Thursday, 27 September 2018

உங்கள் காது பேசுகிறேன்! - ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
ஒரு சிறுவனுக்கு காது சரியாகக் கேட்பதில் பிரச்னை இருந்ததால், காது கேட்கும் கருவி ஒன்றை பொருத்தினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அதைப் பயன்படுத்த மறுத்து விட்டான். ஏன் தெரியுமா? அதிகச் சத்தமாகக் கேட்கிறதாம்! அதற்கு மெலிதாகக் கேட்பதே பரவாயில்லை என்று சொல்லிவிட்டான்.
இன்னொரு தகவல், இன்னும் ஆச்சரியமானது.
சிறு வயது முதல் காதுகேட்காத ஒரு பெண், பல வருடங்கள் கழித்து கனடாவில் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். தலைக்குள் ஒரு கருவியை வைக்கிறார்கள். இப்போது அவருக்கும் அதே போல பிரச்னை!
என்னவென்றால், நுண்ணிய ஓசைகளும் பெரிதாகக் கேட்கின்றனவாம். ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினால், எழுதும் அந்த ஓசைகூட கேட்கிறதாம். பத்தாவது மாடியில் இருக்கும்போது, கீழே செல்லும் வண்டிகளின் சப்தம் கேட்கிறதாம்.
அந்தச் சிறுவனாவது கருவியைக் கழட்டிப் போட்டு விட்டான். இப்பெண்ணுக்கோ தலைக்குள் கருவி. எத்தனைமுறை அறுவை சிகிச்சை செய்ய முடியும்? விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனையெத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும், இறைவனின் படைப்பின் துல்லியத்தை விஞ்ஞானத்தால் அடையவே முடியாது!
.
நபியே! நீர் கூறுவீராக : 'இறைவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; எனினும், மிகவும் சொற்பமாகவே நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துகிறீர்கள். [67 : 23]

No comments:

Post a Comment