உங்களது தலைக்கு இருபுறமும் தசைகளால் ஆன சின்னதாக இரண்டு ஒலிபெருக்கிகள் இருக்கின்றனவே, அவைதான் காதுகளாகிய நாங்கள். பிறந்தவுடனேயே நாங்கள் எங்கள் பணியைச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்றாலும், வயது ஆக ஆக எங்களது கேட்கும் திறன் குறைந்து கொண்டே வரும்.
உள்காது வெளிக்காது என இருவகையாக நாங்கள் இருக்கிறோம். தலையின் இருபுற பக்கவாட்டுகளிலும் நீட்டிக் கொண்டிருக்கும் வெளிக்காது ஒரு சிறு பகுதிதான். வெளியிலுள்ள ஒலிகளைக் குவித்து செவிப்பாதைக்குள் செலுத்துவதும் ஒலிவரும் திசையைக் கண்டறிவதும்தான் எங்களது வெளிப்புறப் பகுதியின் பணி.

'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்ற நாகூர் ஹனீஃபாவின் இன்னிசை, கொய் கொய்ங் என்ற கொசுவின் ரீங்காரம், அமைதியான நள்ளிரவில் டிக் டிக் என்ற கடிகார ஓசை என அனைத்தையும் கேட்போம் நாங்கள். நீங்கள் சேட்டைகள் பண்ணுகிறபோது உங்கள் தந்தை மற்றும் ஆசிரியர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டு ஆவென கத்துவதும் நாங்களே.

வெளியில் இருந்து வரும் ஒலியை மாத்திரம் அல்ல, நீங்கள் பேசுவதையும் நாங்கள் கேட்போம். பேசும்போது உங்கள் வாயிலிருந்து வரும் ஒலியின் ஒரு பகுதி, நேரடியாக எங்களது டிரம்மைத் தட்டுகிறது. இன்னொரு பகுதி, கன்னத்தில் உள்ள எலும்புகள் வழியே உள்காதிற்குச் செல்கிறது. இப்படித்தான் நீங்கள் பேசுவது உங்களுக்கே கேட்கிறது.

ஒலியலைகள் வெளிக்காதினைத் தொட்டவுடன் குகைபோன்ற செவிப்பாதை வழியே அவை நுழைகின்றன. அங்குள்ள செவிப்பறையில் மோதி, அதனுடன் தொடர்புடைய மூன்று நடுச்செவி எலும்புகளின் ஊடாக பயணித்து, பின்னர் உட்செவியில் உள்ள திரவம் மற்றும் அங்குள்ள உணர்செல்களைத் தாக்கி, அதன்பின் அது நரம்புச் செய்திகளாக மாற்றப்பட்டு, மூளையில் உள்ள கேட்கும் பகுதியை அடைகிறது.
இவ்வாறு நீண்ட பயணம் செய்தபிறகுதான் உங்களால் எந்த ஒரு ஒலியையும் கேட்க முடிகிறது. இதிலே ஆச்சரியப்படத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால், மேலே சொன்ன இந்தப் பயணம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடைபெறுவதுதான். சுப்ஹானல்லாஹ்!

சத்தம் இல்லாமல் உங்களால் எவ்வளவு நேரம் இருக்கமுடியும்? ஐந்து நிமிடம்.அல்லது பத்து நிமிடம்.அதையும் தாண்டிப்போனால்,
அரைமணிநேரம்? அதற்குமேல் என்றால், உங்களையும் அறியாமல் ஒருவித பயம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்.
அரைமணிநேரம்? அதற்குமேல் என்றால், உங்களையும் அறியாமல் ஒருவித பயம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்.
உங்களைச்சுற்றி மனிதர்களது பேச்சொலி, பறவைகளது குரல், வாகனஇரைச்சல் என்று கேட்டுக்கொண்டே இருந்தால்தான் நீங்கள் இயல்பாக இருக்கமுடியும். அந்த வகையில் சத்தமில்லாத உலகம், பார்வையிழப்பை விட மிகமோசமானது. இதைதுதான், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று திருக்குறள் குறிப்பிடும்.

ஒரு பெரிய நகரத்துக்கு தொலைபேசி வசதி செய்வதற்கு எவ்வளவு மின்இணைப்புகள் தேவைப்படுமோ, அவ்வளவு மின்இணைப்புகள் எங்களிடம் உள்ளன. ஒரு குறுகலான இடத்தில் இவ்வளவு பெரிய ஒலி உற்பத்தித் தொழிற்
சாலையை வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.
சாலையை வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.

வெளிக்காதின் உட்புறம் ஆரம்பித்து, மூன்று செ.மீ நீளம் உள்ள குழாய் உள்ளே செல்கிறது. இந்தக் குழாய் மிகவும் முக்கியமானது. இதில் மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கும் நான்காயிரம் சுரப்பிகளும் மெல்லிய முடியும் உள்ளன. இத்தனை சுரப்பிகளா என்று நீங்கள் சந்தேகப்
பட்டால், ஒரு நுண்ணோக்கியை வைத்து எங்களுக்குள் சற்று உற்றுப்பாருங்கள். உண்மை விளங்கும்.
பட்டால், ஒரு நுண்ணோக்கியை வைத்து எங்களுக்குள் சற்று உற்றுப்பாருங்கள். உண்மை விளங்கும்.

காற்றின்மூலம் வரும் தூசிகள், வழி தவறி உள்ளே வந்துவிடும் பூச்சிகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுகள், பொது நீச்சல் குளத்தில் குளிக்கும்போது அழுக்குநீர் மூலம் ஏற்படும் அபாயம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு என பலபணிகளை மேற்கொள்வது இந்தக் குழாய்தான். சுத்தப்படுத்தும் தேவை அதிகம் இருந்தால், இன்னும் கொஞ்சம் மெழுகுச் சுரப்பை அதிகரிப்போம்.

ஒலியைக் கேட்கச்செய்வது மட்டுமே எங்கள் பணி அல்ல. அதைவிட முக்கியமான பணியை உட்
செவியின் மறுபக்கத்தில் உள்ள மூன்று அரை வட்டக் குங்கிலியங்கள் எனப்படும் குழாய்கள் செய்கின்றன. உங்கள் உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுவது இவைதான். இவை இல்லாவிட்டால் நீங்கள் தள்ளாடித்தான் நடக்கவேண்டியதிருக்கும்.
செவியின் மறுபக்கத்தில் உள்ள மூன்று அரை வட்டக் குங்கிலியங்கள் எனப்படும் குழாய்கள் செய்கின்றன. உங்கள் உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுவது இவைதான். இவை இல்லாவிட்டால் நீங்கள் தள்ளாடித்தான் நடக்கவேண்டியதிருக்கும்.
நீங்கள் தட்டாமாலை ஆடி அமரும்போது உலகமே உங்களைச் சுற்றிவருவதுபோல இருப்பது ஏன் தெரியுமா? நீங்கள் வேகமாகச் சுற்றும்போது காதுக்குள் உள்ள குங்கிலியங்களில் உள்ள திரவமும் சேர்ந்து சுற்றுகிறது.
நீங்கள் சுற்றுவதை நிறுத்தி உட்கார்ந்ததும் உடல் நின்றுவிட்டாலும் திரவம் சமநிலைக்கு வராமல் தத்தளித்துக்கொண்டிருக்கும். அது சமநிலை அடைய சிறிதுநேரம் ஆகும்வரை உங்களுக்குத் தலை சுற்றுவதுபோன்ற உணர்வு ஏற்படும்.
இன்னும் கேட்போம், இன்ஷாஅல்லாஹ்!
No comments:
Post a Comment