ப த் ரை நோ க் கி
அபூஸுப்யான் ஸிரியாவிலிருந்து திரும்பி வரும் காலம் நெருங்கி வந்தது. நபிகளார் தல்ஹாவையும், உமரின் ஒன்றுவிட்ட சகோதரரும், ஹனீப் ஆன ஸைதின் மகனுமான ஸஈதையும் மதீனாவின் மேற்குப் புறக் கடலோரமாயமைந்திருந்த ஹவ்ரா எனும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அபூஸுப்யானின் வர்த்தகக் குழு வந்து சேர்ந்ததும் செய்தி கொண்டு வரும்படி இருவரும் பணிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் நபிகளார் தென்மேற்கு நோக்கி விரைந்து சென்று வர்த்தகக் குழுவை முந்திக் கொள்ள இயலும். உளவாளிகள் இருவரையும் ஜுஹைனாவின் தலைவர் தாராண்மையுடன் வரவேற்று வர்த்தகக் குழு அப்பிரதேசத்தைக் கடந்து செல்லும்வரை அவர்களைத் தனது வீட்டில் ஒளித்து வைத்திருந்தார். அவர்களது சிரமங்கள் அனைத்தும் வீண் விரயமாகவே முடிவுற்றன. மதீனாவில் யாரோ ஒருவர் - ஒரு யூதர் அல்லது வஞ்சகர் என்பதில் ஐயமில்லை - நபிகளாரின் திட்டங்கள் குறித்து அபூஸுப்யானுக்கு செய்தியனுப்பியிருந்தார். உடனே அபூஸுப்யான் கிபாரிக் கோத்திரத்தவரான தம்தம் என்பாரை வேலைக்கமர்த்தி, மக்காவுக்கு ஓர் அவசர செய்தியை அவர் மூலம் அனுப்பி வைத்தார். வர்த்தகக் குழுவைக் காப்பாற்றிக்கொள்ளக் குறைஷியர் உடனடியாக ஒரு படையுடன் கிளம்பி வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்தோடு தானும் கரையோரப் பாதை வழியே இயன்றளவு விரைவாக, இரவும் பகலும் ஓய்வின்றி தன் குழுவினரை வழி நடாத்திச் சென்றார் அபூஸுப்யான்.

அபூஸுப்யானுக்கு மாத்திரம்தான் அவசரம் என்பதல்ல. மதீனாவில் இயன்றளவு தாமதித்துச் செல்ல நபிகளார் விரும்பியமைக்கு தக்க காரணங்களிருந்தன. அன்னாரின் அன்புக்குரிய மகள் ருகையா கடுமையான சுகவீனமுற்றிருந்தார். என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வேளையல்ல இது. காலதாமதம் செய்வது உசிதமல்ல எனக்கருதிய நபிகளார் உளவாளிகள் திரும்பி வரும் வரை கூட காத்திருக்கவில்லை. அவர்கள் மீண்டும் மதீனாவை வந்து சேரும் முன்னமேயே, நபிகளார் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் கொண்டதோரு படையுடன் வெளியேறிவிட்டார்கள். படையில் மொத்தம் முந்நூற்றைந்து பேர் இருந்தனர். அவ்வேளையில் மதீனாவில் வலிமை வாய்ந்தவர்களாயிருந்த எழுபத்தேழு முஹாஜிர்களுள் மூவர் தவிர ஏனையோரனைவரும் படையெடுப்பில் பங்கு பற்றினர். நபிகளார், தமது மருமகன் உத்மானை வீட்டிலேயே தங்கியிருந்து தன் சுகவீனமுற்ற மனைவியை கவனித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். மற்ற இருவர் தல்ஹாவும் ஸஈதும். உளவாளிகளாகச் சென்றிருந்த அவர்கள் திரும்பி வர முன்னமேயே படை கிளம்பி விட்டது.
அபூஸுப்யான் ஸிரியாவிலிருந்து திரும்பி வரும் காலம் நெருங்கி வந்தது. நபிகளார் தல்ஹாவையும், உமரின் ஒன்றுவிட்ட சகோதரரும், ஹனீப் ஆன ஸைதின் மகனுமான ஸஈதையும் மதீனாவின் மேற்குப் புறக் கடலோரமாயமைந்திருந்த ஹவ்ரா எனும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அபூஸுப்யானின் வர்த்தகக் குழு வந்து சேர்ந்ததும் செய்தி கொண்டு வரும்படி இருவரும் பணிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் நபிகளார் தென்மேற்கு நோக்கி விரைந்து சென்று வர்த்தகக் குழுவை முந்திக் கொள்ள இயலும். உளவாளிகள் இருவரையும் ஜுஹைனாவின் தலைவர் தாராண்மையுடன் வரவேற்று வர்த்தகக் குழு அப்பிரதேசத்தைக் கடந்து செல்லும்வரை அவர்களைத் தனது வீட்டில் ஒளித்து வைத்திருந்தார். அவர்களது சிரமங்கள் அனைத்தும் வீண் விரயமாகவே முடிவுற்றன. மதீனாவில் யாரோ ஒருவர் - ஒரு யூதர் அல்லது வஞ்சகர் என்பதில் ஐயமில்லை - நபிகளாரின் திட்டங்கள் குறித்து அபூஸுப்யானுக்கு செய்தியனுப்பியிருந்தார். உடனே அபூஸுப்யான் கிபாரிக் கோத்திரத்தவரான தம்தம் என்பாரை வேலைக்கமர்த்தி, மக்காவுக்கு ஓர் அவசர செய்தியை அவர் மூலம் அனுப்பி வைத்தார். வர்த்தகக் குழுவைக் காப்பாற்றிக்கொள்ளக் குறைஷியர் உடனடியாக ஒரு படையுடன் கிளம்பி வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்தோடு தானும் கரையோரப் பாதை வழியே இயன்றளவு விரைவாக, இரவும் பகலும் ஓய்வின்றி தன் குழுவினரை வழி நடாத்திச் சென்றார் அபூஸுப்யான்.

அபூஸுப்யானுக்கு மாத்திரம்தான் அவசரம் என்பதல்ல. மதீனாவில் இயன்றளவு தாமதித்துச் செல்ல நபிகளார் விரும்பியமைக்கு தக்க காரணங்களிருந்தன. அன்னாரின் அன்புக்குரிய மகள் ருகையா கடுமையான சுகவீனமுற்றிருந்தார். என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வேளையல்ல இது. காலதாமதம் செய்வது உசிதமல்ல எனக்கருதிய நபிகளார் உளவாளிகள் திரும்பி வரும் வரை கூட காத்திருக்கவில்லை. அவர்கள் மீண்டும் மதீனாவை வந்து சேரும் முன்னமேயே, நபிகளார் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் கொண்டதோரு படையுடன் வெளியேறிவிட்டார்கள். படையில் மொத்தம் முந்நூற்றைந்து பேர் இருந்தனர். அவ்வேளையில் மதீனாவில் வலிமை வாய்ந்தவர்களாயிருந்த எழுபத்தேழு முஹாஜிர்களுள் மூவர் தவிர ஏனையோரனைவரும் படையெடுப்பில் பங்கு பற்றினர். நபிகளார், தமது மருமகன் உத்மானை வீட்டிலேயே தங்கியிருந்து தன் சுகவீனமுற்ற மனைவியை கவனித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். மற்ற இருவர் தல்ஹாவும் ஸஈதும். உளவாளிகளாகச் சென்றிருந்த அவர்கள் திரும்பி வர முன்னமேயே படை கிளம்பி விட்டது.