பௌதீக ரீதியாக எங்களை நீங்கள் பேணி நடப்பதுபோலவே, ஆன்மிக ரீதியாகவும் பேணி நடக்க வேண்டும். இதோ, அதற்கு சில வழிகாட்டல்கள் :

பேச ஒரு வாய். ஆனால், கேட்க இரண்டு காதுகள். ஏன் தெரியுமா? வழவழவென அதிகமாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு நல்லவற்றை நிறைய நீங்கள் கேட்கவேண்டும். இனிமையான குர்ஆன் கிராஅத், உள்ளத்தைப் பண்படுத்தும் பயான், சிந்தனையைத் தூண்டும் கருத்தாழமிக்க பாடல்கள் என நல்ல அம்சங்களை நிறைய கேட்க வேண்டும்.

சிலர் பேசினால், பேசிக்கொண்டே இருப்பார்கள். பிறரைப் பேச விடமாட்டார்கள். செவி சாய்த்து கேட்கவும் மாட்டார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் யாராவது ஒருவர் பேசினால், அவர் தான் சொல்ல வந்ததைப் பேசி முடிக்கும்வரை இடையில் குறுக்கிட்டுப் பேசமாட்டார்கள். செவி சாய்த்து அவர் சொல்லவந்ததைக் கேட்பார்கள்.

கண்களால் நல்லவற்றை, அனுமதிக்கப்
பட்டவற்றைப் பார்க்கவேண்டும் என்பது போலவே, நல்லவற்றை அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே நீங்கள் கேட்கவேண்டும்.
பட்டவற்றைப் பார்க்கவேண்டும் என்பது போலவே, நல்லவற்றை அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே நீங்கள் கேட்கவேண்டும்.
தவறான செய்திகளைக் கேட்டு லயிக்க, பொய், அவதூறு போன்றவற்றை கேட்டு பொழுதுபோக்க எங்களை ஒருவன் பயன்படுத்தினால், அவனது காதுகள் உண்மையான ஒரு முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
ஆபாசமான வார்த்தைகளை, கொஞ்சல்களைக்
இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் பாடல்களைக் கேட்டு இரசிக்க எங்களை ஒருவன் பயன்படுத்தி னால், அவனது காதுகளும் ஓர் உண்மையான முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் பாடல்களைக் கேட்டு இரசிக்க எங்களை ஒருவன் பயன்படுத்தி னால், அவனது காதுகளும் ஓர் உண்மையான முஸ்லிமின் செவிப்புலன்கள் அல்ல.
செவிப்புலன்களாகிய நாங்கள் இறைவனின் இனிய அருட்கொடைகள். அவற்றைப் பாவமான வற்றுக்கு பயன்படுத்தக் கூடாது. இறையருட்
கொடைக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால், அவற்றை இறைவனுக்கு அடிபணியும் அம்சத்தில்தான் பயன்படுத்தவேண்டும்.
கொடைக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால், அவற்றை இறைவனுக்கு அடிபணியும் அம்சத்தில்தான் பயன்படுத்தவேண்டும்.
யூதர்களை நிந்தனை செய்து திருக்குர்ஆன், 'அவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்பவர்கள்; விலக்கப்பட்டதையே அதிகமாக உண்பவர்கள்' [05 : 42] என்று குறிப்பிடும்.

'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில், அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில், அவர்களது உரையாடலை ஒட்டுக் கேட்கிறவரது காதில், மறுமைநாளில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றப்படும்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். [புகாரி 7042]

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு அவனது விதியில் எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான்.
கண்கள் செய்யும் விபசாரம் தவறானவற்றைப் பார்ப்பது. காதுகள் செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுகளைச் செவியுறுவது. நாவு செய்யும் விபசாரம் ஆபாசப் பேச்சுக்களைப் பேசுவது. கை செய்யும் விபசாரம் அந்நியப் பெண்ணைப் பற்றுவது. கால் செய்யும் விபசாரம் தவறான உறவைத் தேடி அடியெடுத்து வைப்பது.
மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. [ஸஹீஹ் முஸ்லிம் 5165]

தத்துவஞானி சாக்ரட்டீஸிடம் ஒருவன் வந்து, 'உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வந்தேன்' என்றான்.
'அவசரப்படாதே! அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்க்க வேண்டும்!'
'மூன்று சல்லடைகளா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!'
• முதல் சல்லடை : 'நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதா?
‘அது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்!'
• இரண்டாவது சல்லடை : 'நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?'
‘இல்லை!'
• மூன்றாவது சல்லடை : 'நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடிய செய்தியா?'
‘இல்லை!’
'ஆக, நீ என்னிடம் சொல்லவந்த செய்தி உண்மை யானதல்ல; நல்ல செய்தியும் அல்ல; அதனால் யாருக்கும் நன்மையும் ஏற்படப்போவதில்லை. அப்படித்தானே?'
‘ஆமாம்!’
'நண்பனே! அப்படிப்பட்ட ஒரு செய்தியை நீ சொல்லி, நான் அதைக் கேட்டு ஏன் நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?'
வந்தவன் வாயை மூடிக்கொண்டான்.
- இன்னும் கேட்போம், இன்ஷா அல்லாஹ்!
No comments:
Post a Comment