். அவர்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. எதிரிப் படையினரின் எண்ணிக்கையைக் கண்டு பயந்து 'எங்களால் போரில் கலந்துகொள்ள முடியாது' என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.
ஆனால், குறைந்த அளவு நீர் அருந்தியோருக்கு அதுவே அவர்களது தாகம் தீர்க்கப் போதுமான தாக இருந்தது. அதன்மூலம் அவர்கள் சக்தி பெற்றனர்; நம்பிக்கை பலம் பெற்றனர். எனவே உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் ஆற்றைக் கடந்தனர்.
அப்போது குறைந்த எண்ணிக்கையுடையோர் அந்த பெரும்பான்மையோரைப் பார்த்துக் கூறிய மந்திர வார்த்தைதான் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்.
'எத்தனையோ சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை இறைவன் உதவியால் வென்றெடுத்துள்ளது. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கி றான்.' [02 : 249]

நீ திருந்து! உலகம் திருந்தும்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

நீ திருந்து! உலகம் திருந்தும்!
'எந்தச் சமுதாயத்தவரும் தங்களிடம் உள்ள நல்லதை மாற்றிக்கொள்ளாதவரை, நிச்சயமாக இறைவனும் அவர்களுக்கு வழங்கிய எந்தவோர் அருட்கொடை யையும் மாற்றுவதில்லை.'
[குர்ஆன் : 08:53]
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நாட்டினர், மொழியினர், இனத்தினர், கூட்டத்தினர், கட்சி யினர், அமைப்பினர் சிலகாலம் சுகவாழ்வின் உச்சத்தில் இருப்பர்.
ஆனால், அடுத்த சில காலகட்டத்தில் மிகக்
கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். காரணம்? அவர்கள் தங்களது வாழ்க்கையில் முறைதவறி நடந்திருப்பர். அதுவே அவர்களது இழிநிலைக்குக் காரணம்.
ஒருவன் நாடாளும் தகுதி பெற்று மிகப்பெரும் பதவியில் அமர்த்தப்படுவான். மீடியாக்கள் அவனைத் தூக்கோ தூக்கென்று தூக்கி புகழின் உச்சாணிக்கொப்பில் வைக்கும்.
ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் திடீரென கீழே இறக்கப்பட்டுவிடுவான். காரணம்? அவன் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேசமக்களுக்கு அநீதியிழைத்தி ருப்பான்.
ஒருவன் தனது இனிய வாதத்திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருப்பான். மக்கள் அவனை 'ஓஹோ' என்று புகழ்ந்து மகிழ்வார்கள்.
ஆனால் திடீரென பார்த்தால், அதேமக்களால் தூற்றப்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பான். காரணம்? அவன் வெளியே ஒரு வேஷமும் உள்ளே விஷமமும் பண்ணி தனது மரியாதையை இழந்திருப்பான்.
ஃபிர்அவ்னின் சமூகத்தவருக்கு இறைவன் உலகில் யாருக்கும் வழங்கிடாத பல்வேறு வகை அருட்கொடைகளை வழங்கினான். ஆனால், அவர்களது பாவங்கள் காரணமாக அவர்களுக்கு, தான் வழங்கியிருந்த சுக போகங்களை அவர்களிடமிருந்து அவன் பறித்துக்கொண்டான்.
ஆக இறைவன், தான் வழங்கிய ஓர் அருளை அநி யாயமாகப் பறிப்பதில்லை. மனிதர்கள் இறை வனுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வ தன் மூலமே அதை இழந்துவிடுவார்கள்.
இதேபோல்தான் தீயவன் நல்லவனாவதும் உள்ளது. ஒருவன் தனது தவறுகளை உணர்ந்து தன்னைத்தானே திருத்திக்கொள்ளும்போது இறைவனும் அவன்மீது தனது அருளைப் பொழிவான்.

🌸 பாடமும் படிப்பினையும்
தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் இந்த உலகமும் நிச்சயம் சரியாகும்..!
'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரை, நிச்சயமாக இறைவன் அவர்களை மாற்றுவதில்லை.' [குர்ஆன் 13 : 11]

🌸 செலவின்றி சிறுநீர் பிரிதல்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

அளவற்ற அருட்கொடைகள்!
மனிதர்களாகிய நமக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணிலடங்காதவை. இதோ சில உதாரணங்கள் :
🌸 செலவின்றி சிறுநீர் பிரிதல்!
சரியாக சிறுநீர் வெளியேறாமல் வயதான ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேறுவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு சிறுநீர் வெளியேற்றப் படுகிறது.
சில நாட்களுக்குப்பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப் படுகிறார். அவருக்கு செய்யப்பட மருத்துவத்துக் காக பில் தரப்படுகிறது. அதைப் பார்த்துவிட்டு முதியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள். இதைக் கண்ட மருத்துவர்கள், 'ஏன் பெரியவரே அழுகிறீர்கள்' என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார்.
அருகிலிருந்த உறவினர்கள் மீண்டும் கேட்க, கண் களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார் : 'நான் என்னிடம் தரப்பட்ட மருத்துவ செலவைப் பார்த்து அழுகின்றேன் என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம்,
இரு நாள்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு தொகை பணம் கேட்கின்றீர் களே! ஆனால், அருளும் அன்புமுடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறிதும் சிரமமின்றி சிறுநீர் வெளியாக்கியதற்காக இதுவரை என்னிடம் ஒரு நயா பைசாகூட கேட்டு பில் அனுப்பவில்லையே, என்று எனது இறைவ னின் அருளை நினைத்து அழுகின்றேன்!' என்றார்.

வாழ்க்கை - தேர்வு

Life
A little hard test
Many have failed because of Copying People someone                                                                           Does not know the unique question.

Tuesday, 23 October 2018

தூங்காத போழுதில்

இரவு இன்னும் மீதம் இருந்தது தூக்கம் தொலைந்து போனது

கனவுகள் விரைந்து கொண்டு இருந்தன இரவின்
இரகசியங்களைச் சுமந்து கொண்டு எல்லாவற்றையும்
மறைத்து அணைந்து போகும் விளக்குகள் இன்னும் மின்னிக்கொண்டிருந்தன

பொழுதை கட்டி இழுத்து வரப்போனவன்
கனவில் துயில்கொண்டேன் ; - எனினும்

விழிப்பு நினைவுகளை தின்று கொண்டிருந்தன

கற்பனைகள் இராட்சத்தனமாய்
பயமுறித்தின

நிமிடங்கள் யுகமாய் கடந்தன

திசையெங்கும் ஒளிப்பிறபாகம்
பரவிய போது உறங்கிப்போனேன்

                    --கயஸ்

Wednesday, 17 October 2018

அறிஞர்களின்தேவை - காலத்தின்கட்டாயம் (03)

அரபி மதரஸாக்களில் தேவையற்ற காலத்துக்கு ஒவ்வாத
பாடங்கள் கற்பிக்கப் படுவதாக பொதுவில் ஒரு பேச்சுண்டு
.
காலத்தோடு சேர்ந்து மாறுதலோடு பயணிப்பதுதான் கல்வி.
காலமாற்றங்களுக்கு ஏற்ப புதுப்புதுக் கருத்துகளோடு மிளிர்கின்றது
இஸ்லாமியக் கல்வியும்
.
எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரன் எழுதிய கட்டுரை ஒன்றை கீழே தந்துள்ளேன்
அதைக் கண்ணுற்றால் ‘அங்கு’ என்னவெல்லாம் கற்பிக்கின்றார்கள் என்பது ஓரளவு விளங்கும்
.
இப்பாடங்கள் யாவும் இன்றும் வீரியத்தோடு கற்பிக்கப்படுகின்றனவா? என்பதை பிறகு அடுத்த பதிவில் பார்ப்போம்
.
அரபி மதரஸாக்களா ?
அறிவியல் கல்லூரிகளா ?
நம் அரபி மதரஸாக்களில் போதிக்கப்படும் பாட திட்டங்களின்சுருக்கமான ஓர் அட்டவணையை உங்களுக்கு சொல்றேன் .
1 ) தஃப்ஸீர் - குர் ஆன் விளக்கவுரை - (Commentary .)
.
2) ஹதீஸ் - நபிமொழி - (Tradition)
.
3) பிக்ஹ் ஃபராயிள் - சட்டத்துறை _(Mon Law and Jurisprudence ) பாகப்பிரிவினை .
.
4 ) உஸூலுல் ஹதீஸ் _ நபி மொழி ஆதாரங்கள் - ( principles of Hadith ) -
.
5) உஸுலுல் ஃ பிக்ஹ் - சட்டத்துறை ஆதாரங்கள் கோர்ப்பு (principles of mon Law and Jurisprudence.)
.
6) தஸவ்வுஃப் - ஆத்ம ஞானக்கலை (Biography )
.
7) தாரீக் - சாத்திரம் (Rhetoric )
.
8) சீரத் - இதிகாசம் -(History)
.
9) மஆனீ - அணியிலக்கணம் .(mythology )
.
10 ) மன்தீக் - ( Logic ) பேச்சுக்கலை (oratory)
.
II ) முனாளரா - தர்க்க சாஸ்திரம் - (logic)
.
12) அகாயித் - மத நம்பிக்கைகள் (Diseussion)
கொள்கை (Dogma)
.
13) ஹிக்மத் - தத்துவக் கலை (Geometry Astronomy )
.
14) அதப் - இலக்கியம் (prosody )
.
15) ஹன்தஸா - வரைபடக் கணிதம்
.
16) ஹை அத் - வான சாஸ்திரம் (syntax )
.
17) அருழ் . சர்ப் , நஹ்வு - யாப்பிலக்கணம் , சொல்லிணக்கணம் (Etymology ). சொற்புணரிலக்கணம்
.
20) ஹிஸாப் -கணிதம் (mathematics )
.
21) இன்ஷஃ _ அரபி மொழி தேர்ச்சி (composition and Essay writing )
.
22) கிராஅத் - திருமறை திருத்தமாக ஓதுதல்
( Recitation)
.
23) தொண்ம இயல் (mythology )
.
இது போன்ற இன்னும் பல கலைகளும் அரபி மதரஸாக்களில் கற்பிக்கப்பட்டு பல்கலைக்கழகமாகவே விளங்குகிறது .
.
ரஹ்மத் ராஜகுமாரன்
.
Rahmath Rajakumaran

Tuesday, 16 October 2018

அறிஞர்களின்தேவை -காலத்தின்கட்டாயம் (02)

Abdurrahman Umari

அறிஞர்கள் தேவை என நாம் சொல்லிக் கொண்டுள்ளோம்
அறிஞர்கள் தமது முழுப்பொருளின் பொறுப்புணர்ந்து
செயல்படுகின்றார்களா?
தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றார்களா?
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளனரா?
.
என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும்
அவற்றில் சில கோணங்களைப் பற்றி பேசவே
இக்கட்டுரை
.
ஆலிம்கள் என்னும் பெயரில் உள்ளோர் எப்படியெல்லாம்
வருமானம் ஈட்டலாம்? என்பதற்கு பலருமின்று கருத்துகளை பகிர்கிறார்கள்
.
வருமானம் ஈட்டுவதே குறிக்கோளென்றால் ஆலிம் பயில்வானேன்?
அறிவைக் கற்று அதன்வழி சமூகத்தை நடத்திச்செல்வதே அறிஞர்தம்
பணி, அவராற்றும் சமூகக்கடமை
.
மளிகைக்கடை வைத்தோ பார்ட் டைம் ஜாப் பார்த்தோ வருமானம் ஈட்ட
அவர் ஏன் அறிவைக் கற்கவேண்டும்
.
அதற்குரிய தொழிற்திறன் பயிற்சிகளைப் பெற்றால் போதாதா?
.
இன்று ஆலிம்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள், எதிர்கொள்ள இயலாமல் தத்தளிக்கின்ற சிக்கல்களுக்காக காரணங்களும் தீர்வுகளும் வேறு
.
உண்மையில் அவற்றைப் பற்றி பேச இன்று யாரும் தயாராக இல்லை
அறிந்தோர் அவற்றை அடைய முயன்றால் எட்டிவிடுவோர் போன்றோர்
ஏனோ இவைகுறித்து பேசாமல் மௌனம் காக்கின்றார்கள்
.
இல்ம் என்பது இமாமத் பணியை நிறைவேற்ற
.
இமாமத் என்பது ஒரு வேலை, பணி அல்ல. அது பொறுப்பு
.
சமூகத்தின் இமாமாக இருந்தாலும் சரி, மொஹல்லாவின் இமாமாக இருந்தாலும் சரி, அது முதுகை அழுத்தும் பாரம். முடியாச்சுமை
.
அது முடியாமல் தவிப்போர் உண்மையிலேயே பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியோர். ஆற்றலும் வல்லமையும் மிக்க இறைவன் அவர்களுக்காக வானுலகிலிருந்து உதவியாளர்களை அனுப்பும் அளவு தகைமை உடையோர்
.
இன்று நிலைமை இதுவன்று. இதற்கு நேர் எதிர்
.
பள்ளி நிர்வாகிகளிடம் மதிப்பில்லை, மொஹல்லா மக்களிடம் மரியாதையில்லை,
வாழ்க்கைக்கு தேவையான போதிய வருமானம் ஈட்ட வழியில்லை
அவ்வளவு ஏன், மக்தப் மதரஸா மாணவர்களிடம் கூட எடுபடுவதில்லை
.
இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய ஆளுமைத்திறனில் இருக்கின்றது
அவ்வாளுமைத்திறனை உருவாக்கும் பாடசாலைகளில் இருக்கின்றது
.
ஏட்டுக்கல்வியை (கற்றோரை அல்ல) மனனமிட்டோரையை பாடசாலைகள் உருவாக்குகின்றன.
உம்மத்திற்கு தலைமையேற்க வல்ல, ஒரு மொஹல்லாவை திறம்பட நடத்திச்செல்ல வல்ல, இமாம்களை அதாவது தலைவர்களை மதரஸாக்கள் உருவாக்குவதே கிடையாது
.
இஸ்லாமிய பாடசாலைகளின் குறியிலக்காக இது இல்லவே இல்லை

அறிஞர்களின் தேவை - காலத்தின் கட்டாயம் (01)


Abdurrahman Umari
.
இல்ம் என்றால் என்ன?
ஒரு பொருளை, ஒரு கருத்தை, ஒரு விஷயத்தை உள்ளது உள்ளவாறு கற்றோ உணர்ந்தோ அதன் மெய்யியல்பை அறிவது ‘இல்ம்’ எனப்படுகின்றது
.
அவ்வகையில் இஸ்லாமிய நன்னெறியை இயன்றளவு (ஆம், இயன்றளவு) கற்றறிந்து, இந்நன்னெறியின் முழுமூலமான பேரருளாளனோடு நெருங்கிய தொடர்பை அரும்பாடுபட்டுப் பெற்று, சிந்தையிலும் உள்ளத்திலும் ஈமானியப் பேரொளியை நிரப்பிக்கொள்ளும் நற்செயலில் அயராது ஈடுபட்டு, அதன் பிரதிபலிப்பாய் தம் புறச்செயல்களை சீராக்கிக் கொள்ளும் மேன்மரபினரே இஸ்லாமியப் பெருவழக்கில் ‘ஆலிம்’ என்றுரைக்கப்படுவர்
.
இத்தகைய சீர்மிகு உலமாக்களின் பணி முன்மாதிரி இஸ்லாமிய உம்மத்தை உருவாக்குவதிலும் முழுமையானதோர் அழைப்பியல் சமூகமான அதனைப் பரிணமிக்கச் செய்வதிலும் பெரும் பங்காற்றுகின்றது
.
முன்னெப்போதையும் விட மிகுதியாக இக்காலத்தில் சான்றோர்களாக தம்மை வார்ப்படுத்திக் கொள்ளும் சீர்மிகு உலமாக்களின் தேவை இன்றைய உம்மத்திற்கு குறிப்பாக தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது என்றெண்ணுகின்றேன்
.
ஆற்றலும் யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய அல்லாஹ்வால் தேர்வாகி அறிவமுதம் வழங்கப்பட்ட அறிஞர் பெருந்தகைகள் ஒவ்வொருவராக உலகுபிரிந்து செல்லும்போதும் இக்கவலை மிகுந்து இருளாய் உள்ளத்தை கவ்வுகின்றது
.
இவ்வழியாகத்தான் அறிவு அகற்றப்படும் என இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்
.
அறிவைப் போற்றுவதற்காக அல்ல, அறிவை பாதுகாத்து உம்மத்திற்கு உரிய முறையில் ஊட்டி, உய்வடையச் செய்து தன் முழுப்பொருளில் ஓர் இஸ்லாமிய உம்மத்தாக - முற்றிலும் அடிபணிந்தும் அவ்வடிபணிதலை நோக்கி உலக மாந்தரை அழைத்தும் தான் தோன்றிய கடமையை - சிறப்புமிகு உம்மத்தாக நிறைவேற்ற வல்ல ஓர் உம்மத்தாக உருவாக்க அறிவுமரபினர் தேவை எனும் இக்கவலை எத்தனை பேர் உள்ளத்தில் நீங்காதுநிறைந்து துயில்மறந்து இறைவனிடம் மன்றாட வைத்துக்கொண்டுள்ளது என்பதை நானறியேன்
.
ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாய் செய்யத்தக்கதன்று, இப்பணி!!. ஒவ்வொரு மொஹல்லாவிலும் தவறாமல் செய்தேயாக வேண்டிய திருப்பணி இது
.
அறிவுக்கலைகளும் தெளிஞானமும் மார்க்கப் புலமையும் வான்மறை மற்றும் வழிகாட்டும் நபிமொழிகளின் நுண்ணறிவும் சிறுகச்சிறுக சன்னம் சன்னமாக மறைந்து கொண்டுள்ளது என்பதை ஈமானிய கண்ணோட்டத்தோடு உம்மத்தை உற்றுநோக்குகின்ற ஒவ்வொருவராலும் அறியமுடிகின்றது
.
என்னதான் இதற்கு தீர்வு? இந்த உம்மத் இப்படியே கவனிப்பாரற்று கீழ்நிலையில் - சிரஞ்சீவி மூலிகைகள் கைக்கொண்டவாறே - மடிந்து போகவேண்டுமா?
.
வானுயர எழுகின்ற சுனாமிப் பெருங்காற்றால் சூறையாடப்பட்டு இப்பெரும் கலம் அழிந்தே போகும் என்றே விதியிருந்தபோதிலும் கடைசி மூச்சை நிறுத்தும் வரை இழுத்துப்பிடித்து காப்பாற்றும் பணியில் இறங்கக்கூடாதா?
.
உலமாக்களால் மட்டுமே இந்த உம்மத் சீர்பெறும் சிறப்படையும் என வான்மறை ஆய்வாளரான இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்
.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று தமது பெயருக்கேற்ப உண்மையிலேயே அறிஞர்களாக திகழும் பெருமான்கள் பலரை நானறிவேன்
.
அவர்களின் உள்ளத்திலுமா இல்லாமற் போயிற்று இக்கவலை? என்றொரு ஏக்கத்தையே எடுத்துரைக்கின்றேன்
.
வல்லதீன ஜாஹதூ ஃபீனா லநஹ்தியன்னஹும் ஸுபுலனா - என்பது திருமறை அருள்வாக்கு அல்லவா? வாக்கல்ல அது, உத்தரவாதம்!
.
நம் கண்முன்னால் ஏன் இக்கலம் மூழ்கவேண்டும்? சாகும்வரை மூழ்காது காப்பாற்ற முயற்சிப்போமே? செத்தபிறகு ஏதாவது ஆனாலும் நாம் அறியமாட்டோம், அல்லவா?
.
குறைந்தபட்சம் விசாரணைக் கொடுநாளில் தயங்கி தயங்கி சொல்வதற்காவது நம்மிடம் சாக்கொன்று இருக்குமில்லையா?
.
(தொடரும்)

Sunday, 14 October 2018

தக்வா எனும் ஆடை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று வழக்கமாக ஓதும் போது இரண்டு வசனத் தொடர் கண்கல்ங்கச் செய்தது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

நாம் நன்றி செலுத்துவது குறைவு என்று முதல் பத்து வசனங்களில் சொல்லிவிட்டு அது நமது தந்தை ஆதம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து இருக்கிறது என்கிறான்,

ஆதமைப் படைத்து வானவர்களைச் சிரம் பணியுங்கள் என்று கட்டளையிட்ட போது; இப்லீஸைத் தவிர என்று ஆரம்பித்து இப்லீஸ் இறைவனிடம் உறையாடி வாசகம் தொடர்கிறது அடுத்த 5 வசனங்களில்.. இறுதியில் இறைவன் அவகாசம் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறான்.

அத்தியாயம் 7 : குகைவாசிகள்

வசனம் 15

அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.

قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ‏ 

இந்த அவகாசம் இப்லீஸுக்கு மட்டும்தானா அல்லது மனித இனத்திற்கும் தான்.  இதோ இந்த உலக வாழ்க்கையில் நம்முடைய நடைமுறைகளை நாம் தனித்திருந்து சிந்திப்போமானால் அத்தனை தவறுகளும் கண் முன்னால் வந்து செல்லும். எவ்வளவு நன்றி கொன்றவர்களாக நாம் வாழ்கிறோம் என்று புரியும்.

இந்த வசனத்திலிருந்து தொடர்ந்து கனக்கும் எமது இதயம் இறைவன் மன்னிப்பளித்தாக கூறும் 23 வசனம் வரை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லியது.  ஒரு சம்பவம் அத்தனை அழகாக வேறு எந்த ஒரு சொல்லாடலால் இவ்வளவு எளிமையாக நம்மை உருகச் செய்யுமா என்று கண் குத்தி மீள்கிறேன்.

வசனம் 23

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”

 رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ 


இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்

மன்னித்த இறைவன் அடுத்த வசனத்தில் மிகப் பெரிய சங்கதியைத் தருகிறான்.  நாம் உண்மையிலேயே ஒருவருக்கு ஒருவர் பகைவர் ஆவோம் என்பது தான்; 

 عَدُوٌّ‌

எதற்காக நாம் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று தெளியாமலே இன்னும் வாதிடுகிறோம்.  இறைவன் தொடர்ந்து சொல்லும் போது  உங்களின் உடலுக்குப் பாதுகாப்பகவும் அலங்காரமாகவும் ஆடையைத் தந்துள்ளதாகக் கூறிவிட்டு  தக்வா எனும் இறையச்சம் தான் சிறந்த ஆடை என்கிறான்.

لِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ‌

ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.

இறைவனின் கட்டளைகளில் நமக்கு சஞ்சலங்களை ஏற்படுத்தி நமது ஆடைகளைக் களைந்து நமது இவ்வுலக நிலையையும்  மறுமையிலும் தோல்வி பெறச் செய்வதுதான். நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.

இவ்வாறு தொடரும் இந்த வசனம் மிகப் பெரும் தொடர் நிகழ்வாக வசனம்  43 ல் சுவனவாசிகளிடம் அந்த பகைவராவீர்கள் என்பதினை  தெளிவு படுத்துகிறான்.

وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ

மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம்.

 இந்தக் காழ்ப்புணர்வு நம்மிடையே இருந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளுதல் சகிப்புத்தன்மையுடன் இறைவன் ஏற்பாடு என்றிருந்தால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிதான்.
அதை அந்த சுவனவாசிகள் இவ்வாறு சொல்வார்கள்.

“எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

தொடர்ந்து  50, 51 வசனத்தில் ஒரு முறை இதயம் உலுக்கியது மீண்டும் மீண்டும் வசனத்தினை வாசிக்கிறேன். 


மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”

இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.


யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.


இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



Monday, 8 October 2018

சூரா முல்க் - கிரா அத் ஷெய்க் ஹானி அல் ரிபாயி.

இன்னமும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய வசனங்கள் எவ்வளவு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வசனங்களைப் பார்த்து மொழியாக்கங்களை உள்வாங்கியே வாசிக்கிறேன்.


இது போன்ற கனமான விசும்பலில் இன்னும் பல அர்த்தங்கள் விளங்குகிறது. நம்மை மீண்டும் ஒரு முறை கலங்கச் செய்கிறது.


வசனம் எண் 4 :

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

இந்த வசனத்தின் மொழியக்கம் கேட்ட நினைவுகள் இருபது ஆண்டு பழைய செய்தியை நினைவூட்டியது.

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!

வசனம் 7 இறுதி வார்த்தைகள்
அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும்.

அல்லாஹும்ம அஜிர்னி மினன் நார் -  இறைவா! நரக நெருப்பிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!


வசனம் 11

தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.


வசனம் 16

வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா?

நில-நடுக்கங்களும் ஆழிப்பேரலைகளும் நமக்கு மிகவும் பரிச்சயமில்லாதவை ஆனால் இந்த வசனம் அவ்வப்போது நடக்கும் நிலநடுக்கங்களைவிட நம்மை உலுக்குவதில் ஆன்மா ஆட்டம் காண்கிறது.



சூரா அல் முல்க் - ஷெய்க் ஹானி அல் ரிபாயி


Sunday, 30 September 2018

இந்த ஸூரா இவரை சொர்க்கத்தில் சேர்க்கும் - Mufti Yoosuff Haniffa



அல்ஹம்துலில்லாஹ் 

இந்த காணொளியில் முப்தி சொல்வது போல் தம் சகோதரர்களைப் பிரித்து இயக்க முத்திரையின் காரணமாக இறைவனைப் பின்னுக்குத் தள்ளி இயக்கத்திற்கான பள்ளிகளாக அதிகமாக உருவாகி அதன் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடு என்று இன்று நம் கண் முன்னால் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயம் என்ன செய்யப் போகிறது. 

இறைவா! 
உன்னையே வணங்குகிறோம் 
உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 


மனங்களில் ஏற்படும் புரிதல்களால் விரிசல்கள் ஏற்பட்டு பிணங்கிக்கொள்ளும் எதிர்மறையான வரம்புகளை மீறும் செயல்களிலிருந்து எங்களையும் சமூகத்தினையும் பாதுகாப்பாயாக! 




சாரு நிவேதிதா

கலைஞருக்கு ஏன் நன்றி சொல்லவேண்டும் ? அவர் என்ன செய்தார் என்பது பற்றி பேசுகிறார் சாரு நிவேதிதா


சாரு சில உண்மைகளை முன் வைக்கிறார் அவரது மென்மையான ஆனாலும் அழுத்தமான பதிவுகளை நாம் குறிப்பில் கொள்ளலாம். இதில் அவர் சொல்வதை எளிதாக நம் மேற்கோள் காட்ட இயலும்.

ஹிட்லர் - பாசிசம் - மேட்டுக்குடி - தமிழ் நாடு




Thursday, 27 September 2018

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
ஒரு சிறுவனுக்கு காது சரியாகக் கேட்பதில் பிரச்னை இருந்ததால், காது கேட்கும் கருவி ஒன்றை பொருத்தினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அதைப் பயன்படுத்த மறுத்து விட்டான். ஏன் தெரியுமா? அதிகச் சத்தமாகக் கேட்கிறதாம்! அதற்கு மெலிதாகக் கேட்பதே பரவாயில்லை என்று சொல்லிவிட்டான்.
இன்னொரு தகவல், இன்னும் ஆச்சரியமானது.
சிறு வயது முதல் காதுகேட்காத ஒரு பெண், பல வருடங்கள் கழித்து கனடாவில் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். தலைக்குள் ஒரு கருவியை வைக்கிறார்கள். இப்போது அவருக்கும் அதே போல பிரச்னை!
என்னவென்றால், நுண்ணிய ஓசைகளும் பெரிதாகக் கேட்கின்றனவாம். ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினால், எழுதும் அந்த ஓசைகூட கேட்கிறதாம். பத்தாவது மாடியில் இருக்கும்போது, கீழே செல்லும் வண்டிகளின் சப்தம் கேட்கிறதாம்.
அந்தச் சிறுவனாவது கருவியைக் கழட்டிப் போட்டு விட்டான். இப்பெண்ணுக்கோ தலைக்குள் கருவி. எத்தனைமுறை அறுவை சிகிச்சை செய்ய முடியும்? விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனையெத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும், இறைவனின் படைப்பின் துல்லியத்தை விஞ்ஞானத்தால் அடையவே முடியாது!
.
நபியே! நீர் கூறுவீராக : 'இறைவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; எனினும், மிகவும் சொற்பமாகவே நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். [67 : 23]

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

பௌதீக ரீதியாக எங்களை நீங்கள் பேணி நடப்பதுபோலவே, ஆன்மிக ரீதியாகவும் பேணி நடக்க வேண்டும். இதோ, அதற்கு சில வழிகாட்டல்கள் :
🔈குறையப்பேசி நிறையக்கேளுங்கள்!
பேச ஒரு வாய். ஆனால், கேட்க இரண்டு காதுகள். ஏன் தெரியுமா? வழவழவென அதிகமாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு நல்லவற்றை நிறைய நீங்கள் கேட்கவேண்டும். இனிமையான குர்ஆன் கிராஅத், உள்ளத்தைப் பண்படுத்தும் பயான், சிந்தனையைத் தூண்டும் கருத்தாழமிக்க பாடல்கள் என நல்ல அம்சங்களை நிறைய கேட்க வேண்டும்.
🔈பிறர் பேசுவதையும் செவிமடுங்கள்!
சிலர் பேசினால், பேசிக்கொண்டே இருப்பார்கள். பிறரைப் பேச விடமாட்டார்கள். செவி சாய்த்து கேட்கவும் மாட்டார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் யாராவது ஒருவர் பேசினால், அவர் தான் சொல்ல வந்ததைப் பேசி முடிக்கும்வரை இடையில் குறுக்கிட்டுப் பேசமாட்டார்கள். செவி சாய்த்து அவர் சொல்லவந்ததைக் கேட்பார்கள்.
🔈நல்லவற்றையே கேளுங்கள்!
கண்களால் நல்லவற்றை, அனுமதிக்கப்
பட்டவற்றைப் பார்க்கவேண்டும் என்பது போலவே, நல்லவற்றை அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே நீங்கள் கேட்கவேண்டும்.
தவறான செய்திகளைக் கேட்டு லயிக்க, பொய், அவதூறு போன்றவற்றை கேட்டு பொழுதுபோக்க எங்களை ஒருவன் பயன்படுத்தினால், அவனது காதுகள் உண்மையான ஒரு முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
ஆபாசமான வார்த்தைகளை, கொஞ்சல்களைக்
இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் பாடல்களைக் கேட்டு இரசிக்க எங்களை ஒருவன் பயன்படுத்தி னால், அவனது காதுகளும் ஓர் உண்மையான முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
செவிப்புலன்களாகிய நாங்கள் இறைவனின் இனிய அருட்கொடைகள். அவற்றைப் பாவமான வற்றுக்கு பயன்படுத்தக் கூடாது. இறையருட்
கொடைக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால், அவற்றை இறைவனுக்கு அடிபணியும் அம்சத்தில்தான் பயன்படுத்தவேண்டும்.
யூதர்களை நிந்தனை செய்து திருக்குர்ஆன், 'அவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்பவர்கள்; விலக்கப்பட்டதையே அதிகமாக உண்பவர்கள்' [05 : 42] என்று குறிப்பிடும்.
🔈ஒட்டுக் கேட்காதீர்கள்!
'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில், அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில், அவர்களது உரையாடலை ஒட்டுக் கேட்கிறவரது காதில், மறுமைநாளில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றப்படும்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். [புகாரி 7042]
🔈ஆபாசப் பேச்சுகளைக் கேட்காதீர்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு அவனது விதியில் எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான்.
கண்கள் செய்யும் விபசாரம் தவறானவற்றைப் பார்ப்பது. காதுகள் செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுகளைச் செவியுறுவது. நாவு செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுக்களைப் பேசுவது. கை செய்யும் விபசாரம் அந்நியப் பெண்ணைப் பற்றுவது. கால் செய்யும் விபசாரம் தவறான உறவைத் தேடி அடியெடுத்து வைப்பது.
மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. [ஸஹீஹ் முஸ்லிம் 5165]
🔈கோள், புறம் கேளாதீர்கள்!
தத்துவஞானி சாக்ரட்டீஸிடம் ஒருவன் வந்து, 'உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வந்தேன்' என்றான்.
'அவசரப்படாதே! அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்க்க வேண்டும்!'
'மூன்று சல்லடைகளா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!'
• முதல் சல்லடை : 'நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதா?
‘அது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்!'
• இரண்டாவது சல்லடை : 'நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?'
‘இல்லை!'
• மூன்றாவது சல்லடை : 'நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடிய செய்தியா?'
‘இல்லை!’
'ஆக, நீ என்னிடம் சொல்லவந்த செய்தி உண்மை யானதல்ல; நல்ல செய்தியும் அல்ல; அதனால் யாருக்கும் நன்மையும் ஏற்படப்போவதில்லை. அப்படித்தானே?'
‘ஆமாம்!’
'நண்பனே! அப்படிப்பட்ட ஒரு செய்தியை நீ சொல்லி, நான் அதைக் கேட்டு ஏன் நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?'
வந்தவன் வாயை மூடிக்கொண்டான்.
- இன்னும் கேட்போம், இன்ஷா அல்லாஹ்!

பார்வை - Mansoor Ali

அறிவியல் "பார்வை" என்பது எப்படிப்பட்டது என்று பார்ப்போமா?
"சூரியன் கிழக்கே உதிக்கிறது! மேற்கே மறைகிறது!"
ஆனால் சூரியன் உதிப்பதும் இல்லை! மறைவதும் இல்லை! அப்படித்தானே?
இதனை அல்லாஹ் எப்படி நமக்குப் புரிய வைக்கிறான் தெரியுமா?
சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் (துல்கர்னைன்) சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; (18:86)
சூரியன் சேற்று நீரில் மறைவதை நாம் பார்க்கலாம். ஆனால் ஒரு காலும் சூரியன் சேற்றில் மறைவதில்லை!
குர் ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை என்பதே என் கருத்தும்

அறிவு - Mansoor Ali

இறைவன் தனது தூதர்களுக்கு செய்தியை வழங்கிடும் முறைக்கு 'வஹி' என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை (Revelation) என்று அழைக்கலாம். தமிழில் அதனை 'வெளிப்படுத்துதல்' என்று மொழி பெயர்க்கலாம். எனினும் மொழி பெயர்ப்புகள் வஹி என்பதன் முழுமையான பொருளைத் தந்திட இயலாது. வஹி என்பது முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. இறைவன் தான் தெரிவு செய்திடும் மனிதர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வானவர் (angel) மூலமாக தனது செய்திகளை மிகச் சரியான சொற்களைக் (Exact words) கொண்டு படித்துக் காட்டி அவர் உள்ளத்தில் அப்படியே பதிய வைக்கும் அசாதாரணமானதொரு நிகழ்ச்சிக்குப் பெயர் தான் வஹி என்பது!

இந்த அனுபவம் இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. வேறு எவரும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது. எனவே இந்த வஹி எனும் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வேறு எவராலும் ஊகித்து அறிந்து கொண்டிட இயலாது!

எனவே வஹி மூலம் பெறப்பட்ட செய்தி - அந்த செய்தியைச் சொல்லிட இறைவனே தேர்ந்தெடுத்த சொற்கள் மூலமாக அப்படியே இறைத்தூதருக்கு வேத வசனங்களாகக் கொண்டு போய் சேர்க்கப்படுவதால் - பெறப்பட்ட அந்த செய்தியை 'இது ஊகம் தான்! இது கற்பனை தான்!' - என்று எண்ணி ஒதுக்கி விட முடியாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். ஒருவர் தனக்கு வஹி வருகிறது என்று பொய் சொல்லி விட்டால்? இந்தக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்து விட்டால், ஒருவர் உண்மையான இறைத்தூதர் தான் என நிருவப்பட்டு விட்டால் - இறைவனிடமிருந்து அவருக்கும் அவர் மூலமாக நம்மிடமும் வந்து சேர்க்கப்படும் 'இறைவனின் செய்தி'யின் யதார்த்த நிலை என்ன?

இறைவனோ எல்லாம் அறிந்தவன். இறைவனின் தூதரோ உண்மையானவர். எனவே வஹி மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்ற செய்தி - சத்தியமானது! சந்தேகத்துக்கு இடம் இல்லாதது! அந்தச் செய்தி குறித்து - அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லாமலும் இருக்கலாம் என்று பொத்தம் பொதுவாகக் கருத்துச் சொல்லிட இயலாது! - வஹி மூலம் பெறப்படும் ஒவ்வொரு சொல்லும் இறைவனுடையவை!
ஒவ்வொரு கருத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை! ஆதாரப் பூர்வமானவை! எனவே அறிவு என்றால் அது தான் அறிவு! சந்தேகத்துக்கு இடம் இல்லாத அறிவு! கோணல் இல்லாத அறிவு! அது பொய் என்று ஒதுக்கித் தள்ளி விட இயலாத அறிவு! - வஹியின் கருத்துக்கு மாற்றமான எதனையும் உண்மை என்று நிரூபித்திட இயலாத அளவுக்கு உறுதி வாய்ந்த அறிவு!

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். (18:1)

'வாடிக்கையாளர்கள் - Mansoor Ali

பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை ?
உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்!
அதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று! விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?
ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?
அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?
அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?
"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே!
அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.
"The world of science should be like a classical free enterprise market place with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...."
'விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு 'கிராக்கி' ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே!
நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் 'வியாபாரப் பொருட்களா'? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் 'விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?
ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற 'வாடிக்கையாளர்கள்' தான்!

Thursday, 20 September 2018

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

நாங்களும் பிற உயிரினங்களும்
முதுகெலும்பு உள்ள எல்லா விலங்குகளுக்கும் கேட்கும் தன்மை உண்டு. ஆனால், மீன்களுக்கு உங்களைப்போல வெளிச்செவி கிடையாது. உடல் முழுவதுமே உணர் செல்கள் உள்ளன.
இவற்றின் மூலம் அவை நீரில் ஏற்படும் அதிர்வலைகளையும் எதிரில் உள்ள பொருள்களையும் உணர்ந்து கொள்ளமுடிகிறது. தவளை, ஊர்வன, பறப்பன போன்றவற்றுக்கும் வெளிச்செவி இல்லை. நடுச்செவியும் உட்செவியும் உண்டு.
பெரும்பாலான பூச்சிகளின் செவிகள் உணர் கொம்புகளின் நுனியில் உள்ளன. கொசுக்களுக்கு அவற்றின் உணர்கொம்பிலும் ஈக்களுக்கு அவற்றின் கால்களிலும் பட்டாம்பூச்சி மற்றும் மூட்டைப்பூச்சிகளுக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் செவிப்புலன் உள்ளது.
பறக்கும் பாலூட்டிகளான வௌவால்கள் நீங்கள் கேட்க முடியாத ஒலிகளையும் கேட்கும் திறன் கொண்ட செவிகளைப் பெற்றுள்ளன. பொருள் களின் மீது மோதி எதிர்வரும் ஒலியலைகளை வைத்தே எதிரிலுள்ள பொருள்களின் தன்மையை வௌவால்கள் அறிந்துகொள்கின்றன.
இதேபோல, நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கலம் மற்றும் டால்பின்களும் நீரில் ஏற்படும் ஒலியலை களை வைத்து, பல்வேறு பொருள்களை அறிந்து கொள்கின்றன.
● பௌதீக ரீதியாக பேணவேண்டியவை :
கண்கள் பாதுகாப்பை விட எங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது, அவசியமானதும் கூட. அந்த வகையில் எங்களைப் பௌதீக ரீதியாக பேண வேண்டிய சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.
🔈எண்ணெய் ஊற்றாதீர்கள்!
சிலர் குளிக்கும் போது எங்களுக்குள் எண்ணெய் விட்டுக் கொள்கின்றனர்.பாம்புப் புற்றுக்குள் பால் ஊற்றுவதால் பாம்பு பால் குடிப்பதில்லை. அது போலத்தான் எங்களுக்குள் ஊற்றும் எண்ணெய் நிலையும். இதனால் ஒரு பயனுமில்லை. மாறாக, அதன்மூலம் எங்களுக்கு பாதிப்புதான் ஏற்படும். எங்களுக்குள் நீர் புகுந்தாலோ, வலித்தாலோ உடனே மருத்துவரை அணுகுங்கள். நீங்களே மருத்துவராகி மருத்துவம்செய்து எங்களைச் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்.
🔈குச்சியால் குடையாதீர்கள்!
எங்களில் அழுக்கு உள்ளது என்று ஹேர்பின், குச்சி, கம்பி, கோழி றகு என கையில் அகப்பட்டதை வைத்து தயவுசெய்து சுத்தம்செய்யும் வேலையில் இறங்கிவிடாதீர்கள். பஞ்சு சுற்றிய குச்சிகளைக் கூட (Buds) பயன்படுத்தக்கூடாது.
சாலையோரங்களில் எங்களைச் சுத்தம்செய்வதே ஒரு தொழிலாக நடக்கிறது. அடுத்தவர்கள் குடைந்துவிட்டால் உங்களுக்குச் சுகமாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு நல்லதல்ல. இப்படி நீங்கள் செய்வதால் செவிப்பறை கிழிந்துவிடும். லேசாக கிழிந்தால்கூட அப்புறம் நாங்கள் பேசுறது மட்டுமல்ல; யார் பேசுவதையும் உங்களால் கேட்கமுடியாது.
நாங்கள் மென்மையாக இருக்கிறோம் என்று இயற்கையே எங்களை எவ்வளவோ பாதுகாப்பில் வைத்திருக்கிறது. அதிகப்படியான மெழுகு இருந்தால், நாங்களே வெளியேற்றிவிடுவோம். எனவே, தயவுசெய்து நீங்கள் சுத்தம் செய்ய வேண்டாம். குளிக்கும்போது எங்களுக்குள் பஞ்சு வைத்துவிட்டுக் குளித்தால் தண்ணீர் உள்ளே சென்று தேங்கி, கிருமிகள் உருவாவதைத் தடுத்து விடலாம்.
🔈அதிகச் சத்தம் போடாதீர்கள்!
சத்தம் எங்களுக்குப் பிடிக்காது. உங்கள் நண்பருடன் ஓர் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவர் பேசும் சத்தம் முப்பது டெசிபல். இதுதான் ரொம்பப் பிடித்தமான அளவு. எப்போதும் இரைச்சலில் இருந்தால், அதிர வைக்கும் இசையைக் கேட்டால் எங்களது கேட்கும் திறன் பாதிக்கும்.
ஜப்பானியர் அதிகஉழைப்பு,வேலைசெய்வார்கள். ஓய்வுக்காக Silence Room அமைத்துக்கொள்வார் கள். அவர்கள் சைலன்ஸ் ரூம் அமைத்துக் கொள்கிற நிலையில், நாம் ரூமில் Silence please என்று எழுதி அறிவிப்புப்பலகை மாற்றிவைத்துக் கொண்டிருக்கிறோம்.
140 டெசிபலுக்கு மேலுள்ள ஒலியை நீங்கள் தொடர்ந்து கேட்கநேர்ந்தால், நாங்கள் கேட்கும் தன்மையை இழப்பது உறுதி. அதிகச் சத்தத்தில் பணிசெய்பவர்கள் எங்களுக்குள் பஞ்சை வைத்துக்கொள்வது நல்லது.
அன்று எங்களுக்கு அதிகபட்ச சவாலே இடியோசைதான். ஆனால், தற்போது இசை, பேச்சு என்று எதை எடுத்தாலும் சத்தச் சவால்கள்தான். முடிந்தவரை அதிகச்சத்தத்தை எங்களுக்குத் தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
🔈கிருமிகளை அண்டவிடாதீர்கள்!
எங்களது நடுப்பகுதியில் இருந்து தொண்டைக்கு யூஸ்டசியன் (Eustachian) என்ற குழாய் செல்கிறது. இதுதான் எங்களது எதிரி. நிறைய கிருமிகள் உள்ள பகுதி. இங்கிருந்து எளிதாக எங்களது நடுப்பகுதிக்கு அவை வந்து விடுகின்றன. எனவே, மூக்கில் சளி இருந்தால், கைகளால் அதைத் துடைக்காதீர்கள். கைகளைக் கழுவாமல் எங்களின் மேல் வைத்தால், எங்களையும் கிருமிகள் தொற்றிவிடும்.
🔈மருத்துவரைச் சந்திக்க மறக்காதீர்கள்!
வருடம் ஒருமுறை கண்மருத்துவரிடம் சென்று கண்ணைப் பரிசோதிப்பது போல, எங்களது சிறப்பு மருத்துவரிடமும் சென்று எங்கள் கேட்கும் திறன் குறித்தும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
- இன்னும் கேட்போம், இன்ஷா அல்லாஹ்!

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ


உங்களது தலைக்கு இருபுறமும் தசைகளால் ஆன சின்னதாக இரண்டு ஒலிபெருக்கிகள் இருக்கின்றனவே, அவைதான் காதுகளாகிய நாங்கள். பிறந்தவுடனேயே நாங்கள் எங்கள் பணியைச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்றாலும், வயது ஆக ஆக எங்களது கேட்கும் திறன் குறைந்து கொண்டே வரும்.
உள்காது வெளிக்காது என இருவகையாக நாங்கள் இருக்கிறோம். தலையின் இருபுற பக்கவாட்டுகளிலும் நீட்டிக் கொண்டிருக்கும் வெளிக்காது ஒரு சிறு பகுதிதான். வெளியிலுள்ள ஒலிகளைக் குவித்து செவிப்பாதைக்குள் செலுத்துவதும் ஒலிவரும் திசையைக் கண்டறிவதும்தான் எங்களது வெளிப்புறப் பகுதியின் பணி.
 எதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்?
'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்ற நாகூர் ஹனீஃபாவின் இன்னிசை, கொய் கொய்ங் என்ற கொசுவின் ரீங்காரம், அமைதியான நள்ளிரவில் டிக் டிக் என்ற கடிகார ஓசை என அனைத்தையும் கேட்போம் நாங்கள். நீங்கள் சேட்டைகள் பண்ணுகிறபோது உங்கள் தந்தை மற்றும் ஆசிரியர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டு ஆவென கத்துவதும் நாங்களே.
 நீங்கள் பேசுவதையும் கேட்கிறோம்!
வெளியில் இருந்து வரும் ஒலியை மாத்திரம் அல்ல, நீங்கள் பேசுவதையும் நாங்கள் கேட்போம். பேசும்போது உங்கள் வாயிலிருந்து வரும் ஒலியின் ஒரு பகுதி, நேரடியாக எங்களது டிரம்மைத் தட்டுகிறது. இன்னொரு பகுதி, கன்னத்தில் உள்ள எலும்புகள் வழியே உள்காதிற்குச் செல்கிறது. இப்படித்தான் நீங்கள் பேசுவது உங்களுக்கே கேட்கிறது.
 நாங்கள் எப்படிக் கேட்கிறோம்?
ஒலியலைகள் வெளிக்காதினைத் தொட்டவுடன் குகைபோன்ற செவிப்பாதை வழியே அவை நுழைகின்றன. அங்குள்ள செவிப்பறையில் மோதி, அதனுடன் தொடர்புடைய மூன்று நடுச்செவி எலும்புகளின் ஊடாக பயணித்து, பின்னர் உட்செவியில் உள்ள திரவம் மற்றும் அங்குள்ள உணர்செல்களைத் தாக்கி, அதன்பின் அது நரம்புச் செய்திகளாக மாற்றப்பட்டு, மூளையில் உள்ள கேட்கும் பகுதியை அடைகிறது.
இவ்வாறு நீண்ட பயணம் செய்தபிறகுதான் உங்களால் எந்த ஒரு ஒலியையும் கேட்க முடிகிறது. இதிலே ஆச்சரியப்படத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால், மேலே சொன்ன இந்தப் பயணம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடைபெறுவதுதான். சுப்ஹானல்லாஹ்!
 இறைவனின் அருட்கொடைகள்!
சத்தம் இல்லாமல் உங்களால் எவ்வளவு நேரம் இருக்கமுடியும்? ஐந்து நிமிடம்.அல்லது பத்து நிமிடம்.அதையும் தாண்டிப்போனால்,
அரைமணிநேரம்? அதற்குமேல் என்றால், உங்களையும் அறியாமல் ஒருவித பயம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்.
உங்களைச்சுற்றி மனிதர்களது பேச்சொலி, பறவைகளது குரல், வாகனஇரைச்சல் என்று கேட்டுக்கொண்டே இருந்தால்தான் நீங்கள் இயல்பாக இருக்கமுடியும். அந்த வகையில் சத்தமில்லாத உலகம், பார்வையிழப்பை விட மிகமோசமானது. இதைதுதான், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று திருக்குறள் குறிப்பிடும்.
 இறைவனின் படைப்பாற்றல்!
ஒரு பெரிய நகரத்துக்கு தொலைபேசி வசதி செய்வதற்கு எவ்வளவு மின்இணைப்புகள் தேவைப்படுமோ, அவ்வளவு மின்இணைப்புகள் எங்களிடம் உள்ளன. ஒரு குறுகலான இடத்தில் இவ்வளவு பெரிய ஒலி உற்பத்தித் தொழிற்
சாலையை வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.
 ஓர் அதிசயக்குழாய்!
வெளிக்காதின் உட்புறம் ஆரம்பித்து, மூன்று செ.மீ நீளம் உள்ள குழாய் உள்ளே செல்கிறது. இந்தக் குழாய் மிகவும் முக்கியமானது. இதில் மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கும் நான்காயிரம் சுரப்பிகளும் மெல்லிய முடியும் உள்ளன. இத்தனை சுரப்பிகளா என்று நீங்கள் சந்தேகப்
பட்டால், ஒரு நுண்ணோக்கியை வைத்து எங்களுக்குள் சற்று உற்றுப்பாருங்கள். உண்மை விளங்கும்.
 எதற்கு அந்தக் குழாய்?
காற்றின்மூலம் வரும் தூசிகள், வழி தவறி உள்ளே வந்துவிடும் பூச்சிகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுகள், பொது நீச்சல் குளத்தில் குளிக்கும்போது அழுக்குநீர் மூலம் ஏற்படும் அபாயம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு என பலபணிகளை மேற்கொள்வது இந்தக் குழாய்தான். சுத்தப்படுத்தும் தேவை அதிகம் இருந்தால், இன்னும் கொஞ்சம் மெழுகுச் சுரப்பை அதிகரிப்போம்.
 கேட்க மட்டும் அல்ல நாங்கள்!
ஒலியைக் கேட்கச்செய்வது மட்டுமே எங்கள் பணி அல்ல. அதைவிட முக்கியமான பணியை உட்
செவியின் மறுபக்கத்தில் உள்ள மூன்று அரை வட்டக் குங்கிலியங்கள் எனப்படும் குழாய்கள் செய்கின்றன. உங்கள் உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுவது இவைதான். இவை இல்லாவிட்டால் நீங்கள் தள்ளாடித்தான் நடக்கவேண்டியதிருக்கும்.
நீங்கள் தட்டாமாலை ஆடி அமரும்போது உலகமே உங்களைச் சுற்றிவருவதுபோல இருப்பது ஏன் தெரியுமா? நீங்கள் வேகமாகச் சுற்றும்போது காதுக்குள் உள்ள குங்கிலியங்களில் உள்ள திரவமும் சேர்ந்து சுற்றுகிறது.
நீங்கள் சுற்றுவதை நிறுத்தி உட்கார்ந்ததும் உடல் நின்றுவிட்டாலும் திரவம் சமநிலைக்கு வராமல் தத்தளித்துக்கொண்டிருக்கும். அது சமநிலை அடைய சிறிதுநேரம் ஆகும்வரை உங்களுக்குத் தலை சுற்றுவதுபோன்ற உணர்வு ஏற்படும்.
இன்னும் கேட்போம், இன்ஷாஅல்லாஹ்!

Sunday, 9 September 2018

கிரா அத் - சுரைம்

கிரா அத் - 

https://www.youtube.com/watch?v=PLMUkLG_sas

23. ஸூரத்துல் முஃமினூன்(விசுவாசிகள்)
மக்கீ, வசனங்கள்: 118

Thursday, 6 September 2018

புதிய எதிரியை உருவாக்கும் பாஜக - சேகர் குப்தா,

பயனுள்ள முட்டாள்கள் (யூஸ்புல் இடியட்ஸ்) என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது... ஆனால், இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்வாவை ஆதரிப்பவர்கள், இடதுசாரி சிந்தையாளர்களை, நகரங்களில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்' என்றுதான் அழைக்கிறார்கள். இப்போது அவர்களுக்குப் பெயர் ‘நகர்ப்புற நக்சல்கள்'. இந்த நகர்ப்புற நக்சல்களைத்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பயனுள்ள முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக வாக்குறுதி அளித்தபடி வளர்ச்சி இல்லை என்பது அக்கட்சிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் யாரையாவது காட்டி பயமுறுத்தி, ஓட்டு வாங்க நினைக்கிறது. தேசத் துரோகிகளாக யாரையாவது காட்டி பயமுறுத்தி னால், பாஜக அரசின் தோல்விகளை மறந்து விட்டு, தேச ஒற்றுமைக்காக தனக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என பாஜக நினைக்கிறது.

முஸ்லிம்கள் நாட்டின் விரோதிகள் என்ற பாஜகவின் கோஷம் எடுபடவில்லை. முஸ்லிம் என்றாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்.. காஷ்மீர் பிரிவினைவாதிகள்.. தீவிரவாதிகள்.. லஷ்கர் இ தொய்பா, அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் பயனில்லை. ஏனெனில் இங்குள்ள முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, முஸ்லிம்களைப் பார்த்து இந்துக்கள் யாரும் பயப்படுவதில்லை. மூன்றாவதாக, பதற்றத்தைத் தொடர்ந்து வைத்திருக்க, எல்லையில் துல்லிய தாக்குதலைப் போன்று தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கும் சீனா வேட்டுவைத்து விட்டது. பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சும்மா விட மாட்டோம் எனக் கூறிவிட்டது.

இந்தியாவைப் பாதுகாக்க பாஜக, புதிய எதிரியை உருவாக்க வேண்டும். மாவோயிஸ்ட்கள் அதற்குப் பொருந்தி வருவார்கள். அவர்களை இஸ்லாமியருடன் இணைத்துவிட்டால் இன்னும் சரியாக இருக்கும் என நினைக்கிறார்கள். இப்படி அத்தனை தீய சக்திகளும் இந்தியாவை அழிக்க நினைக்கும்போது, வேலைவாய்ப்பு பற்றிப் பேச முடியுமா? பேசினால், உங்களுக்கு தேசபக்தியே இல்லையா என்பார்களே...


கடந்த 1980-களில் ராஜீவ் காந்தி வீழ்ச்சிக்குப் பிறகு, சாதியால் பிரிந்து கிடப்பவர்களை மத ரீதியாக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் இணைக்க முடியுமா என்ற கேள்வி, அடுத்து நாட்டை யார் ஆள்வது என்பதை முடிவு செய்தது. அயோத்தி மூலம் அத்வானி அதை சாதித்தார். ஆனால், 2004-ல் அது நீர்த்துப் போனது. அப்போது நரேந்திர மோடி பயன்பட்டார். அவருக்கு இருந்த நற்பெயரும் கவர்ச்சியும் இந்து வாக்காளர்களைக் கவர்ந்தது. அதோடு, வலுவான அரசு, வளர்ச்சி ஆகிய இரண்டு வாக்குறுதிகளும் சேர்ந்து வெற்றியைத் தேடித் தந்தன. ஆனால், இப்போது இருக்கும் நிலையில் இதையே மீண்டும் சொல்லி வெற்றிபெற முடியாது என்பது மோடிக்கும் தெரியும்.

அதனால்தான் புதிய எதிரியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் களையும் முஸ்லிம்களையும் இணைத்தால் அது கிடைத்துவிடும். 2019 தேர்தலுக்குள் நாடே பயங்கர ஆபத்தில் இருக்கிறது என கதை கட்டி விடலாம் என நினைக்கிறது பாஜக.

கொஞ்சம் பின்னோக்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் போவோம். இடதுசாரிகள் கொண்டாடும் மிகச் சிறந்த உருது கவிஞரான அகா ஷாகித் அலியின் நினைவு தின கொண்டாட்டம் அங்கு நடக்க இருந்தது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் குறித்து விவாதிக்கவும் ஆதரவு தெரிவிக்கவும் உள்ளதாக முதலில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அடுத்ததாக, ‘கடவுள் விரும்பினால் இந்தியா துண்டு துண்டாக உடையும்' என்ற கோஷத்துடன் கூடிய வீடியோ வெளியானது. இரண்டு கம்யூனிஸ்ட் ஆதரவு மாணவர்கள் மீதும் ஒரு முஸ்லிம் மாணவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.

அடுத்தடுத்து பல வீடியோக்கள் வெளியாயின. ‘காஷ்மீரில் இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்பதை இந்த உலகமே அறியும்..' என ஜேஎன்யூ பல்கலையின் ஒரு பேராசிரியர் பேச, சுற்றியிருக்கும் மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யும் வீடியோ வெளியானது. இதையடுத்து, இடதுசாரி புரட்சிகர சிந்தனையாளர்கள், தேச விரோத முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவைத் துண்டாக்க சதி செய்கிறார்கள் என்ற புதுக் கதையைப் பரப்பினார்கள். இதன்மூலம் வில்லன்கள் கூடும் இடமாக ஜேஎன்யூ வளாகம் சித்தரிக்கப்பட்டது.

காஷ்மீர் பிரிவினைவாதத்தைப் பேசி இடதுசாரி சிந்தனையாளர்கள் பாதி வேலையைத்தான் செய்தார்கள். மீதி வேலையை, மோடிக்கும் அமித் ஷாவுக்கும் ஆதரவான டிவி சேனல்கள் பார்த்துவிட்டன. நாடே ஆபத்தில் இருப்பதாகப் புரளி கிளம்பியது. இந்தியா ஒன்றும் பீங்கான் பாத்திரமல்ல. கோஷம் போட்டும், போஸ்டர் ஒட்டியும், எதிர்ப்புக் கவிதை எழுதியும் இந்தியாவை உடைக்க முடியாது. ஆனால், வாக்காளர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். எந்தக் கட்சியும் சாராத 2 சதவீத நடுநிலை வாக்காளர்கள் இந்த வாதத்தில் மயங்கினாலே, பாஜக நினைப்பது நடந்துவிடும்.

காஷ்மீரில் பொது வாக்கெடுப்புக்கும் நக்சல்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதும் அவசியம்தான். ஆனால், அவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கொல்கிறார்கள், மடிகிறார்கள். அமெரிக்கா சிறைத் தண்டனை விதித்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஐஎஸ்ஐ தீவிரவாதி, குலாம் நபி பாயின் விருந்தில் இடதுசாரி சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். அவரை காஷ்மீர் தேச பக்தன் எனப் பாராட்டுகிறார்கள். இதனால்தான் அரசும் அத்தனை காஷ்மீரியையும் தேசத் துரோகியாகப் பார்க்கிறது. 20 ஜெலட்டின் குச்சிகளாலும் 5 ஃபியூஸ் வயர்களாலும் புரட்சியைக் கொண்டு வந்துவிட முடியுமா?

சோவியத் யூனியனால் வீழ்த்த முடியாத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புரட்சிகர முஸ்லிம் களால் வீழ்த்த முடியும் என உலகம் முழுவதும் இடதுசாரித் தலைவர்கள் நம்புகிறார்கள். இந்தியா விலும் அதேபோல் நடக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வரும் காஷ்மீரிகளும் பஸ்தர் பழங்குடியின மக்களும் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அநியாய மாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆயுதம் எடுத்த அடுத்த நொடி, உங்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுவிடும். இந்தப் போரில் அரசாங்கம் தான் வெல்லும். அரசாங்கம் பலமானது என்பதால் அல்ல, மக்களின் ஆதரவு அதற்குத்தான் இருக்கும் என்பதால். அரசுக்கு எதிராக ஏன் இவர்கள் போராடுகிறார்கள் என்ற காரணத்தை அறிந்தவர்கள் மக்களில் ஒரு சிலர்தான். இதற்கிடையில் நீதிமன்றக் கண்டனம், அலைக்கழிப்பு ஆரம்பமாகும். சட்டரீதியாக, இந்த விஷயத்தில் மோடி அரசு கண்டிப்பாகத் தோற்றுத்தான் போகும். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் நோக்கம் அதுவல்ல.

இடதுசாரி சிந்தனையாளர்களின் புரட்சிப் போராட்டங்களால் யார் பயனடைவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். மோடியோ அல்லது அவர் கட்சியினரோ உங்களுக்கு நன்றி சொல்லி பாராட்டி கடிதம் அனுப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் இடதுசாரிகள் அல்ல, ‘பயனுள்ள முட்டாள்கள்'.

சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

மதங்களை உணராத மடையர்கள் - நெல்லை கண்ணன்

இம்ரான்கான் இந்திய நல்லுறவை விரும்புவார் என்ற அச்சத்தில் பாஜக வேண்டுமென்றே காஷ்மீருக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்கி வேறுபாடுகளை அதிகமாக்க ஏற்பாடுகளைச் செய்கின்றது

பிரதமர் நேரு வருகின்ற வழியில் ஒரு இளைஞன் அவர் காரை வழி மறித்து சுதந்திரத்தினால் என்ன கிடைத்தது என்றான் உனது பிரதம மந்திரியை மறித்து உன்னால் கேள்வி எழுப்ப இயலுகின்றதே அது தான்

பெருந்தலைவர் காமராசர் வாழ்க்கையிலும் இது போலவே ஒரு சம்பவம் ஒரு இடத்திலே பெருந்தலைவர் காரில் இருந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கின்றார்

ஒரு இளைஞன் தள்ளி இருப்பவன் அவரிடம் ஏதோ வினவுகின்றான். இவர்கள் அவனைச் சத்தமிடுகின்றார்கள் பெருந்தலைவர் அவர்களைக் கடிந்து கொண்டார்

நம்ம ஊருப் பிள்ளை அவன் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்ண்ணேன் நாந்தான முத மந்திரி அவருக்கும்ன்னார்

இப்ப எதுக்கு இதெல்லாம்ன்னு கேக்கணுக்ன்னு தோணும் அக்காவிற்காகத் தான்

அவங்க அப்பா சொல்ல மாட்டார்

அவங்க சித்தப்பாவும் கோட்டு சூட்டோட அலயுதாரே சொல்ல மாட்டருன்னூ தெரியும்லா


சோபியாவின் தந்தை தலித் என்று குறிப்பிடலாமா என்கின்றனர். அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை கட்டாயம் போட வேண்டும் நாராயணன்கள் இராகவன்கள் ராஜாக்கள் எல்லாம் சிறுபான்மை அவர்களை அனைவருக்கும் தெரியும் அந்தச் சிறுபான்மையினர் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையும் தெரியும்

கர்நாடகா தோல்வியைக் குறித்து எல்லாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டு



Tuesday, 4 September 2018

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 71.58 காசுகளாக  இன்று வீழ்ச்சி அடைந்தது.
சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலருக்கு எதிரான மதிப்பான ரூ.71.21 காசுகளுடன் ஆரம்பமானது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ.71.09 காசுகளுக்கு வந்தது. ஆனால், நண்பகலுக்குப் பின் மீண்டும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு வர்த்தகம் முடியும் போது நேற்றைய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக 37 காசுகள் சரிந்து ரூ.71.58 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 5-வது நாளாகச் சரிந்து வருகிறது. அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41, டீசல் விலை ரூ.75.39. காசுகளாக அதிகரித்தது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்தத்கப்போர குறித்த அச்சம், அர்ஜென்டினா, துருக்கி வர்த்தக சூழல் ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து வந்தது.
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் வேலையின்மை, விலை வாசி உயர்வு, நடப்பு கணக்குப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, உள்நாட்டுப் பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றாலும் ரூபாயின் மதிப்பு உள்நாட்டிலேயே அதிக நெருக்கடிக்கு ஆளாகி வந்தது. இந்தச் சூழலில் இன்று பிரண்ட் கச்சா எண்ணெய் இன்று பேரல் ஒன்று 79.26 டாலர்களாக ஆக உயர்ந்தது, இதனால், அடுத்துவரும் நாட்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குச் சாதகமான வாய்ப்புகள் இருப்பதையே காட்டுகிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு முக்கியக் காரணமே சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் ஏற்படும் என்ற பதற்றமும், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்றமும்தான். இதை மத்திய அரசால் கட்டுப்படுத்த இயலாது, என்ன முடியுமோ அதைச் செய்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கலாம். ஆனால், ஒரு கட்டத்துக்கு பின் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தனக்குத்தானே நிலைப்படுத்திக்கொள்ளும் உள்நாட்டுக் காரணிகள் இதில் ரூபாய் மதிப்பைப் பாதிக்காது எனத் தெரிவித்தார்.
என்ன காரணம்?
அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர்தான் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பணத்துக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயரக் காரணமாகும். அர்ஜென்டினாவின் பெசோ, துருக்கி லிரா, தென் ஆப்பிரிக்கா ராண்ட், பிரேசிலின் ரியல், இந்தோனேசியாவின் ருப்பியா, இந்தியாவின் ரூபாய் ஆகியவற்றின் மதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏற்றுமதியை நம்பி அதிகம் இருக்கும் பொருளாதாரங்கள் வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனபொருட்களின் மீது மேலும் புதிய வரிகளை விதிக்கலாம் என்ற அச்சம் காரணமாக டாலரின் தேவை அதிகரித்து மதிப்பு உயர்ந்து வருகிறது.

இப்ராஹீம் நபி காலத்தில் கஃபா விற்கு இரண்டு வாசல்கள் இருந்தன

மக்கா நகரில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி காற்றுடன் கூடிய பலத்த மழையினால் கஃபதுல்லாஹ்வின் திரை அகன்ற நிலையில் கஃபதுல்லாஹ்வின் தற்போதைய கதவுக்கு நேர் எதிராக மேற்கு திசையில் அடைக்கப்பட்ட ஒரு வாசல் காட்சியை பலரும் கவனித்திருப்பீர்கள்
#அவ்வாசல் மறக்கப்பட்ட கஃபாவின் இடைக்கால வரலாற்றை நினைவூட்டியது
---------------------------------------------------------------------------------
இப்ராஹீம் நபி காலத்தில் கஃபா விற்கு இரண்டு வாசல்கள் இருந்தன.

இரண்டு வாசல்களும் தரையோடியிருந்தன.மக்கள் ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து எதிரே இருந்த மறு வாசல் வழியாக வெளியேறி வந்தனர்.
அப்பொழுது கஃபா, இப்பொழுது அதன் அருகே அரை வட்ட வடிவில் இருக்கும் ஹதீமையையும் இணைத்து விசலாமாக இருந்தது.
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களுக்கு இறை தூது வருவதற்குமுன்பு குறைஷியர் கள் சிதிலமடைந்த கஃபா வை புனரமைப்பு செய்ய முடிவெடுத்தனர்.அப்பொழுது
குறைஷிக் குலத்தினர் கஃபாவின் கட்டுமானப் பணிக்காக தங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும், (விபச்சாரத்தின் வருமானமோ,வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ) சேரக்கூடாது”என்று முடிவெடுத்து குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.
அந்த நேரத்தில் சேகரிக்கப்பட்ட பணம் கஃபதுல்லாவின் முழு பகுதியையும் நிர்மாணிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டிய காஃபா செவ்வக வடிவில் இருந்தது. ஆனால், குறைஷியர்கள் கைவசம் இருந்த தொகையை வைத்து கஃபாவை அதன் செவ்வக வடிவிலேயே முழுமைப்படுத்த முடியவில்லை.
அதனால் செவ்வக வடிவில் இருந்த (கஃபா) கட்டிட அஸ்திவாரத்தில், சதுர வடிவில் கஃபாவை கட்டிமுடித்து அஸ்திவாரத்தின் மீதமுள்ள இடமும் கஃபா தான் என அறிவிக்கும் முகமாக அரை வட்ட வடிவில் ஒரு சுவற்றை எழுப்பினர்.
அந்த இடத்திற்கு ஹதீம் என்றும் ஹிஜ்ரு இஸ்மாயீல் என்று சொல்லப்படுகிறது.
{அந்த இடத்தில் தான் நபி இப்ராஹீம்عليه السلام அவர்கள்
குழந்தையாக இருந்த இஸ்மாயீல் நபியை (عليه السلام) விட்டு விட்டு சென்றதாகக்
கூறப்படுகிறது}

ஹதீம் பகுதி கஃபாவின் உள் பகுதியாக கருதப்படுவதால்தான் பர்ளு தொழுகை ஜமாஅத்தாக நடை பெறும்போது இமாம் காஃபாவிற்கு வெளியே நிற்பதால் அப்பகுதியில் தொழுவது தடை செய்யப்படுகிறது
இப்ராஹிம் நபி காலத்தில் இருந்தது போலவே கஃபாவின் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயிலும்,வெளியேறுவதற்கு ஒரு வாயிலும் அமைத்தனர்.
ஆனால் உள்ளே செல்லும் வாசலை உயராமகவும்,வெளியே வரும் வாசலை தரையோடும் அமைத்து கட்டி முடித்தனர்.

மக்கா வெற்றிக்குப்பின் நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடன் கஃபாவை வலம் வந்து, ஹத்தீம் இடத்தில் நின்று, தங்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றை சொன்ன நபியவர்கள் இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்ததை போன்றே ஹத்தீம் பகுதியையும் இணைத்து கஃபாவை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் அண்மையில்தான் இஸ்லாத்தை ஏற்ற மக்காவாசிகள் முஹம்மது கஃபாவை இடிக்கிறார் என்று தவறாக புரிந்துக் கொண்டு அதனால் தேவையற்ற குழப்பங்கள் மக்களிடையே ஏற்படும் என்பதால் அந்த விருப்பத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்கள்.

நபித்தோழர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் மகனார் யஜீத் கலிஃபாவாக பதவி ஏற்றார்.
யஜீத் கலிபாவாக பதவியேற்றதை நபிகளாரின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கூஃபா வாசிகளின் அழைப்பை ஏற்று ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா சென்று அங்கு எஜீதுக்கு எதிரான போரில் ஷஹீத் ஆனார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்களை ஹிஜாஜ் மாகாண பகுதியினர் தங்களின் கலீபாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அப்பொழுது நடைப்பெற்ற போரில் கஃபாவின் ஒரு பகுதி தீக்கிரையானது,
அவ்வாண்டு நடைப்பெற்ற ஹஜ்ஜின் போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே தங்களுடைய சிறிய தாயான அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய விருப்பத்தை மக்களிடம் தெரிவித்து கஃபாவை முழுமையாக இடித்து விட்டு இப்ராஹீம் அலைஹிஸ்ஸாம்் அவர்கள் காலத்தில் இருந்ததைப் போன்று வடிவமைப்பில் தான் கட்டப்போவதாக அறிவித்தார்.
மக்களில் பலரும் அதனை எதிர்த்தார்கள். இருப்பினும், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் அவர்கள் நான் அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்து முடிவெடுப்பேன் என்று சொன்னவர் அவ்வாறே இஸ்திகாரா செய்த பின் கஃபாவை ஹதீம் பகுதியுடன் இணைத்து இரண்டு வாசல்களையும் வைத்து புதிதாக கட்டினார்.



யஜித்தின் மரணதிற்குப்பின் அப்துல் மாலிக் பின் மர்வான் கலீபாவாக பதவி ஏற்றார்.ஹிஜாஜ் பகுதியையும் தனது காட்டுப்பாட்டில் கொண்டுவர ஹஜ்ஜாஜ் பின் யுசுபின் தலைமையில் பெரும் படையை அனுப்பினர்.மக்காவை கைப்பற்றிய ஹஜ்ஜாஜ் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி)அவர்களை கொலை செய்ததுடன் அவர் புனரமைத்த கஃபாவின் ஹதீம் பகுதியை இடித்து விட்டு குறைசியர்கள் அமைத்தது போன்றே ஹதீம்பகுதியை அறை வட்ட வடிவில் மீண்டும் அமைத்தார்.வெளியே வருமவாசலையும் சுவர்எழுப்பிஅடைத்துவிட்டார் .
அப்பாஸிய கலீபாவாக மஹதி அவர்கள் பதவி ஏற்றபின் மீண்டும் அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் அமைத்த நபி பெருமான் விரும்பிய வடிவமைப்பில் கஃபாவை மாற்றி அமைக்க விரும்பி
மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை செய்தார்.. இமாம் மாலிக் ( ரஹ்)அவர்கள் ஆட்சியாளர்கள் மாறும்போழுதெல்லாம் காபாவை மாற்றி அமைத்தால் வெகுஜன மக்களுக்கு காஃபத்துல்லாஹ்வின் மீதுள்ள கண்ணியம் போய்விடும் எனவே இப்பொழுதுள்ள வடிவமைப்பிலேயே விட்டுவிடுங்கள் என் ஆலோசனை கூறினார்
அதனை கலீபா மஹதி ஏற்றுக்கொண்டார்.
அன்றிலிருந்து கஃபத்துல்லாஹ் எவ்வித மாற்றமுமின்றி முஃமினீன்களின் வணக்கஸ்தலமாக இருந்து வருகிறது.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி