Monday, 3 September 2018

அபிராமிக்கு இஸ்லாம் கிடைத்திருந்தால் - சிராஜுல்ஹஸன்

சரியோ, தவறோ ஏதோ ஒரு கட்டத்தில் கணவன் விஜய்யை அபிராமிக்குப் பிடிக்காமல் போய்விட்டது..சுந்தரத்தின் மீது காதல் அதிகமாகிவிட்டது.

குடும்பத்தில் சிக்கல்....

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு அழகான இரண்டு குழந்தைகளையும் அன்பான கணவனையும் விஷம் வைத்துக் கொல்வதல்ல.

விஜய்க்கு இஸ்லாம் கிடைத்திருந்தால், மனைவியின் தவறான நடத்தை தெரியவந்ததுமே “தலாக்” சொல்லி அவளை அனுப்பியிருந்திருப்பார்.

அல்லது அபிராமிக்கு இறைமார்க்கம் கிடைத்திருந்தால் “குலா” வாங்கிக்கொண்டு (பெண் தரப்பில் பெறப்படும் மணவிலக்கு) தனக்குப் பிடித்தவருடன் புதிய வாழ்வைத் தொடங்கியிருக்க முடியும்.

“தலாக் அல்லது குலா” என்று ஒரு சொல்லில் தீரவேண்டிய சிக்கல் இது.....

ஆனால் அந்த அருட்பேறு கிடைக்காத காரணத்தால் இரண்டு குழந்தைகளின் உயிர்களைக் கொன்று, குடும்ப மானமும் போய் இப்போது அபிராமி சிறையில்...!

இது ஏதோ ஓர் அபிராமியின் கதை அல்ல.

நாடு முழுவதும் பல அபிராமிகள்....

நாளிதழ்களைத் திறந்தால் கண்களை உறுத்துவது இத்தகைய கொலைச் செய்திகள்தாம்....

இதற்கு ஒரே தீர்வு இறைவழிகாட்டுதல்.

மத்திய அரசு தலாக் சட்டத்தை முடக்குவதற்கு மும்முரமாக முயன்றுகொண்டிருக்கிறது.

அதற்குப் பதிலாக தலாக், குலா சட்டங்களை நாட்டின் பொதுச்சட்டமாக ஆக்குவதற்கு முயல வேண்டும்.

தலாக், குலா சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான் எனும் நிலை வரவேண்டும்.

ஏராளமான அபிராமிகளின் வாழ்வு மலரும்.

அஜய், கார்னிகா போன்ற குழந்தைகளின் உயிர்களும் காப்பாற்றப்படும்.

No comments:

Post a Comment