🌸 அறிஞர் சஅதியின் ஒரு குட்டிக்கதை!
ஒருமுறை இரு நண்பர்கள் ஒன்றாகப் பயணித்தனர். இருவரில் ஒருவர் குறைவாக உணவருந்தி மெலிந்திருந்தார். இன்னொருவர் அதிகமாக உணவருந்தி கொழுத்திருந்தார்.
பயண இடையில் அவர்கள் 'உளவாளிகள்' என்று குற்றம் சுமத்தப்பட்டு, கைதாகி வெவ்வேறு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, விடுதலைக்கான உத்தரவு வந்தது.
சிறைக்கதவு திறக்கப்பட்டபோது, மெலிந்தவர் உயிரோடிருந்தார். கொழுத்தவர் இறந்து கிடந்தார். இது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். மக்கள் ஆச்சர்யம் குறித்து கேள்விப்பட்ட அறிஞர் ஒருவர், 'சரியாகவே நடந்துள்ளது. மாறி நடந்திருந்தால்
தான் ஆச்சரியம்' என்று சுருக்கமாகக் கூறினார். மக்களுக்கு விளங்கவில்லை. அறிஞர் விளக்கினார் இப்படி :
தான் ஆச்சரியம்' என்று சுருக்கமாகக் கூறினார். மக்களுக்கு விளங்கவில்லை. அறிஞர் விளக்கினார் இப்படி :
'அதிகம் உண்டு பழகியவன் பசி தாங்காமல் இறந்துவிட்டான். அளவோடு உண்டு பழகியவன் பசியைச் சமாளிக்கும் திறன்பெற்று உயிர் பிழைத்தான்.'
🌸 குர்ஆன் கூறும் ஒரு பழங்கால வரலாறு!
இஸ்ரவேலர்களது மன்னர் தாலூத் பல்லாயிரக் கணக்கான படை வீரர்களுடன் பைத்துல் முகத்திலிருந்து போருக்கு ஆள் திரட்டும்போது முதியோர், நோயாளிகள் தவிர எல்லாரும் படையில் இணைந்தனர்.
அப்போது தாலூத் அவர்களை நோக்கி, 'நீங்கள் எல்லாரும் புறப்பட வேண்டாம்.
• புதுவீடு கட்டிக்கொண்டிருப்பவர்
• புதிதாக திருமணமுடித்தவர்
• தொழிலே கதியென்று கிடப்பவர்
• கடன் சுமையால் சிரமப்படுபவர்
• புதிதாக திருமணமுடித்தவர்
• தொழிலே கதியென்று கிடப்பவர்
• கடன் சுமையால் சிரமப்படுபவர்
இவர்கள் என்னுடன் வரவேண்டாம். நிதானமானச் செயல்படும் உள உறுதி கொண்ட இளைஞர்கள் என்னுடன் வரட்டும்.' என்றார்.
அது கடுமையான வெயில்காலம். தண்ணீர் தேவை குறித்து படைவீரர்கள் தாலூத்திடம் முறையிட்டபோது, வழியில் ஓர் ஆறு வரும். அந்த ஆற்றின் மூலம் இறைவன் உங்களைச் சோதிப்பான்.
அதில் குறைவாக நீர் அருந்தி, மன நிறைவு பெற்றவர் என்னைப் பின்பற்றியவர். அளவுக்கு அதிகமாக நீர் அருந்தி பேராசை கொண்டவர் என்னைப் பின்பற்றியவர் அல்லர் என்று கூறினார்.
ஆனால், ஆற்றருகே படையினர் வந்தபோது எண்பதாயிரம் பேர்களில் வெறும் முன்னூற்றுப் பதி மூன்று பேர்தான் தாலூத்தின் சொல்படி குறைவாக நீரருந்தினர். ஏனையோர் அதை மீறி நடந்தனர்.
பத்ரில் கலந்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கையான முன்னூற்றுப் பதிமூன்று பேரே, தாலூத்துடன் ஆற்றைக் கடந்தோரின் எண்ணிக்கையும் என்று பராஉ பின் ஆஜிப் (ரளி) அறிவிக்கிறார். [புகாரி]
இறை கட்டளைக்கு மாற்றமாக அதிகளவு நீரருந்தியோர் உதடுகள் காய்ந்து அதிக தாகத் துக்குள்ளாகி தளர்ச்சியடைந்தனர். அவர்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. எதிரிப் படையினரின் எண்ணிக்கையைக் கண்டு பயந்து 'எங்களால் போரில் கலந்துகொள்ள முடியாது' என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.
ஆனால், குறைந்த அளவு நீர் அருந்தியோருக்கு அதுவே அவர்களது தாகம் தீர்க்கப் போதுமான தாக இருந்தது. அதன்மூலம் அவர்கள் சக்தி பெற்றனர்; நம்பிக்கை பலம் பெற்றனர். எனவே உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் ஆற்றைக் கடந்தனர்.
அப்போது குறைந்த எண்ணிக்கையுடையோர் அந்த பெரும்பான்மையோரைப் பார்த்துக் கூறிய மந்திர வார்த்தைதான் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்.
'எத்தனையோ சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை இறைவன் உதவியால் வென்றெடுத்துள்ளது. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கி றான்.' [02 : 249]