Friday, 30 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


“ எச்சரிக்கை செய்வீராக ”


இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளப் பகிரங்கமான அழைப்புகள் ஏதும் இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும் பக்தியுணர்வுமிக்க விசுவாசிகளதும், தொழுகையாளர்களதும் எண்ணிக்கை பெருகிச் சென்று கொண்டிருந்தது. இருபாலருமான அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களாகவே விளங்கினர். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் போக, ஆரம்ப விசுவாசிகளுள் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்களான ஜஅபரும் ஸுபைரும் அடங்குவர். பின்னர் நபிகளாரதும், விசுவாசிகளனதும் உடன் பிறவாச் சகோதரர்கள் பலர் இணைந்து கொள்ளலாயினர் : நபிகளாரின் மாமியாரான உமைமாவின் புதல்வர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ், அவரது சகோதரர் உபைத்-அல்லாஹ். மற்றுமொரு மாமியாரான பர்ராவின் மகன் அபூஸலமா ஆகியோர் அவர்கள். நபிகளாரின் தாயார் வழியிலான உடன் பிறவாச் சகோதரர்களும் சேர்ந்திருந்தனர் : ஸுஹ்ரா கோத்திரத்தின் அபூவக்காஸின் மகன் ஸஅத், அவரது இளைய சகோதரர் உமைர் ஆகியோர் அவர்கள். எனினும் நபிகளாரது தந்தையாரது சகோதரர்களுள் நால்வருள் எவருமே அன்னாரது தூதினை ஏற்க முன்வரவில்லை. அபூதாலிப் தனது இரு புதல்வர்களான ஜஅபரும் அலீயும் புதிய மதத்தினை பின்பற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாயினும், தனது மூதாதையரின் சமய நம்பிக்கைகளைக் கைவிட அவர் தயாராக இல்லை. அப்பாஸ் நழுவும் வகையில் பேசினார். ஹம்ஸா இதனை விளங்கிக் கொள்ள முடியாதவராயிருந்தார். என்றாலும் அப்பாஸும் ஹம்ஸாவும் தனிப்பட்ட முறையில் நபிகளாரின் மீதான தமது நெருங்கிய பந்தத்தை உறுதிப்படுத்தி நின்றனர். ஆனால் அபூலஹப் நேரடியாக, தனது சகோதரரின் மகன் ஒன்றில் தன்னைத் தான் ஏமாற்றிக் கொண்டுள்ளார் அல்லது பிறரை ஏமாற்றி வருகின்றார் என்ற தனது நம்பிக்கையை பகிரங்கமாகவே பேசி வந்தார்.


“ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ” - குர்ஆன்: 26:214

என்ற இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர் நபிகளார் அலீயை அழைத்து :

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


தொழுகை…( தொடர்… )



வானலோகத்திருந்தெழுந்த திடீர் அமைதி குறித்து ஆழ்ந்தகவலை கொண்டனர் நபிகளார். எனினும் இறைவசனங்களைப் பெற்றுக் கொள்ளும் பாரிய தாக்கத்தின் காரணமாக அன்னாரின் இதயம் இன்னமும் நடுங்குறுவதாயிருந்தது. இதன் தாக்கத்தை அல்லாஹ்வே இன்னும் இறக்கப்படாத குர்ஆன் வாசகத்தில் கூறுகின்றான்:

“ யாதொரு மலையின் மீதும் நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்தால், அது

அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்துப் போவதை நிச்சயமாக நீர் கண்டிருப்பீர். ”

அல்குர்ஆன் : 59:21
( தன்மையிலிருந்து படர்க்கைகான சடுதியான மாற்றம் நாம்.......அல்லாஹ், குர்ஆனில் பரவலாக வருவது.)


என்னைப் போர்த்தும்! என்னைப் போர்த்தும்! என வேண்டிக் கொண்ட அன்னாரது நிலைமையின் உணர்வுகள் அடிக்கடி எழலாயின. ஒரு நாள் இரவு, தாம் போர்த்தியவராக இருந்த போது, அன்னாரின் தபிமையில், ஓர் இறைவசனம் அருளப்பட்டது. இது வரை அருளப்பட்டனவற்றுள் அவசரமானதாகவும் கடுமையானதாகவும், நியாயத் தீர்ப்பு நாள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் படியாகவும் அது வந்தது.

“ போர்த்தியிருப்பவரே! நீர் எழும்! (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்!

உமதிறைவனைப் பெருமைப்படுத்தும்! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்

கொள்ளும்! அசுத்தங்களை வெறுத்துவிடும்...

எக்காளம் ஊதப்படும் பட்சத்தில், அந்நாள் மிகக் கஷ்டமான நாளாகும். (அந்நாள்)

நிராகரிப்போர்க்கு எளிதானதன்று. ”. - அல்குர்ஆன் : 74 : 1-10

Thursday, 29 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தொழுகை

இறுதி வாக்கியத்துக்கொப்ப வானவர், இறைவசனம் என்பன குறித்துத் தமது மனைவியின் பின்னர், தம்மோடு மிக நெருங்கியவர்களாகவும் அன்புடையவர்களாகவும் இருந்தோருக்குக் கூறலாயினர் நபிகளார். இந்த இரகசியத்தை வெளியிட்டு விடக்கூடாது என்பது தவிர வேறு எதனையும் அன்னார் அவர்களிடம் வேண்டவில்லை. எனினும் இந்நிலைமை அதிக காலம் நீடிக்கவில்லை.

ஜிப்ரீல் ஒரு நாள் மக்காவின் மேலுள்ள மேட்டு நிலத்தில் தோற்றமளித்து தனது குதிகாலை நிலத்தில் அமிழ்த்தினார். அவ்விடத்தேற்பட்ட குழியிலிருந்து நீர் பிரவேசிக்கத் தொடங்கியது. அதன் பின்னர், தொழுகையின் முன்னர் ஒருவர் அங்க சுத்தி செய்வதெப்படி என்பதனை ஜீப்ரீல் தானே செய்து காட்டினார். நபிகளார், அவரது முன்மாதிரியைப் பின்பற்றித் தாமும் அவ்வாறே செய்தார்கள். அதன் பின்னர் ஜிப்ரீல் தொழுகையின் வெவ்வேறு நிலைகளை - நிற்றள், குனிதல், கீழே விழுந்து வணங்குதல் என்பனவற்றை அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வே மிகப்பெரியவன் எனும் இறைபோற்றலுடன் செய்து காட்டி, இறுதியில் அஸ்ஸலாமு அலைக்கும்- உங்கள் மீது சாந்தியுண்டாவதாக எனும் சோபனத்துடன் முடித்தார். இவற்றையும் நபிகளார் பின்பற்றிச் செய்தார்கள். ஜிப்ரீல் அன்னாரை விட்டுச் செல்ல, நபிகளார் வீடு திருப்பித் தம் மனைவி கதீஜாவுக்குத் தாம் கற்றனவற்றைக் கற்பித்தார்கள். இருவரும் ஒன்றாகத் தொழுதனர். இப்போது நபிகளாரின் மதம் ஆசார முறையிலான சுத்திகரிப்பும் தொழுகையுமாக அமைந்தது. கதீஜாவின் பின்னர், புதிய மதத்தைத் தழுவியோர் அலீ, ஸைத், தையிம் கோத்திரத்தைச் சார்ந்தவரும் நபிகளாரின் நண்பருமான அபூ பக்ர் ஆகியோராவார். அலி பத்து வயதினராயிருந்தார். ஸைதுக்கு மக்காவில் எவ்வித செல்வாக்கும் இல்லை. ஆனால் அபூ பக்ர் மக்களால் விரும்பப்பட்டவராகவும் மதிக்கப்பட்டவராகவும் விளங்கினார். பரந்த அறிவும், எளிமையான குண நலன்களும், எவருடனும் ஒத்துச் செல்லும் போக்கும் உடையவராயிருந்தார் அவர். பல் வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனை பெறவென அவரை நாடிப் பலரும் வருவர். தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அவர், இரகசியமாக நபிகளாரைப் பின்பற்றும்படி கூறி வந்தார். இவ்வாறு ஆரம்பத்தில் அபூபக்கருக்குச் செவி மடுத்தோரில் இருவர் அப்த்-அம்ர், அபூ உபைதா ஆகியோர். ஸுஹ்ரா கோத்திரத்தவரான அப்த்-அம்ர், நபிகளாரின் தாயாரது தூரத்து உறவினரான அவ்ப் என்பவரின் மகன். பனீ-அல்-ஹாரித் கோத்திரத்து அல்-ஜர்ராவின் மகன்-அபூ-உபைதா.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

ஆரம்ப இறைவசனங்கள்


பாரியதொரு பிரச்சினைக்கு முஹம்மத் மூலம் காணப்பட்ட சுமுகமான தீர்வு அவரது அதிகாரத்தினதும் தூதினதும் வெளிப்படையான குறிப்புகளை உணர்த்தி நின்றது.

நீண்ட காலம் கழியுமுன்னமேயே பலம் வய்ந்த அகக் குறிப்புகளையும் காணலானார் முஹம்மத். அவர் ஏற்கெனவே கொண்டிருந்த உணர்வுகளை உறுதிப்படுத்துவனவாக இவை அமைந்தன. இது குறித்து வினவப்பட்டபோது அவர் தனது உறக்கத்தில் எழும் ‘மெய்ம்மையான பிரமைகள்’ பற்றியும் அவை ‘உதய காலத்தெழும் ஒளியை ஒத்து’ இருந்தமை குறித்தும் விவரித்துக் கூறினார். - (ஸஹீஹ் புகாரி. 1.3) இவ்வாறான தோற்றங்களின் உடனடி விளைவாக அமைந்தது, தனிமையின் மீது அவருக்கு இருந்த விருப்பின் வலுப்பமாகும். இதனால் அவர் ஹிறா எனும் மலைக்குகைக்கு அடிக்கடி ஆன்மீக சிந்தையராய்ச் செல்லலானார். ஹிறாவும் மக்காவை அண்மியதோர் இடமே. 

இவ்வாறு அவர் செல்வது குறைஷியரைப் பொறுத்தளவில் புதுமையானதோர் அம்சமல்ல. ஏனெனில் ஆன்மீகத் தனிமை நாடிச் செல்வது இஸ்மாயீலின் சந்ததியினரிடையே மரபுவழி வந்ததொன்றாக இருந்தது. ஒவ்வொரு தலைமுறையிலும், மானிட லோகத்து அசூயைகளினின்றும் பிரிந்து நின்று தனிமையில் தவமியற்றச் செல்லும் சிலர் பண்டு தொட்டு இருந்து வந்தனர். தொன்று தொட்டு நிலவி வந்த இந்த மரபினைப் பின்பற்றி முஹம்மதும், தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு இறைவனின் தியானத்துக்கெனச் சில இரவுகளை ஒதுக்கியவராகத் தனிமையில் சென்று விடுவார். ஒதுக்கிய காலம் கழிய, தன் குடும்பத்தினரிடம் திரும்பி வருவார். 
சில போது மேலும் பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் குகைக்குச் செல்வதுண்டு. கடந்த வருடங்களாக நகரை விட்டும் வெளியேறித் தனது தவமியற்றும் இடத்தை அவர் அண்மிச் செல்லும் போது, 

Wednesday, 28 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

கஃபாவின் புனரமைப்பு

கடைசியாகக் கண்ட நிகழ்ச்சிகளுக்குச் சிறிது முன்னர், அலீ குடும்பத்தவருள் ஒருவராக அமைந்த காலத்தின் போது, முஹம்மத் முப்பத்தைந்து வயதுடையவராக இருந்த நிலையில் குறைஷிகள் கஃபாவைப் புனர் நிர்மாணம் செய்ய முடிவு செய்தனர். 

கஃபா இருந்த நிலையில் அதன் சுவர்கள் ஒரு சாதாரண மனிதனது உயரத்தினவாகவே இருந்தன. கூரையேதும் இல்லை. அதனால் கதவுகள் மூடப்பட்ட நிலையிலும் அதன் உள்ளே செல்ல இயலுமாயிருந்தது. கட்டடத்தினுள் பெறுமதிவாய்ந்த பொருட்களைப் பாதுகாக்கவெனத் தோண்டப்பட்டிருந்த நிலவறையினின்றும் பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. கூரைக்கு வேண்டிய மரக்குற்றிகள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன. ஜெத்தாவுக்கு அண்மையில் கிரேக்க வர்த்தகரொருவரது கப்பலொன்று திருத்த முடியாத நிலையில் கரை தட்டியிருந்தது. அதன் பலகைகளைக் கூரை முகடுகளுக்குப் பயன் படுத்தவெனக் கொண்டு வந்திருந்தனர். இவ்வேளையில் நல்லதொரு தச்சரும் மக்காவில் இருந்தார். அவர் கொப்டிக் மதத்தவர். 
கஃபா குறித்துக் குறைஷியரிடையே இருந்த வியப்பும் அச்சமும் காரணமாக அதில் கைவைப்பதற்கு அனைவருமே தயங்கினர். அவர்களது திட்டம், வெறுமனே கற்களை அடுக்கி எழுப்பப்பட்ட சுவர்களை இடித்துப் புதிதாக உறுதியான சுவர்களை எழுப்புவதாகும். என்றாலும் இது இறைவிரோதச் செயலாயமைந்து விடுமென அவர்கள் அஞ்சினர். இவ்வாறான எண்ணத்தை உறுதிப்படுத்துவதாயமைந்தது கஃபாவின் உட்புறத்தில் வாழ்ந்துவந்ததொரு பெரும் பாம்பின் செய்கைகளாகும். தினமும் அது வெளியே வந்து கஃபாவின் சுவர்களிலிருந்து வெய்யிலில் காய்ந்து செல்லும். யாரேனும் அருகில் சென்றால் பயங்கரமாக படமெடுத்துச் சீறும். இது அனைவரையும் அச்சுறுத்தியது. எனினும் ஒரு நாள் அது வெளியே வந்து வெய்யில் காயும் போது இறைவன் ஒரு கழுகை அனுப்பி வைத்தான். அது பாம்பைப் பிடித்து பறந்து சென்றது. பின்னர் குறைஷியர் தமக்குள்ளே கூறிக் கொண்டனர் : 
“ இறைவன் எமது நோக்கங்களினால் நிச்சயமாகத் திருப்தியுற்றுள்ளான் என நாம் நம்பலாம். எங்களது எண்ணத்துக்கியைபவனாக ஒரு தச்சன் எம்மிடம் உள்ளான். பலகைகளும் எம்மிடம் இருக்கின்றன. இறைவன் எம்மைப் பாம்பிலிருந்தும் காப்பாற்றி விட்டான். ” 

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


இல்லத்தார் ( தொடர்…2 )

முஹம்மதின் பெரிய தந்தையருள் மூத்தவரும், மரணித்து விட்டவருமான ஹாரித் பல மக்களை விட்டுச் சென்றார். அவர்களுள் ஒருவர் அபூஸுப்யான். உடன் பிறவாச் சகோதரரான இவர் ஒருவகையில் முஹம்மதின் வளர்ப்புச் சகோதரரும் ஆவார். முஹம்மதின் பின்னர் சில வருடங்கள் கழித்து, பனீஸஅத் கோத்திரத்தின் ஹலீமாவிடமே பால் குடித்து வளர்ந்தவர் அபூஸுப்யான். மிகவும் நெருங்கிய ஒருமைப்பாடு இவர்களிருவரிடமும் காணப்பட்டதென்பர் அக்காலத்திய மக்கள். மிகவும் முக்கியமானதோர் அம்சம், இருவரும் பெற்றிருந்த சொல்வன்மையாகும். ஆனால் அபூஸுப்யானோ சிறந்ததோர் கவிஞனும் ஆவார். தனது சிறிய தந்தையரான ஸுபைர், அபூதாலிப் ஆகியோரையும் விடச் சிறந்ததொரு கவிஞனாயிருந்தார். முஹம்மத் கவிதை யாப்பதில் எப்போதுமே கவனம் செலுத்தியதில்லை. எனினும் அறபு மொழியிலும் சொல்வன்மையிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

ஓரளவு சம வயதுடையவராயிருந்த அபூஸுப்யானில் முஹம்மத் ஒரு நண்பனையும் சகாவையும் கொண்டிருந்தார். அத்தோடு இரத்த பந்தத்தில் மிக நெருங்கியவர்களாக இருந்தோர், தந்தையாரின் உடன் பிறந்த சகோதரியரின், அதாவது அப்த்-அல்-முத்தலிபின் ஐந்து மூத்த புதல்வியரது மக்கள். மாமியார் உமைமாவின் மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உமைமா, அறேபியாவின் வட பிரதேசத்து அஸத் கோத்திரத்தின் - (அஸத்-இப்ன்-குஸைமா, மக்காவில் வட கிழக்குப் பகுதியில், நஜ்த் வெளியின் வடஎல்லைப் பகுதியில் ஒரு கோத்திரம். இது வேறு, குறைஷிக் குலத்தின் அஸத் கோத்திரம் வேறு) -ஜஹ்ஷ் என்பாரை மணம் செய்திருந்தார். ஜஹ்ஷுக்கு மக்காவிலும் ஒரு வீடு இருந்தது. தனது சொந்த கோத்திரத்தினின்றும் வெளியே அமைந்த ஒரு கோத்திரத்தின் மத்தியில் வாழும் ஒருவர், பரஸ்பர ஒப்பந்த மூலம் அக்கோத்திரத்துடன் ஒன்றுபட்டவராக இணைந்து, அதன் பொறுப்புகளிலும் பங்கேற்று, சில உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. அப்த்-ஷம்ஸ் - அப்த்-ஷம்ஸின் மகன். ஹர்பின் தந்தை உமையாவின் பெயரில் வழங்குவது. -கோத்திரத்தின் உமையாக் கிளையின் தலைவராக இருந்த ஹர்ப் என்பார் ஜஹ்ஷைத் தனது குழுவினருள் ஒருவராக ஏற்றிருந்தார். எனவே ஜஹ்ஷை மணந்து கொள்வதன் மூலம், உமைமா ஷம்ஸ் கோத்திரத்தார் ஒருவரையே மணந்தவராகின்றார். அவர்களது மூத்த புதல்வர் அப்த்-அல்லாஹ். முஹம்மதுக்குப் பன்னிரண்டு வயது குறைந்தவராயிருந்தாலும் இருவரிடையிலும் நெருங்கிய பந்தம் ஏற்பட்டிருந்தது. அப்த்-அல்லாஹ்வுக்குப் பல ஆண்டுகள் இளையவரான அவரது சகோதரி, உமைமாவின் மகள், பேரழகியாயிருந்த ஸைனபும் இப்பந்தத்துக்குள்ளாயிருந்தார். அவர்களது மிக்க இளம் பருவத்திருந்தே அவர்களை அறிந்து அவர்கள் மீது அன்பு செலுத்தி வந்தார் முஹம்மத். மற்றொரு மாமியார் பர்ராவின் மகன் அபூஸலாமாவும் ஆழ்ந்த அன்பு செலுத்தப்பட்டார்.

Tuesday, 27 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இல்லத்தார் ( தொடர்…)


யாத்திரிகர்கள் வீடு திரும்பிய உடனேயே தனக்கு கிட்டிய நற்செய்தியுடன் ஹாரிதா தன் சகோதரர் கஅப்பைச் சென்று கண்டு இருவருமாக மக்காவுக்குப் புறப்பட்டனர்.

முஹம்மதிடம் சென்ற அவர்கள் எந்த ஒரு விலைக்காயினும் ஈடாக ஸைதை விடுவிக்கும்படி மிகப் பணிவுடன் வேண்டி நின்றார்கள். “ அவரே தெரிவு செய்யட்டும் ” என்றார் முஹம்மத். “ அவர் உங்களைத் தேர்ந்தால் எவ்விதப் பணயமும் இன்றி அவரை நீங்கள் கூட்டிச் செல்லலாம்; அவ்வாறின்றி அவர் என்னைத் தேர்ந்தாலோ! - என்னைத் தேர்ந்து கொண்டவருக்கு மேலாக எவரையும் நிலை நிறுத்தும் மனிதனல்ல நான் ” எனக் கூறிய அவர், ஸைதை அழைத்து, இம்மனிதர்கள் இருவரையும் அவர் அறிவாரா எனக் கேட்டார். “ இவர் எனது தந்தை. மற்றவர் எனது சிறிய தந்தை ” என்றார் ஸைத். “ என்னை உமக்குத் தெரியும். உம்முடன் நான் கொண்டுள்ள உறவினையும் நீர் அறிவீர். என்னிலும் அவர்களிலும் விரும்பியவரை நீரே தேர்ந்து கொள்வீராக ” என்றார் முஹம்மத். ஸைத் ஏற்கெனவே தேர்ந்திருந்தார். “ உமக்குப் பிரதிநிதியாக நான் எந்தவொரு மனிதனையும் தேர்ந்து கொள்ள மாட்டேன். எனக்குத் தந்தையாகவும் தாயாகவும் விளங்குபவர் நீரே! ” என்றார் அவர். “ தொலைந்து போவாயாக ஓ ஸைத்! சுதந்திரம், தந்தை, சிறிய தந்தை, குடும்பம் அனைத்துக்கும் மேலாக அடிமைத்தனத்தைத்தான் நீ விரும்புவாயா? ” என்றனர் கல்ப் கோத்திரத்தார். “ அவ்வாறேதான். இந்த மனிதரிடம் நான் கண்டு கொண்டவைகளின் காரணமாக, இவருக்கு மேலாக என்னால் எவரையும் தேர்ந்து கொள்ள முடியாது. ” என்றார் ஸைத்.

மேற்கொண்டு வார்த்தைகள் வளராமல் முஹம்மத், மூவரையும் கஃபாவுக்கு அழைத்து சென்றார். ஹிஜ்ரின் மீது நின்றவராக உரத்த குரலில் அவர் கூறினார் : “ ஸைத் எனது மகன் என்பதற்கு இங்கு குழுமியிருக்கும் அனைவரும் சாட்சி பகர்வீர்களாக! அவரது வாரிசு நான் - அவர் என்னுடையவர் ” - ( இ.ஸா. 3/1:28 )

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இல்லத்தார்

மணவாளர் தனது பெரிய தந்தையார் வீட்டை விட்டு மணாளியின் வீட்டுக்கே குடியிருக்கச் சென்றார். கதீஜா மனைவியாக மட்டுமன்றி, ஒரு நண்பராக, கணவரின் எண்ணங்கள் அபிலாஷைகள் என்பவற்றில் சிறந்ததொரு பங்கினை வகித்தவராக விளங்கினார். அவர்களது திருமண வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக, மிக்க மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. இழப்புகளினாலான துயரங்களும் இருக்கத்தான் செய்தன. கதீஜா மூலம் முஹம்மதுக்கு ஆறு குழந்தைகள் கிடைத்தனர். அவர்களுள் இருவர் ஆண்கள். மூத்த குழந்தை காஸிம் எனப் பெயரிடப்பட்ட மகன். முஹம்மத், ‘ அபுல் காஸிம் ’ - காஸிமின் தந்தை - என அழைக்கப்பட்டார். எனினும் காஸிம் இரண்டு வயதை அடையுமுன்னரே காலமாகிவிட்டார். இரண்டாவது குழந்தை ஸைனப் என்ற புதல்வி. அவருக்குப் பின்னால் வந்த மூவரும் பெண்கள். ருகையா, உம்ம் குல்தூம், பாத்திமா ஆகியோர். இறுதியாகப் பிறந்த மகனும் குறுகிய காலமே வாழ்ந்தார்.


தனது திருமண நாளின் போது தந்தையாரிடமிருந்து தான் பெற்றிருந்த அன்பு நிறைந்த பணிப்பெண்ணான அடிமை பரகாஹ்வை முஹம்மத் விடுதலை செய்து விட்டார். அதே தினம் கதீஜா தனது சொந்த அடிமைகளிலிருந்து ஒருவரைத் தனது கணவருக்கு அன்பளிப்புச் செய்தார். பதினைந்து வயது நிரம்பியவராயிருந்த ஸைத் அவர். பரகாஹ், யத்ரிப் நகர வாசி ஒருவருக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டார். அவர்களுக்கு ஒரு மகன் கிடைத்தார். அதன் பின்னர் பரகாஹ் ‘ உம்ம் அய்மன் ’ - அய்மனின் தாய் - என்றே வழங்கப்பட்டார். கதீஜாவின் சகோதரர் ஹிஸாம் என்பாரின் மகன் ஹகீம், அண்மையில் உக்காஸ் சந்தையில் வைத்து விலை கொடுத்து வாங்கியிருந்த சில இளைஞர்களுள் ஒருவரே ஸைத். மாமியார் தனது வீட்டுக்கு வருகை தந்தபோது, ஹகீம் தனது புதிய அடிமைகளை அழைத்து, விருப்பமான ஒருவரைத் தெரிந்து கொள்ளும்படி அவரை வேண்டினார். கதீஜா ஸைத்தைத் தேர்ந்து கொண்டார்.

Monday, 26 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

திருமண எண்ணங்கள் (தொடர்…)

தொடர்ந்து ஸிரியா செல்லும் வழியில், மைஸராவின் மனதில் நெஸ்டோரின் வாக்கு ஆழமாக பதியலாயது. என்றாலும் அவ்வார்த்தைகள் மைஸராவுக்குப் பெரும் ஆச்சரியங்களெதனையும் ஊட்டுவதாக இல்லை. ஏனெனில் தான் இதுவரை கண்டவர்கள் அனைவரிலும் முற்றும் வித்தியாசமான ஒருவருடனேயே பிரயாணம் செய்து வருவதனை முழு பிரயாணத்தின் போதும் மைஸராவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. திரும்பி வரும் வழியில் அவர் அவதானித்ததோர் அம்சம் இந்நம்பிக்கையை நன்கு வேரூன்றச் செய்தது. பல சந்தர்ப்பங்களில் பாலையின் வெம்மை, மிகவும் புதுமையானதொரு வகையில், துயருறுத்துவதாக அமையாமையை அனுபவித்து வந்த மைஸரா, ஒரு நாள் பகல் போது நெருங்குகையில் குறுகிய ஆனால் தெளிவானதொரு காட்சியைக் கண்டார். வானவர்களிருவர் சூரியனது கதிர்களினின்றும் முஹம்மதுக்கு நிழல் அளித்துக் கொண்டிருந்தனர்.


தமது பொருட்களின் விற்பனவு மூலம் கிடைத்த பணத்துக்கு ஸிரியாவின் சந்தையில் வாங்கிய பொருட்களோடு, மக்காவையடைந்ததும் கதீஜாவிடம் சென்றனர் இருவரும். தனது பிரயாணம் வர்த்தக விவகாரங்கள் என்பன குறித்து முஹம்மத் அளித்து வந்த விளக்கத்தை கதீஜா அமர்ந்திருந்து மிக அவதானமாகக் கேட்டு வந்தார். இந்த வர்த்தகப் பிரயாணம் கதீஜாவுக்கு அதிக லாபத்தை ஈட்டி தருவதாக இருந்தது. ஸிரியாவில் வாங்கப்பட்ட பொருட்களை மக்காவில் இரு மடங்கு விலைக்கு விற்றுக் கொள்ளக் கூடியதாயிருந்தது. எனினும் வர்த்தக லாப நஷ்டங்கள் ஏதும் அவரது சிந்தனையில் ஆழமாகப் பதியவில்லை. இளமையும், அழகும், கம்பீரமும், நேர்மையும் அருள் நிரம்பிய தோற்றமும் கொண்டவராயிருந்த தனது வர்த்தகப் பிரதிநிதியையே அவதானித்தவராக இருந்தார் அவர். முஹம்மத் இருபத்தைந்து வதுடையவராக இருந்தார். கதீஜாவின் சிந்தனையில் பல்வேறு எண்ணங்கள் எழலாயின. தான் இன்னமும் அழகு குன்றாதவராக இருப்பதனை அவர் உணர்ந்திருந்தார். ஆனால் தான் பதினைந்து வருடங்களால் மூத்தவர். இந்நிலையில் தன்னை மணந்து கொள்ள அவர் முன் வருவாரா?

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


திருமண எண்ணங்கள்


முஹம்மத் தனது இருபதாவது வயதைக் கடந்திருந்தார். காலஞ் செல்ல செல்ல, வர்த்தகத்துக்கென வெளிப் பிரதேசங்கட்குச் சென்று வந்த அவரது உறவினர் பலரும் அவரையும் உடன் அழைத்துச் செல்லலாயினர்.

ஒரு முறை பிரயாணம் செய்து கொள்ள இயலாவதாயிருந்த ஒரு வர்த்தகரது பொருட்கள் அனைத்தையும் இவரே பொறுப்பெடுத்துச் செல்ல வேண்டியேற்பட்டது. வெற்றிகரமானதொன்றாக அமைந்த அவ்வர்த்தகப் பிரயாணத்தின் பின்னர் அது போன்ற பொறுப்புகள் பல அவரை நாடி வரலாயின. இவற்றால் வாழ்க்கை வசதிகளும் கூடவே, திருமணம் செய்து கொள்ளக்கூடுய சாதகமும் உருவாகியது.




அப்போதைய நிலையில் அவரது பெரிய தந்தையாரும் பாதுகாவலருமான அபூதாலிபுக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். மூத்தவர் தாலிப், முஹம்மதின் வயதினராகவும். அகீல் பதின்மூன்று அல்லது பதினான்கு வயதுடையவராகவும் இருந்தனர். ஜஅபர் நான்கே வயதான சிறுவர். அழகும் புத்தி சாதுரியமும் மிக்க ஜஅபருடன் முஹம்மத் கொண்டிருந்த உறவு நெருங்கியதாயிருந்தது. தனது ஒன்று விட்ட சகோதரனது அன்புக்கு ஜஅபர் எப்போதும் பக்தி சிரத்தையுடனான மாறா மதிப்பை அளித்து வந்தார்.

Friday, 16 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

சிறப்பு மிக்கதோர் ஒப்பந்தம்



ஸிரியாவில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக் கொண்ட அபூதாலிப், தனது தம்பி மகனுடன் மக்கா வந்து சேர்ந்தார். முன்னர் போலவே சிறுவரும் தனது தனிமை வாழ்வைத் தொடரலானார். அப்பாஸ், ஹம்ஸா ஆகியோரைப் போல, இவரையும் யுத்த ஆயுதங்களை உபயோகிக்கப் பழக்கினர் பெரிய தந்தையர். ஹம்ஸா இயல்பாகவே பெரிய உருவத்தினராக, மிக்க உடல் வலிமை வாய்ந்தவராக விளங்கினார். வாள் வீச்சிலும் மல்யுத்தத்திலும் சிறந்திருந்தார் அவர். சாதாரண உயரத்தினராகவும், சாதாரண பலம் வாய்ந்தராகவும் விளங்கிய முஹம்மத், வில் வித்தையில் கைதேர்ந்தவராயிருந்தார். தமது முன்னோர் இப்றாஹீம், இஸ்மாயீல் போல சிறந்த வில் வீரனாக வரும் தகைமைகள் அனைத்தும் கொண்டிருந்தார் அவர். அவருடைய பார்வைத் திறன் இதற்குத் தக்கதொரு துணையாக நின்றது. ப்ளயாடெஸ்ஸின் உடுத்தொகுதியில் பன்னிரண்டுக்குக் குறையாத நட்சத்திரங்களை எண்ணக் கூடியவர் எனப் பெயர் பெற்றிருந்தார் அவர்.

இந்த வருடங்களில் குறைஷிகள் எந்தவொரு பெரிய யுத்தங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. ‘ புனிதமிக்க யுத்தம் ’ என்ற பெயரில் சிறிய கலவரங்களும், தாக்குதல்களுமே தொடர்ந்து வந்தன. புனித மாதங்களின் போது ஆரம்பித்தமையாலேயே இந்த யுத்தத்துக்கு அப்பெயர் வழங்கியது. கினானா கொத்திரத்தைச் சார்ந்த துன்மார்க்கனான ஒருவன், கபடமான முறையில், நஜ்தின் ஹவாஸின்களது ஆமிர் கோத்திரத்தவர் ஒருவரைக் கொலை செய்து விட்டான். பின்னர், அவன் கைபர் பிரதேசத்தில் இலகுவில் ஊடுருவ முடியாததொரு கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டான். தொடர்ந்து நடந்த சம்பவங்கள் வழக்கமான பாலை நில மரபுகளையே கொண்டிருந்தன.
கெளரவம் பழிவாங்குதலை வேண்டி நின்றது. எனவே மரணமுற்றவனது கோத்திரத்தார் கொலைகாரனைக் கொண்ட கினானாவைத் தாக்கினர். ஓரளவு மதிப்பிறங்கிய வகையில், குறைஷியரும் கினானாவின் சார்பாக இதில் கலந்து கொண்டனர். 

இந்தப் பிரச்சினை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. எனினும் உண்மையான யுத்தம் நடந்தது மொத்தம் ஐந்து நாட்கள் மாத்திரமே. ஹாஷிம் கோத்திரத் தலைவராக அப்போதிருந்தவர் ஸுபைர். அபூதாலிபைப் போல இவரும் முஹம்மதின் தந்தை அப்த்-அல்லாஹ்வின் ஒரு தாய் வயிற்றுச் சகோதரர். ஸுபைரும் அபூதாலிபும் தமது தம்பி மகனை இந்த யுத்த ஆரம்பத்தின்போது கூட்டிச் சென்றனர். எனினும் அவர் மிகவும் இளையவராக இருந்தமையினால் யுத்தத்திலீடுபடுத்தப்படவில்லை. எதிரிகளின் அம்புகளில் குறி தவறியனவற்றினைப் பொறுக்கி மீண்டும் எறியவென தமது பெரிய தந்தையரிடம் எடுத்துக் கொடுக்கும் பணியில் மட்டும் அவர் ஈடுபடுத்தப்பட்டார். - (இ.ஹி 119) 

பின்னைய யுத்தங்களில் ஒன்றன்போது குறைஷியரும் அவர்களைச் சார்ந்தோரும் தோல்வியுறக்கூடியதொரு நிலையில் இருந்தபோது அவர் வில்லெறிய அனுமதிக்கப்பட்டார்: அவரது திறமையும் வீரமும் பெரிதும் புகழப்பட்டன - ( இ.ஸா 1/1:81)


நிலையான குடியமைப்பைக் கொண்டிருந்தவர்கள், பாலை நில மரபுகள் மதிப்பீடொன்றனை மேற்கொள்ளவும், அதன் வழி வந்த தமது எண்ணங்களை பிறரிடையே பரப்பவும் இந்த யுத்தம் துணை செய்தது. குறைஷிகளின் தலைவர்களில் பலர், ஸிரியா சென்று, ரோம சாம்ராச்சியத்தின் நீதி முறைகள் பற்றித் தெரிந்திருந்தனர். அபிஸீனியாவிலும் யுத்தங்களின்றியே நீதி பெறக் கூடுமாயிருந்தது. ஆனால் அறேபியாவில், பாதிப்புக்குள்ளானவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ நீதி பெற எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் இல்லை. எனவே இப்புனிதமிழந்த யுத்தமும், முன்னைய பல போராட்டங்களில் போலவே, இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்படாதிருக்க ஆவன செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைப் பலரிடையேயும் வலுப்படுத்துவதாய் அமைந்தது. ஆனால் இம்முறை, முடிவுகள் வெறுமனே சிந்தனைகளுடனும் வார்த்தைகளுடனும் நின்று விடவில்லை. குறைஷிகளைப் பொறுத்தமட்டில் இவ்வாறான பிரச்சினைகட்கு நிலையான தீர்வொன்றனைக் காணும் எண்ணம் உறுதியாயிற்று.


நீதி பற்றிய அவர்களது உணர்வினைப் பரிசீலிக்கும் நிகழ்ச்சியொன்று இந்த யுத்தம் முடிந்த ஒரு சில வாரங்களுக்குள் நடந்தது.

யெமன் துறைமுகமான ஸாபித்திலிருந்து வந்த ஒரு வர்த்தகர், சில பெறுமதி வாய்ந்த பொருட்களை ஸஹ்ம் கோத்திரத்தவர் ஒருவருக்கு விற்பனை செய்தார். இவற்றைப் பெற்றுக் கொண்ட அந்த ஸஹ்மி பின்னர் தான் ஒப்புக் கொண்ட தொகையைக் கொடுக்காது மறுத்து விட்டார். ஏமாற்றப்பட்ட அந்த வர்த்தகர் மக்காவுக்குப் புதியவர். தான் உதவிக் கோரிச் செல்ல யாரையும் அறியாதவர். அவர் தொடர்பு கொண்டிருந்த எந்த ஒரு கோத்திரமும் அங்கில்லை. இவையனைத்தையும் அந்த ஸஹ்மீ நன்கறிந்திருந்தார். எனினும் அந்த யெமன் வாசி தளர்ந்து விடுவதாக இல்லை. அபூ குபைஸ் குன்றின் மீதேறி, குறைஷிகள் அனைவரையும்விளித்து, மிகவும் உக்கிரமமான முறையில் அவர் நீதி கோரி நின்றார். ஸஹ்ம் கோத்திரத்தவரோடு மரபு ரீதியாக ஒப்பந்தங்கள் ஏதும் செய்திராத கோத்திரங்கள் பலவும் உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண முன் வந்தன. 
கோத்திரப் பிரிவினைகள் எவ்வாறிருந்தாலும் குறைஷிகள் அனைவரும் ஒற்றுமைப்பட்டிருப்பதில் கூடிய கவனம் செலுத்தினர்.என்றாலும் அவர்களை முன்னர் பிரித்து வைத்திருந்த சம்பவம் இன்னும் அடிமனத்தில் இருக்கத்தான் செய்தது. குஸையின் பின்னர், குறைஷிக் குலத்தார் வாசனையாளர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பிரிந்திருந்த சம்பவமே அது. ஸஹ்ம் கோத்திரத்தார் கூட்டுறவாளர்களைச் சார்ந்தோராயிருந்தனர். வாசனையாளர்களது குழுவின் அப்போதைய தலைவர்களுள் ஒருவர், தையிம் கோத்திரத்து தலைவராயிருந்த அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜூத்ஆன். நீதியை விரும்பும் அனைவரும் கலந்துரையாடக் கூடியதொரு சபா மண்டபமாகத் தனது வீட்டையளிக்க முன்வந்தார் அவர். வாசனையாளர்களுள் அப்த்-ஷம்ஸ், நவ்பல் கோத்திரத்தவர்கள் மாத்திரமே அதில் கலந்து கொள்ளாதிருந்தனர். ஹாஷிம், முத்தலிப், ஸுஹ்ரா, அஸத், தையிம் ஆகிய கோத்திரங்கள் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தன. கூட்டுறவாளர் பிரிவிலிருந்து அதீ கோத்திரத்தாரும் கலந்து கொண்டனர். 
நல்லதொரு கலந்துரையாடலின் பின்னர், பலமிழந்தவர்களைப் பாதுகாக்கவும், நீதியை நிலை நிறுத்தவும் வீரியம் பொருந்தியதோர் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அனைவருமாக கஃபாவுக்குச் சென்றனர். கருநிறப் பாறையின் மீது நீரை ஊற்றி, வடியும் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதனை புனித நீர் எனக் கொண்டு ஒவ்வொருவரும் சிறிது சிறிதாக அருந்தினர். பின்னர் தமது வலக்கரத்தை தலையின் மீது உயர்த்தியவர்களாகச் சபதமொன்று செய்தனர். அன்று முதல், மக்கா நகரில் எந்த ஓர் அநீதியிழைக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்குச் சார்பாக தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதி நிலைபெறும் வரை பாதித்தவருக்கெதிராக நிற்பர் என்பதே அது. பாதிக்கப்பட்டவர் குறைஷிக் குலத்தவராயினும் சரி, வெளியே இருந்து வந்தவராயினும் சரியே. 

பின்னர் ஸஹ்மீ தனது கடனைச் செலுத்தப் பலவந்தப்படுத்தப்பட்டார். இவ்வொப்பந்தத்தில் கலந்து கொள்ளாத கோத்திரங்கள் கூட ஸஹ்மிக்கு ஆதரவாக முன் வரவில்லை.

தையிம் தலைவரோடு, ஹாஷிம் கோத்திரத்து ஸுபைர் இவ்வேற்பாட்டின் கர்த்தாக்களில் ஒருவராயிருந்தார். அவர், தமது தம்பியின் மகன் முஹம்மதையும் இவ் ஒப்பந்தத்திற்கு அழைத்து வந்திருந்தார். இச்சபதத்தின் போது பங்கு பெற்ற முஹம்மத் பின்னர் ஒரு காலத்தில் கூறினார்: “ அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜுத்ஆனுடைய இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த உன்னதமான ஒப்பந்தத்தின்போது நானும் பிரசன்னமாயிருந்தேன். செந்நிற ஒட்டகக் கூட்டம் ஒன்றைப் பிரதியாக தருவதாயிருப்பினும் நான் அதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டேன். இப்போது இஸ்லாத்தில் இருக்கும் நான் அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வேன் ” -(இ.இ. 86)

அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர், ஜுத்ஆனின் ஒன்றுவிட்ட சகோதரர், தையிம் வம்சத்தவரேயான அபூ-குஹாபா, அவர் தன்னுடன், முஹம்மதிலும் இரண்டு வயது இளையவராயிருந்த தனது மகனையும் அழைத்து வந்திருந்தார். முஹம்மதின் மிக நெருங்கிய நண்பராக அமையவிருந்தார், அபூ-குஹாபா கூட்டி வந்த மகன் அபூபக்ர்.


இன்னும் வரும்…

இறைவன் நாடினால்,

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பஹீரா...

அப்த்-அல்-முத்தலிபின் இறுதிக் காலப் பகுதியில் அவரின் செல்வ வளமும் குன்றிச் சென்றிருந்தது. அவர் தனது மக்களுக்கு விட்டுச் சென்றனவும் சிறியனவாகவே இருந்தன. அவர்களுள் சிலர், சிறப்பாக அபூலஹப் என வழங்கப்பட்ட அப்த்-அல் உஸ்ஸா முதலியோர் சொந்தமாகவே பெரும் செல்வம் சேகரித்திருந்தனர். அபூதாலிப் ஏழையாகவே இருந்தார். எனவே அவரது தம்பி மகன் முஹம்மதும் தன் ஜீவியத்துக்காகத் தன்னால் இயன்றளவு சுயமாகச் சம்பாதிக்க வேண்டியவராயிருந்தார். ஆடுகள் மேய்க்கும் தொழிலிலேயே அதிகம் ஈடுபட்ட சிறுவர், மக்காவைச் சூழவுள்ள மலைகளிலும், சுற்றுப் புறங்களிலும் பல நாட்களைத் தனிமையிலேயே கழித்து வரலாயினார். அபூ தாலிப் தனது பிரயாணங்களின் போது, சிறுவரை நகருக்கு வெளியே கூட்டிச் செல்வதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தார். இவ்வாறுதான் ஒரு முறை முஹம்மத் ஒன்பது வயதுடையவராக இருந்த போது,- சிலர் பன்னிரண்டு வயதென்பர் - அவர்கள் ஒரு வர்த்தகக் குழுவுடன் ஸிரியா வரை சென்றனர்.  

போஸ்த்தராவுக்கு அருகில் வழக்கமாக மக்கத்து வர்த்தகக் குழுக்கள் தங்கிச் செல்லும் இடத்துக்கருகே ஒரு மடம் இருந்தது. தலைமுறை தலைமுறையாக அங்கே ஒரு கிறிஸ்தவ மதகுரு வாழ்வது வழக்கம். ஒருவர் இறந்தால் மற்றொருவர் அங்கு இடம்பெறுவார். மடத்தின் அனைத்துப் பொருட்களும் பழம் ஏட்டுச் சுவடிகளும் மதகுருவின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. இந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்று, அறபிகளுக்கு ஓர் இறைதூதர் வருவதனை முன்னறிவிப்புச் செய்வதாக இருந்தது. தற்போது அம்மடத்தில் வாழ்ந்து வந்த பஹீரா, இச்சுவடிகளை நன்கு கற்றறிந்தவராகவும் அவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். வரகாஹ்வைப்போல இவரும், தனது வாழ்நாளுக்குள்ளேயே இவ்விறை தூதர் தோற்றம் பெறுவார் என்ற ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.

Thursday, 15 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இரு துயர்கள்

ஹலீமாவும் ஹாரிதும் சிறுவர்கள் உண்மையே பேசுகின்றார்கள் என உறுதி கொண்டனர். எனவே விளைவுகளை எண்ணி அவர்கள் சஞ்சலம் கொள்ளலானார்கள். தமது வளர்ப்பு மகன் தீய ஆவியினால் அல்லது ஏதோ ஒரு சூனியத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார் என்றே ஹாரித் நம்பினார். அதன் தாக்கங்கள் தெளிவாகு முன்னர் விரைவாக சிறுவரை அவரது தாயாரிடம் கொண்டு சேர்க்கும்படி ஹலீமாவை வேண்டினார் அவர். 

ஹலீமா சிறுவரைக் கூட்டிக் கொண்டு மக்கா சென்றார். தனது மன மாற்றத்தின் காரணத்தையோ, உண்மையில் நடந்த சம்பவத்தையோ ஆமினாவிடம் கூறும் நோக்கம் அவருக்கில்லை. என்றாலும் ஹலீமாவின் சடுதியான மாற்றம் ஆமினாவுக்கு திருப்தி தராது போகவே, ஹலீமா உண்மையை, நடந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாகக் கூறினார். பின்னர் ஆமினா கூறினார் : “ எனது சிறிய மகனுக்கு மாபெரும் எதிர்காலம் ஒன்று காத்திருக்கின்றது ” இது ஹலீமாவின் அச்சத்தைத் தீர்த்து வைப்பதாயிருந்தது. தொடர்ந்து தான் கர்ப்பமுற்றிருந்த காலத்து அனுபவங்களை, தன்னுள் ஓர் ஒளியை ஏந்தி நிற்கும் உணர்வு கொண்டிருந்த தன்மையை ஆமினா விளக்கினார். ஹலீமா ஆறுதலடைந்தார். என்றாலும் இம்முறை ஆமினா மகனைத் தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்தார். “ அவரை என்னிடமே விட்டு விடும்; உமது பயணம் நல்லதாக அமையட்டும் ” என்றார் ஆமினா.


சிறுவர் மூன்று வருட காலமளவு, மக்காவிலேயே தனது தாயாருடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வந்தார். பாட்டனார், மாமன்மார், மாமியர், விளையாட்டுத் தோழர்களாயிருந்த ஒன்று விட்ட சகோதரர்கள், ஏனைய உறவினர்கள் முதலிய அனைவரதும் அன்பைப் பெற்றவராக அவர் விளங்கினார். குறிப்பாக அவருடன் மிக நெருங்கியவர்களாக இருந்தவர்கள் ஹம்ஸாவும் ஸபிய்யாவும் ஆவர். இவர்கள் இருவரும் அப்த்-அல்-முத்தலிபின் கடைசித் திருமணத்தின் மூலம் கிடைத்த குழந்தைகள். அத்திருமணமும், சிறுவரின் தந்தை அப்த்-அல்லாஹ்வின் திருமணமும் ஒரே தினத்திலேயே நடந்திருந்தன. ஹம்ஸா, இச்சிறுவரது வயதினராகவே இருந்தார். ஸபிய்யா சற்றே இளையவர். தந்தை வழியில் அவர்கள், சிறிய தந்தையும் மாமியாரும் ஆவர். தாய் வழியிலோ அவர்கள் ஒன்று விட்ட சகோதரரும் சகோதரியும் ஆவர். இம்மூவரிடையிலும் பலம் வாய்ந்த ஆழமானதொரு பந்தம் ஏற்பட்டது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பாலை…(தொடர்…)

குழந்தையின் தாய் ஆமினாவோ வறுமையில் வாழ்பவர். குழந்தையோ, செல்வமெதனையும் சேகரித்து வைக்கும் வயதை அடையுமுன்னமேயே இறந்து போன ஒரு தந்தையின் மகன்.

அப்த்-அல்லாஹ் தன் மகனுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள். சிறியதோர் ஆட்டுமந்தை. ஓர் அடிமைப் பெண். உண்மையிலேயே அப்த்-அல்லாஹ்வின் மகன் பெரியதொரு குடும்பத்தில் உதித்தவர்தான். ஆனால் அந்த வருடம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆக வறுமையான குழந்தையாகவே அவர் விளங்கினார்.

மறுபுறம், செவிலித்தாய் - தந்தையர் செல்வந்தர்களாகவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படாவிடினும் அவர்கள் வறுமையில் வாடாதவர்களாக இருக்க வெண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கப்பட்டனர்.


ஹலிமாவும் கணவரும் ஏனையோரைப் பார்க்கிலும் வறியவர்களென்பது உறுதியாக இருந்தது. ஹலீமாவுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையில் தெரிவு நடந்தால், அடுத்தவளே எப்போதும் விரும்பப்பட்டாள். ஹலீமாவைத் தவிர்த்து, பனீ ஸஅத் பெண்கள் அனைவருமே ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். அதிக ஏழையாயிருந்த செவிலிக்கு மட்டுமே ஒரு குழந்தையில்லை; அதிக ஏழையாயிருந்த குழந்தைக்கு மட்டுமே ஒரு செவிலி இல்லை.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பாலை

ஆண் குழந்தைகளைப் பிறந்த சில காலத்துள் பாலைவனத்துக்கு அனுப்பி வைக்கும் ஒரு வழக்கம் அறாபிய நகரங்களது பெருங்குடும்பங்கள் மத்தியில் இருந்து வந்தது. இளம் பருவத்தை நாடோடிக் கோத்திரத்தாரிடையே கழிப்பதற்காக, பால் குடி மறக்கும் காலம் வரையிலும் குழந்தைகளைச் செவிலித் தாயரிடம் ஒப்படைத்து விடுவர். 

மக்க நகர் வாசிகளும் இதற்கு விதி விலக்கானவர்களல்ல. தொற்று நோய்கள் இலகுவாகப் பரவும் இடங்களுள் ஒன்றாயிருந்த மக்காவில் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகமாயிருந்தது. தமது புதல்வர்கள் பாலை நிலத்தின் தூய காற்றினை நுகரவேண்டும் என்பது மாத்திரம் அவர்களது நோக்கமாக இருக்கவில்லை. அது அவர்களது உடலுக்கு நல்லது. அதற்கும் மேலாகப் பாலை நில வாழ்வு ஆன்மாவுக்கும் பல பயன்களை நல்குவதாயமைந்தது. குறைஷியர் மிக அண்மையிலேயே நகரமைப்பிலான வாழ்வினைப் பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.


குஸை புனிதத் தலத்தினைச் சுற்றிவர வீடுகளை அமைத்துக் கொள்ளும்படி குறைஷியரை வேண்டிக் கொண்ட காலம் வரையும், அவர்கள் பொதுவாக நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். நிலையான குடியமைப்பு வசதிகள் தவிர்க்க முடியாதனவே. எனினும் அவை ஆபத்தானவையுங்கூட. தம் முன்னோர் வாழ்க்கை தான் எத்துணை பெருமை வாய்ந்ததாக இருந்தது! கூடார வாழ்க்கை எப்போதும் வேறு இடங்கள் நோக்கிய பெயர்வு. பெருமித வாழ்வும் சுதந்திரமும் இணைபிரியாது அமைந்திருந்தன.

நாடோடி எப்போதும் சுதந்திரமானவனே. பாலை நிலத்தில் மனிதன், தான் பிரபஞ்சத்தின் எஜமானன் என்ற உணர்வைப் பெற்று வந்தான். இவ்வாறானதொரு தன்மையினால் காலத்தின் ஆதிக்கம் பற்றிய உணர்விலிருந்தும் அவன் தப்பி வாழ முடிந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யானை வருடம்…(தொடர்…)

கஃபாவை அழிக்கவென மக்காவில் புகுவதும், கருமம் முடிய, வந்த வழியே ஸன்ஆவை நோக்கித் திரும்பி புறப்படுவதுமே அடுத்த நாள் காலைக்குறிய அப்ரஹாவின் திட்டமாக இருந்தது.

யானை பூரண அலங்காரங்களுடன் படையினரின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு மக்காவை நோக்கி நிறுத்தப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே தயக்கம் நிறைந்தவராக இருந்த நுபைல், படையினரின் முன்னால் உனைஸுடனேயே பெரிதும் வந்து கொண்டிருந்தார். அதனால் யானையைக் கட்டுப்படுத்தும் சொற்கள் பலவற்றையும் அவரால் கிரகித்துக் கொள்ள முடிந்தது. படை முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர் நோக்கி உனைஸ் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் நுபைல், யானையின் காதொன்றைப் பிடித்து, அதனை முழந்தாலிட்டுத் தாழ்ந்து நிற்கும்படி அமைதியான, தீர்க்கமான கட்டளையொன்றனை இட்டார். 

யானை மெதுவாக நிலத்தில் அமர்ந்து கொண்டமை அப்ரஹாவையும் படையினரையும் வியப்புக்குள்ளாக்கியது. உனைஸ் எழுந்து நிற்கும்படி யானையைப் பணித்தார். ஆனால் எவ்வாறோ நுபைலின் ஆணை ஆணித்தரமாகப் பதிந்து போனதால் யானையை எவ்விதத்திலும் அசைக்க முடியவில்லை. அதனை எழுப்ப எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் வீணாயின. இரும்புப் பாளங்களினால் அதன் தலையில் அடித்தனர். இரும்புக் கொக்கிகளால் வயிற்றில் தாக்கினர். யானை அசைவதாக இல்லை; மலைபோல் அமர்ந்திருந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

யானை வருடம்
அன்றைய கால கட்டத்தில் யெமன் பிரதேசம் அபிஸீனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் அதிகாரியாக இருந்த அப்ரஹா ஓர் அபிஸீனியர்

முழு அறேபியாவினதும் யாத்திரைத் தலங்களில் உயரிடம் பெற்றிருந்த மக்காவின் மகோன்னத நிலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அப்ரஹா ஸன்ஆவில் மாபெரும் ஆலயம் ஒன்றினை நிறுவினார். ஷீபாவின் இராணியினது கைவிடப்பட்ட மாளிகைகளுள் ஒன்றிலிருந்து பளிங்குக் கற்கள் கொண்டு வரப்பட்டன. தங்கத்தாலும் வெள்ளியினாலுமான சிலுவைகள் நிறுவப்பட்டன. பிரசங்க மேடை கருங்காலியும் யானைத் தந்தங்களும் கொண்டமைந்திருந்தது.

பின்னர் அப்ரஹா தனது எஜமானனாகிய நஜ்ஜாஷிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
“ ஓ மன்னவனே! உமக்கு முன்னர் எந்தவோர் அரசனுக்கும் நிறுவப்படாததோர் ஆலயத்தை உமக்காக நான் அமைத்துள்ளேன். அறபிகளது புனித யாத்திரிகர்களை இதனை நோக்கித் திருப்பும் வரை நான் ஓய மாட்டேன்.” தனது நோக்கத்தை அவர் இரகசியமாக வைத்துக் கொள்ளவும் இல்லை. இது, ஹிஜாஸ், நஜ்த் பிரதேசங்களது அறாபிய கோத்திரத்தாரிடையே சினத்தை வளர்ப்பதாயமைந்தது. 

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தேவை ஓர் இறைதூதர்…( தொடர்…)


ஒட்டகங்களின் பலியீடுகள் அனைத்தும் முற்றுப் பெற்றதும், மீட்கப்பெற்ற தனது மகனுக்குத் தக்கவொரு துணையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார் அப்த்-அல்-முத்தலிப். தீர்க்கமான சில விசாரணைகளின் பின்னர் வஹ்ப் என்பாரின் மகள் ஆமினாவைத் தேர்ந்தெடுத்தார். குஸையின் சகோதரனான ஸுஹ்ராவின் பேரன் இந்த வஹ்ப்.

ஸுஹ்ரா கோத்திரத்துத் தலைவனாகவிருந்து சில வருடங்களின் முன்னர் மரணித்துவிட்ட வஹ்ப்பின் இடத்தைப் பெற்றுக் கொண்ட அவரது சகோதரன் வுஹைப்பின் பொறுப்பிலேயே இப்போது ஆமினா இருந்தார். வுஹைபுக்கும் ஹாலா என்ற பெயரில், திருமண வயதை எட்டிய ஒரு மகள் இருந்தார். தனது மகனுக்கு ஆமினாவை மணமுடிக்க முடிவு செய்த அப்-அல்-முத்தலிப், ஹாலாவைத் தானே மணஞ்செய்து கொள்ளவென வுஹைபை வேண்டினார். வுஹைப் இதனை ஏற்றுக் கொள்ளவே இரண்டு திருமணங்களையும் ஒரே நேரத்தில் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

Wednesday, 14 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


தேவை ஓர் இறைதூதர்…( தொடர்…)


அப்த்-அல்-முத்தலிப் நான்கு ஹனீப்களை அறிந்திருந்தார். அவர்களுள் கூடிய கொளரவம் பெற்றிருந்தவர் வரகாஹ் என்பவர்.
அஸத் கோத்திரத்தைச் சேர்ந்த நவ்பல் என்பாரின் மகன் அவர். நவ்பல் அப்த்-அல்-முத்தலிபின் தூரத்து ஒன்று விட்ட சகோதரர்களுள் ஒருவராவார். வரகாஹ் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தார்.
சமகாலக் கிறிஸ்தவரிடையே ஓர் இறைதூதர் வருவது நிச்சயம் என்ற நம்பிக்கை பரவியிருந்தது. பரந்ததொரு நம்பிக்கையாக இது இல்லாதிருந்திருப்பினும், கிழக்கத்திய கிறிஸ்தவ தேவாலயங்களின் சில பெரியார்களும், சாத்திர விற்பன்னர்களும், குறி சொல்வோரும் இவ்வாறானதொரு கருத்தை ஆதரித்து வந்தனர்.

யூதர்களைப் பொறுத்த அளவில், புதியதோர் இறைத்தூதர் வருகை பற்றிய கருத்தை ஏற்றுக் கொள்வது இலகுவாயிருந்தது. அவர்களது நம்பிக்கையின்படி இறைதூதர்களின் வரிசை மஸீஹின் வருகையோடேயே முற்றுபெறுவதனால் அவ்வாறான ஒருவரின் வருகை குறித்து யூதர்கள் அனைவரும் ஒரு மனத்தவராகவே விளங்கினர். யூதர்களின் ரப்பிகள் பலரும், ஏனைய பல சிந்தனையாளர்களும், ஏற்கனவே தம்மிடையில் ஓர் இறைதூதர் தோற்றம் பெற்றிருப்பதாகவே நம்பினர்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

தேவை ஓர் இறைதூதர்

அப்த்-அல்-முத்தலிப், ஹுபலை வழிப்பட்டவரல்ல, ஏக இறைவனையே - அல்லாஹ்வையே - அவர் வழிபாடு செய்தார். எனினும் பல தலைமுறைகளாக இறைவனின் இல்லத்தினுள்ளேயே இருந்து வந்த முஆபிய ‘ஹுபல்’ எனும் சிலை, குறைஷியரைப் பொறுத்தமட்டில் ஆன்மீக செல்வாக்கும் அருளும் நிரம்பியதொரு சின்னமாகவே விளங்கியது. புண்ணியத் தலங்களிலெல்லாம் பெருமை மிகு ஆலயத்தில் ஹுபல் நிலை பெற்றிருப்பதே ஒரு கொளரவம். வேறு பல புனிதத்தலங்கள் அறேபியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டன. இவற்றிலெல்லாம் சிறப்பு மிக்கனவாயிருந்தவை ஹிஜாஸ் பிரதேசத்தில் காணக்கிடந்த மூன்று கோயில்களாகும். ‘கடவுளின் பெண் மக்கள்’ எனக் கருதப்பட்ட அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் எனும் மூன்று சிலைகளினதும் கோவில்களே அவை.
யத்ரிபின் ஏனைய அறபிகளைப் போல அப்த்-அல்-முத்தலிபும் மனாத்தை வழிபடப் பழக்கப் பட்டிருந்தார். யத்ரிபுக்கு மேற்கே செங்கடலை ஒட்டிய குதைத் எனும் பிரதேசத்தில் இந்த மனாத்தின் கோயில் இருந்தது. குறைஷிகளுக்கு அதிக சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்தது அல்-உஸ்ஸாவின் ஆலயமாகும். இது, மக்காவிலிருந்து ஒரு நாள் ஒட்டகைப் பிரயாண தூரத்திலுள்ள நக்லா எனும் சமவெளியில் இருந்தது. இன்னுமொரு நாள் அதே திசையில் பிரயாணம் செய்தால் தாயிப் எனும் நகரை அடைய முடியும்.

வசதியான, செழுமைமிகு பிரதேசமான தாயிப், அறபியரின் பெரும் வம்சமொன்றாயிருந்த ஹவாஸின் கோத்திரத்தின் ஒரு கிளையினரான ‘தகீப்’களின் கீழ் இருந்தது. ‘தாயிப் மாது’ என வழிபடப்பட்டது ‘அல்-லாத்’. அல்-லாத்தின் சிலை செல்வம் நிறைந்ததோர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதன் காவலர்கள் என்ற வகையில் தகீப்கள் தம்மைக் குறைஷியருக்குச் சமமானவர்களாகக் கருதலாயினர்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

மகவைப் பலியிட ஒரு சபதம். ( தொடர்…)


சபதத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் குறித்து, அப்த்-அல்-முத்தலிப் தனது இல்லத்திலிருந்த பெண்களிடம் எவ்வித ஆலோசனையும் நடாத்தி இருக்க வில்லை. அதிலும் குறிப்பாக அப்த்-அல்லாஹ்வின் தாயார் பாத்திமா பாத்திமாவுடன்கூட இதுபற்றி உரையாடியிருக்கவில்லை. அவருடைய ஏனைய மனைவியர் மக்காவின் சுற்றுப்புறங்களைச் சார்ந்தோர். ஆகவே அவர்கள் மக்காவில் அதிகம் செல்வாக்கும் படைத்தோராயில்லை. ஆனால் பாத்திமாவோ குறைஷிக் குலத்தவர். பலம் வாய்ந்த மக்ஸும் கோத்திரத்தவர். தனது தாய்வழியில் அவர் குஸையின் மகன் அப்த்துடைய வழி வந்தவர். தேவையேற்படின் பாத்திமாவுக்கு உதவ அவரது உறவினர் அனைவரும் மிக அண்மையிலேயே இருந்தனர்.

அப்த்-அல்-முத்தலிபின் பத்துப் புதல்வர்களுள் ஸுபைர், அபூ தாலிப், அப்த்-அல்லாஹ் ஆகிய மூவரும் பாத்திமாவால் பெறப்பட்டவர்கள். தமது சகோதரர்களுடன் மிக்க வாஞ்ஞையுடனிருந்தவர்களான அப்த்-அல்-முத்தலிபின் ஐந்து பெண் மக்களதும் தாயார் அவர். வீட்டில் இருந்த பெண்கள் அனைவருமே வெறுமனே இருக்கவில்லை. 
எல்லாப் புதல்வர்களதும் தாய்மார் பாத்திமாவின் துணையை நாடி நின்றனர். ஏனென்றால் யாருடைய மகன் பலியிடப்படவேண்டுமென்பது அவர்களால் அறியப்பட்டிருக்கவில்லை.

குறிபார்த்து முடிந்த நிலையில் கஃபாவை சூழவர மக்கள் நிரம்பி வழியலாயினர். அப்த்-அல்-முத்தலிபும் மகன் அப்த்-அல்லாஹ்வும் மரண பயங்கரம் முகத்தில் கவிழ்ந்தவராகக் கஃபாவின் வாசலில் வந்ததும் மக்ஸூம் கோத்திரத்தாரிடையே முணுமுணுப்புகள் எழுந்தன. தமது சகோதரிகளுள் ஒருவரது மகனே பலிக்குள்ளாக வேண்டியுள்ளமையை அவர்கள் உணர்ந்தனர். 
“அந்தக் கத்தி எதற்காக?”…என்று ஒரு குரல் எழுந்தது. அதே கேள்வி மேலும் பலராலும் எழுப்பப்பட்டது. எல்லோருக்கும் பதில் தெரிந்துதான் இருந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


மகவைப் பலியிட ஒரு சபதம்.


பெருந்தன்மை, நம்பிக்கை, ஆழ்ந்த மதிநுட்பம் என்பவற்றின் காரணமாக அப்த்-அல்-முத்தலிப் குறைஷியரிடையே பெரிதும் கொளரவிக்கப் பட்டு வந்தார்.

ஆளுமை நிறையப் பெற்றதோர் அழகான ஆண் மகன் அவர்.
செல்வம் நிறைந்திருக்கப் பெற்றமையால் மிக்க அதிர்ஷ்டம் வாய்ந்தவராகவும் விளங்கினார். ஸம்ஸம் கிணற்றினை மீட்டெடுக்கும் பணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டமை இவை அனைத்தையும் விஞ்ஞியதொரு கொளரவமாக விளங்கியது.

இவ்வருட் கொடைகள் அனைத்துக்குமாக அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தி வந்தார். என்றாலும் அவரது உள்ளத்தில் எழுந்த சில எண்ணங்கள், அவருள் அமைதியிண்மையை ஏற்படுத்தின. அதுதான், ஸம்ஸம்மைத் தான் தோண்டுவதை நிறுத்தும்படி குறைஷியர் கூறியபோது - அனைத்து முயற்சிகளும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது - அவரது உள்ளத்தில் ஏற்பட்ட கவலை. இறைவன் அருளால் யாவும் நலமே முடிந்தன. என்றாலும் அதற்கு முன்னர், குழந்தைச் செல்வத்தைப் பொறுத்த மட்டில் தான் இருந்த வருமை நிலையை, ஒரேயொரு மகனை மாத்திரமே தான் கொண்டிருந்தமையை எண்ணி ஒருபோதும் அவர் கவலையுற்றதில்லை.
அப்த்-ஷம்ஸ் கோத்திரத் தலைவரும், அப்த்-அல்-முத்தலிபின் ஒன்றுவிட்ட சகோதரருமான உமையா பல புதல்வர்களைப் பெற்றிருந்தார். மக்ஸூம் கோத்திரத்து முஙீரா ஸம்ஸம்மைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அவரது புதல்வர்கள், பரந்த பலம் வாய்ந்ததோர் வட்டத்தராக அவரைச் சுற்றி அமைந்திருப்பர். ஆனால் அப்த்-அல்-முத்தலிபோ ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்த போதும் ஒரே ஒரு மகனையே பெற்றிருந்தார். இவ்வெண்ணம் அவரை வாட்டியது. என்றாலும் கூட, ஸம்ஸம்மை அளித்த இறைவன் நிச்சயமாக ஏனைய வழிகளிலும் தனக்கு ஆதரவு அளிப்பான் என்ற நம்பிக்கை அவருள்ளத்தில் இருந்தது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இழப்பின் மீட்பு

கஃபாவின் வடமேற்குப் பகுதியை அண்மியதாக, அரைவட்ட வடிவானதொரு சுவரினால் மறைக்கப்பட்டதோர் இடம் காணப்படுகிறது. வடக்கும் மேற்கும் நோக்கியனவாக இச்சுவற்றின் இரு முனைகளும் யாத்திரிகர்கள் செல்வதற்கு வசதியாக இடைவெளி கொண்டமைந்துள்ளன. எனினும் பெரும்பாலான யாத்திரிகர்கள் தாழ்வான அச்சுவர்களைச்சுற்றி வந்து அடைக்கப்பட்ட அவ்விடத்தையும் தாம் வலம் வரும் பிரதேசத்திற்குட்படுத்திச் செல்வர். இந்த இடம் ஹிஜ்ர் இஸ்மாயீல் என வழங்குகின்றது. இதன் அடித்தளத்திலேயே இஸ்மாயீல் நபியவர்களதும் ஹாஜராவினதும் அடக்கஸ்த்தலங்கள் அமைந்துள்ளன.

கஃபாவை அண்மியிருப்பதில் அளவிறந்த விருப்பம் கொண்டிருந்த அப்த்-அல்-முத்தலிப், சிலபோது ஹிஜ்ரின் மீதாக படுக்கை விரிப்பொன்றனைப் போட்டு சாய்ந்திருப்பார். இவ்வாறு அவர் சாய்ந்திருந்த போது ஒரு நாள், அவரது கனவில் ஒரு நிழலுருவம் தோன்றி,…‘இனிய தெளிவினைத் தோண்டுவீராக’…எனக் கூறியது. ‘இனிய தெளிவு என்பது என்ன?’ அவர் வினவினார்: உருவம் மறைந்து விட்டது. 

அப்த்-அல்-முத்தலிப் எழுந்திருந்த போது, அமைதியும் மகிழ்வும் அவர் உள்ளத்தை நிறைந்திருக்கவே, அடுத்த இரவையும் அதே இடத்திலேயே கழிப்பதென முடிவு செய்து கொண்டார். அன்றும் அதே உருவம் தோன்றி, ‘அருட் கொடையைத் தோண்டுவீராக’…என்றது. அது என்னவென்று அப்த்-அல்-முத்தலிப் வினவியும் பதில் கிடைக்கவில்லை. மூன்றாம் இரவு ‘செல்வம் நிறைந்த புதையலைத் தோண்டுவீராக’…எனக் கட்டளை பிறந்தது. அப்போதும் அவர் கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை. நான்காம் இரவு ‘ஸம்ஸம்மைத் தோண்டுவீராக!’ என ஒலியெழுந்தது. “ஸம்ஸம் என்றால் என்ன?”…என்ற அவருடைய கேள்விக்கு இப்போது பதில் கிடைத்தது.
“ஸம்ஸம்மைத் தோண்டுவீராக! நீர் நஷ்டமடைய மாட்டீர். அது மிகப் பெரிய முன்னோரிடமிருந்து உமக்குக் கிடைத்த சொத்தாகும். அது ஒரு நாளும் வரண்டு போகாது. வந்து சேரும் யாத்திரிகர்களுக்கு தண்ணீர் கொடாமலும் விடாது". அத்தோடு அவ்வுருவம், இரத்தமும் மிருக சாணமும் எறும்புப்புற்றும் கொண்ட, அண்டங்க்காக்காய்கள் கொத்தித் தின்னும் இடமான ஒரு பகுதியை குறிப்பாகச் சுட்டியது. இறுதியில் இறைவனின் யாத்திரிகர்கள் தமது யாத்திரைக் காலங்கள் முழுவதும் பெற்றுக் கொள்ளக் கூடிய தெளிவான தண்ணீரைத் தந்தருளும்படி இறைவனைப் பிரார்த்தனைப் புரியும் படியும் அவ்வுருவம் அப்த்-அல்-முத்தலிபை வேண்டியது.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குழிவின் குறைஷியர்…(தொடர்…2)

ஹாஷிமுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் இருந்தனர். அப்த்-ஷம்ஸ், முத்தலிப் என்பன அவர்கள் பெயர்கள். உடன் பிறவாச் சகோதரர் ஒருவர் - நவ்பல்.

அப்த்-ஷம்ஸ் யெமனுடனான வர்த்தக நடவடிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு காட்டி வந்தார். பின்னர் ஸிரியாவிலும் இவரது கவனம் சென்றது.
நவ்பல் ஈராக்குடனான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். எனவே இவ்விருவரும் மக்காவுக்கு வெளியேயே நீண்ட காலங்களைக் கழித்து வரலாயினர். இதனாலும் வேறு பல காரணங்களினாலும் ஹாஷிமின் இளைய சகோதரரான முத்தலிபின் மீதே யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் கடமையும், அவர்களுக்கு உணவு வசதியளிக்கவென வரிகள் அறவிடும் பொறுப்பும் சுமத்தப்பட்டன. தனக்குப் பின்னர் இப்பொறுப்புகளை ஏற்று நடாத்தக் கூடிய ஒருவரைத் தெரிந்து கொள்வதில் முத்தலிப் கவனம் செலுத்த வேண்டுமளவுக்குக் காலம் கழிந்து விட்டது.

ஹாஷிம், ஸல்மா தவிர்ந்த ஏனைய மனைவியர் மூலம் மூன்று புதல்வர்களைக் கொண்டிருந்தார். என்றாலும், தெரிய வந்துள்ளன அனைத்தும் உண்மையாயின, இவர்கள் எவருமே, ஏன், முத்தலிபின் புதல்வர்கள் கூட, ஸல்மாவின் மகனுக்கு ஈடானவர்களாக அமையவில்லை.
ஸல்மாவின் மகன் ஷய்பா, இள வயதிலேயே தளமைத்துவ தகுதிகள் கொண்டவராக விளங்கியமையால், அவர் குறித்த செய்திகள், புகழுரைகளாகவே, யத்ரிபிலிருந்து மக்காவுக்கு அடிக்கடி வரலாயின. யத்ரிப் ஊடாக வரும் பிரயாணிகள் ஷய்பா குறித்து கொண்டு வந்த செய்திகள் உன்னதமானவையாயிருந்தன.
யத்ரிப் சென்ற முத்தலிப் நேரடியாகவே நிலைமைகளை அவதானித்து, மனமகிழ்ந்தவராய், தனது சகோதரரின் மகனைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி ஸல்மாவை வேண்டினார். மகனை மக்காவுக்கு அனுப்ப ஸல்மா விரும்பவில்லை. தாயாரின் அனுமதியின்றி யத்ரிபை விட்டும் நீங்க மகன் விரும்பவில்லை.
என்றாலும் முத்தலிப் தன் நோக்கத்தில் தளர்ந்துவிடாதவராக அவ்விருவருடனும் வாதாடலானார். யத்ரிபிலிருந்து ஷய்பா பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகளைவிட, மக்க நகர் பெருமளவு நன்மைகளை அளிக்கும் என்றார் அவர்.

Saturday, 3 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

குழிவின் குறைஷியர்…(தொடர்…)

யாதிரிகர்களை உபசரிக்கும் பொறுப்பினை ஹாஷிமிடமே அவரது சகோதரர்கள் ஒப்படைத்தனர். புனித யாத்திரைக் காலம் ஆரம்பமாகுமுன்னர் ஆலோசனா மன்றத்தில் ஹாஷிம் எழுந்து கூறுவார்:
“ஓ குறைஷிக் குலத்தோரே! நீங்கள் இறைவனின் அயலவர்கள். இறைவனின் இல்லத்தைச் சேர்ந்தவர்கள். யாத்திரைக் காலத்தில் இறைவனின் விருந்தினர்கள் அவனது இல்லத்தை தரிசிக்கவென உங்களிடம் வருவார்கள். உங்கள் பெருந்தன்மை மீது இறைவனின் விருந்தினர்கள் கொண்டுள்ள உரிமைகள் வேறு எந்த விருந்தினர்க்கும் இருக்க முடியாதவை. எனது செல்வத்தின் மூலம் இப்பொறுப்பை நான் நிறைவேற்றி வைக்க முடியுமாயின், நிச்சயமாக உங்கள் மீது இப்பளுவச் சுமத்த மாட்டேன்.” - இப்னு இஸ்ஹாக் 87

மக்காவுக்கு வெளியேயும் கூட ஹாஷிம் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். மாரி காலத்தில் யெமன் நோக்கியதும், கோடைக் காலத்தில் வடமேற்கு அறேபியாவை நோக்கியதுமான இரு வர்த்தக பிரயாணங்களை ஒழுங்கு படுத்தியமைத்தவரும் இவரே.
கோடைக் கால வர்த்தக மார்க்கம் பாலஸ்தீன், ஸிரியா வரை நீண்டு சென்றது. அக்காலத்தில் ரோமப் பேரரசின் பைஸாந்திய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது ஸிரியா. இரு மார்க்கங்களும் பண்டைய வாசனைத் திரவிய மார்க்கத்தை அண்மியவனவாக அமந்திருந்தன.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்


குழிவின் குறைஷியர்


இப்றாஹீம் நபியவர்களுடைய வம்சாவளியில் எழுந்த மற்றுமொரு பலம் வாய்ந்த குலம் குறைஷ் ஆகும். கிறிஸ்துவுக்குப் பின் சுமார் நான்கு நூற்றாண்டுகள் கழிந்து குறைஷிக் குலத்தில் வந்த குஸை என்பார், குஸாஅ குலத்தின் தலைவராயிருந்த ஹுலைல் என்பாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அறபு மக்களிடையே மிக்க கெளரவமும் செல்வாக்கும் வாய்ந்த வராகக் குஸை விளங்கவே, ஹுலைலும் தன் சொந்த மக்களைப் பார்க்கிலும் மருமகனையே மிகவும் நேசித்தார். ஹுலைலின் மரண்த்தின் பின்னர் தலைமைப் பீடத்துக்கெனப் பெரியதொரு போட்டி நடந்தது. சமாதான உடன்படிக்கையில் முடிந்த அப்போராட்டத்தின் பின்னர், குஸையே மக்காவின் ஆட்சியாளராகவும் கஃபாவின் பாதுகவலராகவும் விளங்கலானார்.




ஆட்சிப் பொறுப்பினையேற்ற குஸை, தனது நெருங்கிய உறவினரான குறைஷிகளை அழைத்து வந்து புனிதத் தலத்தை அண்மிய பகுதிகளில் குடியமர்த்தினார். அவரது சஹோதரன் ஷுஹ்ரா, மாமனார் தையிம், மற்றுமொரு மாமனாரின் மகன் ம்க்‌ஹும் ஆகியோருடன் மேலும் சில ஒன்றுவிட்ட சகோதரர்களும் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். இவர்களும் இவர்களது வழி வந்தோரும் குழிவின் குறைஷியர் என அழைக்கப்பட்டனர்.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

பேரிழப்பு .....  4


இப்றாஹீம் நபியவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது. அறேபியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும், ஏனைய பிரதேசங்களிலிருந்தும் மக்காவை நோக்கி வந்த ஏராளமான யாத்திரிகர்கள் பெறுமதியான அன்பளிப்புகளையும் காணிக்கைகளையும் தொடர்பறாது கொண்டு வந்தார்கள். பெரு யாத்திரை வருடமொரு முறையே மேற்கொள்ளப்பட்டது. எனினும் எந்த நேரத்திலும் சிறு யாத்திரை மேற்கொண்டு கஃபாவை தரிசனம் செய்து கொளரவிக்க முடிந்தது.

இந்த வழக்கங்கள், இப்றாஹீமும் இஸ்மாயீலும் இயற்றிய கட்டளைக்கிணங்க ஆர்வத்தோடும் பூரண மனதுடனும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. 

இப்றாஹீம் நபியவர்களால் உயர்த்தப்பட்ட வணக்கஸ்தலம் என்றதனால் இஸ்ஹாக்கின் வழிவந்தோரும் கஃபாவை தரிசனம் செய்தார்கள். அவர்களுக்கு இது சேய்மையிலிருக்கும் தேவ வாசஸ்தலங்களில் ஒன்றாகவே விளங்கியது. 


நூற்றாண்டுகள் பல கழிய, தனியோர் இறைவனையே வணங்கும் தூய்மையான வழிபாட்டு முறை கறை படத் தொடங்கிற்று.

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இறைவனின் இல்லம் (தொடர்…) 3

இரு ஆன்மீக இயக்கங்களும், இரு வேறு மார்க்கங்களில், இறைவனுக்கான இரு வேறு லோகங்களாக, இரண்டு வட்டங்களில் செயல்பட வேண்டியிருந்தன. எனவே இரு மத்தியத்தலங்கள் அவசியம். மனிதனது தெரிவினால் எந்த ஓர் இடமும் புனிதம் பெற்று விடுவதில்லை. இறைவனின் தெரிவினாலேயே புனிதத்துவம் ஏற்படுகின்றது.

இப்றாஹீம் நபியின் வட்டத்துக்குள்ளும் இரு புனித மத்தியத்தலங்கள் இருந்தன. ஒன்று அவர் ஏற்கனவே அறிந்திருந்தது. மற்றது இன்னும் அவரால் அறியப்படாததாக இருந்தது. இன்னமும் அறியப்படாதிருந்த அப்புனிதத்தலத்தை நோக்கியே ஹாஜராவும் இஸ்மாயீலும் வழி நடாத்தப்பட்டனர்.


கன்ஆனிலிருந்து நாற்பது நாற்களலவு நீடிக்கும் ஒட்டகைப் பிரயாண தூரத்தில் அறேபியாவின் வரண்ட சமவெளியொன்றனை நோக்கி அவர்கள் செல்லலானார்கள். அந்த வெளி ‘பக்கா’ என வழங்கி வந்தது. அதன் குறுகிய அமைப்பின் காரணமாகவே அவ்வாறு பெயர் வழங்கியதென்பர் சிலர். மூன்று இடைவெளிகளைத் தவிர்த்து மலைகளால் சூழப்பெற்ற பிரதேசம் அது. வடக்கு, தெற்குப் பிரதேசங்களை நோக்கியன இரண்டு இடைவெளிகள்.

மேற்குப் பிரதேசத்தை நோக்கியது அடுத்தது. மேற்குப்புற இடைவெளியூடாகச்சென்றால், சுமார் ஐம்பது மைல்கள் தூரத்தில் செங்கடலைக் காணலாம். ஹாஜராவும் இஸ்மாயீலும் எவ்வாறு பக்கா வெளியை அடைந்தனர் என ஆகமங்கள் கூறவில்லை.

Friday, 2 November 2012

மு ஹ ம் ம த் - صلى الله عليه وسلم - இறைவனின் இறுதித் தூதர்

இறைவனின் இல்லம் (தொடர்…) 2

சிறுவர் தனது பதின்மூன்றாம் வயதை அடைந்தபோது இப்றாஹீம் தனது நூறாவது வயதிலும், ஸாரா தொண்ணூறாவது வயதிலும் இருந்தனர். 
இறைவன் மீண்டும் இப்றாஹீமுடன் உரையாடி ஸாராவும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வாக்களித்து, அம்மகனுக்கு இஸ்ஹாக் எனப் பெயரிடும்படி கூறினான். இறைவனிடம் தனது மூத்த மகன் பெற்றிருந்த உன்னத நிலை குலைந்து விடுமோ என்றஞ்சிய இப்றாஹீம் ‘ஓ! இஸ்மாயீல் உனக்கு முன்பாகப் பிழைப்பானாக! ' எனப் பிரார்த்தித்தார். இறைவன் கூறினான்: இஸ்மாயீலுக்காக நீர் செய்த பிரார்த்தனையை நான் கேட்டேன். நான் அவரை ஆசீர்வதித்துள்ளேன்……

அவரது சந்ததியார் அதிகமாகப் பல்கவும் பெருகவும் பண்ணுவேன்…… வருகிற வருஷம் இதே காலம் ஸாரா உமக்குப் பெறப்போகிற ‘இஸ்ஹாக்’கோடு எனது வாக்கினை நான் உறுதிப்படுத்துவேன்.