Monday, 3 September 2018

காபிர்கள் வெறுத்தபோதிலும் சரியே!!!

கருணாநிதியின் துர்மரணம் முஸ்லிம் சமூகத்தில் ஈமான், இஸ்லாம், குப்ர் பற்றிய அறிவீனம் எந்தளவுக்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிக்கொணர்ந்துள்ளது.

அல் குப்ர் அல் அக்பர் எனும் பெரும் இறை மறுப்பு இஸ்லாமிய ஷரீஅத்தின் பரிபாஷையில் கீழ்வருமாறு அமைந்திருக்கும்.

1.பொய்ப்படுத்துவதன் மூலம் ஏற்படும் இறை மறுப்பு.

29:68. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,

2.இறை கட்டளையை ஏற்காமல் பெருமையடிப்பதன் மூலம் ஏற்படும் இறை மறுப்பு.

2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

3. இஸ்லாம் நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்திய அம்சங்களை நம்பாமல் விடுவதன் மூலம் ஏற்படும் இறை மறுப்பு:

18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
‏ 
18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.

இந்த சூறா கஃபின் வசனங்களில் இரு மனிதர்களின் சம்பாசனையை அல்லாஹ் எடுத்துக் கூறி அதில் தோட்டம் ஒன்றிற்குச் சொந்தக் காரன் "மறுமை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை" எனக் கூறியதாகவும் அதனால் அவன் இறைவனை நிராகரித்து விட்டதாகவும் அல்லாஹ் அடுத்த மனிதனின் தீர்ப்பை எடுத்துக் கூறுகிறான்.

இது அல்லாமல் ஏகப்பட்ட விடயங்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் என அல்குர் ஆன் வசனங்களிலும் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் எம்மால் காண முடியுமாக உள்ளது.

உதாரனமாக...

1
5:44. .... எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.

2
27:4. நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
‏ 
27:5. அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.

3. தொழுகையை விடுவது இறை மறுப்பாகும் .(ஹதீஸ்)

4.சூணியக்காரணிடம், குறிகாரணிடம் சென்று அவன் கூறுவதை நம்புவது இஸ்லாத்தை நிராகரிப்பது ஆகும். (ஹதீஸ்)

இது போன்ற நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் கருனாநிதி எனும் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவன் காபிர் என்பதை சந்தேகமின்றி வலியுறுத்துகின்றன.

இவ்வாதாரங்கள் அடிப்படையில்தான் இமாம் இப்னு தைமிய்யாஹ் (றஹ்) அவர்கள் 'இறை மறுப்பு" என்பதை வரைவிலக்கணம் செய்யும் போது :

"நிராகரிப்பு என்பது ஈமான் இல்லாத நிலையாகும் என முஸ்லிம்கள் அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்."

என வரைவிலக்கணம் செய்துள்ளார்கள்.

காபிர்களுக்குக் காவடி தூக்குவதையே கொள்கையாகவும் செயற்பாடாகவும் கொண்ட சில அறிவிலிகளுக்கு இஸ்லாம் தெளிவுபடுத்தும் இவ்வுண்மை கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கசப்பாக இருந்தாலும் உன்மையையே பேசுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் "பேஸ் புக்" பத்வாக் கொடுக்கும் இடமல்ல" என்று மார்க்க விடயத்தில் அலிப் பே தெரியாதவர்கள் பத்வாக் கொடுப்பதும் "நாங்கள் தீர்ப்புச் சொல்பவர்கள் அல்லர்" என்று மார்க்கம் கற்ற‌ சிலர்" தங்களுக்குத் தாங்களே "தீர்ப்புச் சொல்லிக் கொள்வதும்" தான்.

இஸ்லாம் என்பது நபர்கள், பொருட்கள் மீது தீர்ப்புச் சொல்லவே வந்தது, இவன் நல்லவன் அவன் கெட்டவன், இவன் காபிர் அவன் முஸ்லிம் இவன் சுவன வாதி அவன் நரகவாதி, இது நல்லது (ஹலால்) அது கெட்டது (ஹறாம்) என்று தீர்ப்பளிக்கவே அல்லாஹ் வேததை இறக்கிவைத்தான் அதனால் தான் அல்குர் ஆனிற்கு"அல் ஃபுர்கான்" என்ற பெயர் ஏற்பட்டது என்ற எளிய அடிப்படை கூடத் தெரியாததால், அல்லது தீர்ப்பு சொல்லும் அளவுக்கு அல்குர் ஆனையும் அல் ஹதீஸையும் ஆழக் கற்றுத் தேறாத காரனத்தால் இப்படியான ஒரு வறட்டு வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஈமானை, இஸ்லாத்தை அளவுகோலாகக் கொண்டு எதனையும் அளவீடு செய்யவேண்டிய இவர்கள் வெறுமனே "சமூக சேவை, சமுதாயப் பணி என்ற கோணத்தில் ஒரு காபிரை மதிப்பீடு செய்ய முற்படுகின்றனர்.

இவர்களது "அறிவியல் வாரிசுகள்"!!! தான் நாளை நெற்றியில் காபிர் எனத் தெளிவாக எழுதியிருக்கும் தஜ்ஜாலைக் கூட அவன் செய்யும் சேவைகளுக்காகவும் அபிவிருத்திகளுக்காகவும் அங்கீகரிப்பார்கள் என்றால் அது மிகையாகாது.

எனவே ஒரு நாஸ்திகனுக்காக, காபிராகவே வாழ்ந்து குப்ரிலேயே மரணித்த ஒரு நரகவாதிக்காக முஸ்லிம் பெயர்தாங்கிகள் கச்சை கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்றால் ....அவனுக்காக முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளவும் முற்படுகின்றார்கள் என்றால் இப்பெயர்தாங்கி முஸ்லிம்களை நாம் என்னவென்று சொல்வது!!!

இஸ்லாம் என்றால் என்ன?, ஈமான் என்றால் என்ன?, குப்ர் எனும் நிராகரிப்பு, ஷிர்க் எனும் இணைவைப்பு, மற்றும் அதன் வகைகள், பிரிவுகள் பற்றி அலிப் பேயில் இருந்து படித்து உங்கள் ஈமானை அவசரமாகவும் அவசியமாகவும் சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

https://www.facebook.com/nowfer.mohammad/posts/2242122329131683?__tn__=K-RH-R 

No comments:

Post a Comment