வழிகேடு எனும்
ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்
ஒரே
குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில்
உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக
வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள்
பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று
வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!
வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு
கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது
பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால்
யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் உலக சமுதாய மக்களால் கையாளப்படுகிறது அந்த மக்களை புரிய வைப்பதற்காகவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஹிந்து வழிகேட்டை பாருங்கள்
இந்து சகோதரர்கள்
படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான
உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை
வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா
அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது
அவனை உருவகிக்க
முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு
தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை
கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர்
வேதம் பக்கம் 377)
இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று
கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல்
உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத
வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு
ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி
அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த
ஹிந்து மக்கள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
இயற்கைப்
பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை
வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை
வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில்
மூழ்குவர். 40:9 (யஜீர்வேத
சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
கிருஸ்தவ வழிகேட்டை பாருங்கள்
கிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய
குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில்
தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும்
செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.
இயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை
கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை
தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த
ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை! ஆண்
துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு துணையுமின்றி
ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ! இந்த கிருஸ்தவ மக்கள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால்
விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த கிருஸ்தவ மக்கள் கீழ்கண்ட பைபிள் வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
விக்கிரகங்களை
உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால்
இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும்
காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு
வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். அவைகளுக்கு
வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக்
கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )
கப்ருவணங்கி முஸ்லிம் வழிகேட்டை பாருங்கள்
அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை
பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை
வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை
வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.
முஸ்லிம்களில்
இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர்
களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல்
ஊர், பேர் தெரியாத
ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை
கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம்
தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு
இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மக்கள்
கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா?
நிச்சயமாக
அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான்
நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன்
அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக
வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
முடிவுரை
வழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மக்கள்களாக இந்த 3 அணியினரும்
உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை
உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன
மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை
வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த
பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்! அல்லாஹ் இவர்களுக்கும்
நேர்வழிகாட்டுவானாக!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே
குட்டையில் ஊறிப்போன மக்(ட்டை)களே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின்
அறிவுரைகளை கேளுங்கள்!
நபியே) வேதத்தில்
ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள்
சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி
காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில்
இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)
அல்லாஹ்வுக்கு
முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு
எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன்
அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன்
வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது
பெருங் காற்றடித்து, அவனை வெகு
தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன்
22:31)
இணைகற்பித்தால்
உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ்
கூறுகிறான்: “…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ
அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன்
ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு
உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைகற்பிப்பவர்களுக்கு
நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய
வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில்
இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை
கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக்
குர்ஆன் 6:88)
இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
இறைத்தூதர்களும்
இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 39:65, 66)
அல்லாஹ் நம்
அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
No comments:
Post a Comment