Thursday, 6 September 2018

மதங்களை உணராத மடையர்கள் - நெல்லை கண்ணன்

இம்ரான்கான் இந்திய நல்லுறவை விரும்புவார் என்ற அச்சத்தில் பாஜக வேண்டுமென்றே காஷ்மீருக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்கி வேறுபாடுகளை அதிகமாக்க ஏற்பாடுகளைச் செய்கின்றது

பிரதமர் நேரு வருகின்ற வழியில் ஒரு இளைஞன் அவர் காரை வழி மறித்து சுதந்திரத்தினால் என்ன கிடைத்தது என்றான் உனது பிரதம மந்திரியை மறித்து உன்னால் கேள்வி எழுப்ப இயலுகின்றதே அது தான்

பெருந்தலைவர் காமராசர் வாழ்க்கையிலும் இது போலவே ஒரு சம்பவம் ஒரு இடத்திலே பெருந்தலைவர் காரில் இருந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கின்றார்

ஒரு இளைஞன் தள்ளி இருப்பவன் அவரிடம் ஏதோ வினவுகின்றான். இவர்கள் அவனைச் சத்தமிடுகின்றார்கள் பெருந்தலைவர் அவர்களைக் கடிந்து கொண்டார்

நம்ம ஊருப் பிள்ளை அவன் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்ண்ணேன் நாந்தான முத மந்திரி அவருக்கும்ன்னார்

இப்ப எதுக்கு இதெல்லாம்ன்னு கேக்கணுக்ன்னு தோணும் அக்காவிற்காகத் தான்

அவங்க அப்பா சொல்ல மாட்டார்

அவங்க சித்தப்பாவும் கோட்டு சூட்டோட அலயுதாரே சொல்ல மாட்டருன்னூ தெரியும்லா


சோபியாவின் தந்தை தலித் என்று குறிப்பிடலாமா என்கின்றனர். அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை கட்டாயம் போட வேண்டும் நாராயணன்கள் இராகவன்கள் ராஜாக்கள் எல்லாம் சிறுபான்மை அவர்களை அனைவருக்கும் தெரியும் அந்தச் சிறுபான்மையினர் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையும் தெரியும்

கர்நாடகா தோல்வியைக் குறித்து எல்லாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டு



No comments:

Post a Comment