“ எச்சரிக்கை செய்வீராக ”
இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளப் பகிரங்கமான அழைப்புகள் ஏதும் இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும் பக்தியுணர்வுமிக்க விசுவாசிகளதும், தொழுகையாளர்களதும் எண்ணிக்கை பெருகிச் சென்று கொண்டிருந்தது. இருபாலருமான அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களாகவே விளங்கினர். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் போக, ஆரம்ப விசுவாசிகளுள் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்களான ஜஅபரும் ஸுபைரும் அடங்குவர். பின்னர் நபிகளாரதும், விசுவாசிகளனதும் உடன் பிறவாச் சகோதரர்கள் பலர் இணைந்து கொள்ளலாயினர் : நபிகளாரின் மாமியாரான உமைமாவின் புதல்வர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ், அவரது சகோதரர் உபைத்-அல்லாஹ். மற்றுமொரு மாமியாரான பர்ராவின் மகன் அபூஸலமா ஆகியோர் அவர்கள். நபிகளாரின் தாயார் வழியிலான உடன் பிறவாச் சகோதரர்களும் சேர்ந்திருந்தனர் : ஸுஹ்ரா கோத்திரத்தின் அபூவக்காஸின் மகன் ஸஅத், அவரது இளைய சகோதரர் உமைர் ஆகியோர் அவர்கள். எனினும் நபிகளாரது தந்தையாரது சகோதரர்களுள் நால்வருள் எவருமே அன்னாரது தூதினை ஏற்க முன்வரவில்லை. அபூதாலிப் தனது இரு புதல்வர்களான ஜஅபரும் அலீயும் புதிய மதத்தினை பின்பற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாயினும், தனது மூதாதையரின் சமய நம்பிக்கைகளைக் கைவிட அவர் தயாராக இல்லை. அப்பாஸ் நழுவும் வகையில் பேசினார். ஹம்ஸா இதனை விளங்கிக் கொள்ள முடியாதவராயிருந்தார். என்றாலும் அப்பாஸும் ஹம்ஸாவும் தனிப்பட்ட முறையில் நபிகளாரின் மீதான தமது நெருங்கிய பந்தத்தை உறுதிப்படுத்தி நின்றனர். ஆனால் அபூலஹப் நேரடியாக, தனது சகோதரரின் மகன் ஒன்றில் தன்னைத் தான் ஏமாற்றிக் கொண்டுள்ளார் அல்லது பிறரை ஏமாற்றி வருகின்றார் என்ற தனது நம்பிக்கையை பகிரங்கமாகவே பேசி வந்தார்.

“ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ” - குர்ஆன்: 26:214
என்ற இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர் நபிகளார் அலீயை அழைத்து :
இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ளப் பகிரங்கமான அழைப்புகள் ஏதும் இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும் பக்தியுணர்வுமிக்க விசுவாசிகளதும், தொழுகையாளர்களதும் எண்ணிக்கை பெருகிச் சென்று கொண்டிருந்தது. இருபாலருமான அவர்களுள் பெரும்பாலோர் இளைஞர்களாகவே விளங்கினர். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் போக, ஆரம்ப விசுவாசிகளுள் நபிகளாரின் உடன் பிறவாச் சகோதரர்களான ஜஅபரும் ஸுபைரும் அடங்குவர். பின்னர் நபிகளாரதும், விசுவாசிகளனதும் உடன் பிறவாச் சகோதரர்கள் பலர் இணைந்து கொள்ளலாயினர் : நபிகளாரின் மாமியாரான உமைமாவின் புதல்வர் அப்த்-அல்லாஹ்-இப்ன்-ஜஹ்ஷ்,

“ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ” - குர்ஆன்: 26:214
என்ற இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர் நபிகளார் அலீயை அழைத்து :